search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் உடல்"

    • உயிரிழந்த பெண்ணின் தலை, சில உடல் பாகங்கள் மீட்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டெல்லியில் கீதா காலனியில் உள்ள மேம்பாலம் அருகே புதர்மண்டி கிடந்த பகுதியில் மனித உடல் பாகங்கள் கிடந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது ஒரு பெண்ணின் உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் கிடந்தது. சில உடல் பாகங்ககளை அங்குள்ள வனப் பகுதியில் தேடி வருகிறார்கள்.

    இதற்காக மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணி நடந்தது. உயிரிழந்த பெண்ணின் தலை, சில உடல் பாகங்கள் மீட்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடலில் குளிக்கும் போது ராட்சத அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி இறந்தாரா?
    • யாராவது கொலை செய்து கடலில் பிணத்தை வீசினார்களா?

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடல் பகுதியில் இன்று காலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிணம் மிதந்தது. அவர் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவில்லை. இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவர் கடலில் குளித்து தற்கொலை செய்தாரா? அல்லது கடலில் குளிக்கும் போது ராட்சத அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு எங்காவது இருந்து கடல் அலையில் இழுத்து வரப்பட்டாரா? அல்லது அவரை யாராவது கொலை செய்து கடலில் பிணத்தை வீசினார்களா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தற்கொலை செய்த பெண்ணின் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிக்கப்பட்டது.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கே.சென்னம்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி முத்துமாரி (வயது45). இவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசுக்கு தகவல் அளிக்காமல் பெண்ணின் உடலை உறவினர்கள் எரித்து விட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த கே.சென்னம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ஜெயா பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது ஜெயாவிற்கு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு இருந்து வந்ததும், பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணம டையாததால் மனவிரக்தியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

    இருப்பினும் அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் தகவல் அளிக்காமல் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை எரித்தது குறித்து கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் ஜெயா புகார் செய்தார். அதன்பேரில் முத்துமாரியின் கணவர் வேல்முருகன், அவரது தந்தை பாண்டி, உறவினர்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×