என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நள்ளிரவில் கணவன் வீட்டின் முன் பெண் தர்ணா
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த மேல் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் அரசு பஸ் டிரைவர் இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக குடியாத்தம் அடுத்த எஸ்.மோட்டூர் கிராமத்தை சேர்ந்த சசிகலா (வயது 27) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
திருமணம் முடிந்து 8 மாதங்கள் மட்டுமே சசிகலா கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவருக்கும் இடையே ஏற்ப்பட்ட கருத்து வேறுப்பாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இதன் சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு நடைப்பெற்று வருவதாகவும் கூறுகின்றனர். இந்நிலையில் சசிகலா நேற்று இரவு தன்கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என மேல்பள்ளிப்பட்டில் இருக்கும் அவரின் கணவர் வீட்டிற்கு சென்று என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த பிரபாகரனின் பெற்றோர், கோர்ட்டில் வழக்கு முடிவுக்கு வரட்டும் அப்பறம் ஏற்றுக்கொள்கின்றோம் என்றனர். இதனால் அவர் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுப்பட்டார். தகவலறிந்து வந்த வேப்பங்குப்பம் போலீசார் அப்பெண்ணிடம் பேசசுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்