search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூக்களின்"

    • சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, பனமரத்துப்பட்டி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
    • சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (கிலோ கணக்கில்) : குண்டு மல்லி - ரூ.400,

    சேலம்:

    சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, பனமரத்துப்பட்டி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கும், ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. வருகிற 6 ந் தேதி புதன்கிழமை கிருஷ்ண ஜெயந்தி, தொடர்ந்து 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வருவதையொட்டி சேலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு குண்டு மல்லி கிலோ ரூ.250, ரூ.300 என்கிற விலைகளில் விற்கப்பட்டது. ஆனால் இன்று குண்டு மல்லி கிலோ ரூ.400- க்கு விற்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது பண்டிகை சீசன் என்பதால் பூக்கள் விலை சற்று உயர்ந்து உள்ளது. ஒரு சில ரகங்கள் விலை குறைந்தும் உள்ளன. சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (கிலோ கணக்கில்) : குண்டு மல்லி - ரூ.400, முல்லை - ரூ.240, ஜாதி மல்லி - ரூ.260, காக்கட்டான் - ரூ.100, கலர் காக்கட்டான் - ரூ.100, மலை காக்கட்டான்- ரூ.100, சி.நந்தியா வட்டம் - ரூ.200, சம்மங்கி - ரூ.100, சாதா சம்மங்கி - ரூ.100, அரளி - ரூ.40, வெள்ளை அரளி - ரூ.60, மஞ்சள் அரளி - ரூ.60, செவ்வரளி - ரூ.80, ஐ.செவ்வரளி - ரூ.50, நந்தியா வட்டம் - ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் 2 பூ மார்க்கெட்டிற்கு தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர்.
    • பூக்களை ஏலம் எடுத்துச் செல்வதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து வியாபாரிகள் வந்திருந்து பூக்களை ஏலம் எடுத்து செல்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா

    பகுதியில் உள்ள தண்ணீர் பந்தல், ஆனங்கூர், பாகம்பாளையம், சின்ன மருதூர், பெரிய மருதூர், செல்லப்பம்பாளையம், சானார்பாளையம், நகப்பாளையம், பரமத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை, சம்பங்கி, சாமந்தி, அரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

    பூக்கள் பூக்கும் தருவாயில் வந்த போது கூலி ஆட்கள் மூலம் பூக்களை பறித்து லேசான கோணி பைகளில் போட்டு உள்ளூர் பகுதி களுக்கு வரும் வியாபாரி களுக்கும், பரமத்தி வேலூ ரில் செயல்பட்டு வரும் 2 பூ மார்க்கெட்டிற்கு தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர் . பூக்களை ஏலம் எடுத்துச் செல்வதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து வியாபாரிகள் வந்திருந்து பூக்களை ஏலம் எடுத்து செல்கின்றனர்.

    வாங்கிய உதிரிப் பூக்களை பல்வேறு ரகமான மாலை களாகவும் ,தோரணங்களா கவும் கட்டி விற்பனை செய்கின்றனர். சில வியா பாரிகள் உதறிப் பூக்களை பிளாஸ்டிக் கவரில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு சென்று பாக்கெட்டுகளாக விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த சில வாரங்களாக பூக்களின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகி றது. தற்போது பூக்களின் விளைச்சல் அதிகரித்துள் ளது. அதனால் பரமத்தி வேலூர் பூ ஏல மார்க்கெட்டிற்கு பூக்களின் வரத்து அதிகமானது.

    நேற்று நடத்த ஏலத்தில், கடந்த வாரம் 600 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ குண்டுமல்லி 300 ரூபாய்க்கும், கடந்த வாரம் 280 ரூபாய்க்கு விற்பனை யான சம்பங்கி 120 ரூபாய்க்கும், 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி 80 ரூபாய்க்கும் விற்பனையானது.

    அதேபோல் ஒரு கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்திப்பூ 100 ரூபாய்க்கும், 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லைப்பூ கிலோ 260 ரூபாய்க்கும் விற்பனை யானது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதா வது:- கடந்த வாரம் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கணிசமாக உயர்ந்தது. பண்டிகை முடிந்ததால் பூக்களின் விலை குறைந்தது. மேலும் இப்போது வெயில் சுட்டெ ரிப்பதால், பூக்களின் விளைச்சல் அதி கரித்துள்ளது.

    வெயில் அதிகமாக அடிக்கும்போ து, பூக்களின் விளைச்சல் அதிகரிக்கும். அதனால், தற்போது பூக்களின் வர த்து அதிகமாகியுள்ளது. தற்பொழுது ஆடி மாதம் என்பதால் திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் இல்லாமல் பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. வரும் ஆவணி மாதம் சுப முகூர்த்த நாட்களில், பூக்களின் விலை அதி கரிக்கும் என எதிர்க்கப் படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கோடை காலம் துவங்கியவுடன் பூக்கள் விளைச்சல் அதிகரிக்கும். அதனால் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது.
    • வரும் காலங்களில் குண்டு மல்லிகை பூ மேலும் விலை சரிவடையும்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா தண்ணீர் பந்தல், ஆனங்கூர், சின்னமருதூர் நகப்பாளையம், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை, காக்கட்டான், சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.

    இந்த பூக்களை உள்ளூர் பகுதி வியாபாரிகளுக்கும், பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் 2 பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    பூக்களை ஏலம் எடுப்பதற்கு கரூர் மற்றும் நாமக்கல் மாவட்ட பகுதியினை சேர்ந்த பூ வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுப்படி யாகும் விலைக்கு பூக்களை ஏலம் எடுத்து செல்கின்றனர்.

    கடந்த சில வாரங்களாக பூக்கள் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. கோடை காலம் தொடங்கி, வெயில் அதிகரித்துள்ளதால் தற்போது பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ குண்டுமல்லிகை ரூ.600-க்கும், முல்லை ரூ.600க்கும், காக்கட்டான், ரூ.500க்கும், சம்பங்கி ரூ.200-க்கும், அரளி ரூ.200-க்கும், சாமந்திப்பூ ரூ.150 -க்கும், ரோஜா ரூ.200க்கும், செவ்வந்தி ரூ.250-க்கும் விற்பனையானது.

    நேற்று ஒரு கிலோ குண்டுமல்லிகை ரூ.300-க்கும், முல்லை ரூ.300க்கும், காக்கட்டான் ரூ.200க்கும், சம்பங்கி ரூ.70-க்கும், அரளி ரூ.80-க்கும், சாமந்திப்பூ ரூ.80-க்கும், ரோஜா ரூ.150-க்கும், செவ்வந்தி ரூ.150-க்கும் விற்பனையானது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கோடை காலம் துவங்கியவுடன் பூக்கள் விளைச்சல் அதிகரிக்கும். அதனால் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் குண்டு மல்லிகை பூ மேலும் விலை சரிவடையும்.

    கடந்த ஜனவரி மாதத்தில் குண்டு மல்லிகை பூ கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்போது கிலோ 300 ரூபாயாக சரிந்துள்ளது.

    • சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் ஆயுதபூஜை, நேற்று விஜயதசமி விழா கோலகலமாக கொண்டா டப்பட்டது.
    • இதை தொடர்ந்து சேலத்தில் மார்க்மகெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.500-க்கு விற்பனை

    சேலம், அக்.6-

    சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் ஆயுதபூஜை, நேற்று விஜயதசமி விழா கோலகலமாக கொண்டா டப்பட்டது. கோவில்களில் சாமிக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம், பூைஜ கள் செய்யப்பட்டது. வீடு கள், நிறுவனங்களில் சாமி படங்களுக்கு மலர்க ளால் அலங்காரம் செய்யப்பட்டது.

    மேலும் கோவில்களில் வழிபட பூக்கள் அதிக அளவில் பொதுமக்கள் வாங்கிச்சென்றனர். இதனால் ஆயுத பூைஜ, சரஸ்வதி பூைஜயை முன்னிட்டு பூக்களில் விலை பல மடங்கு அதிகமாக இருந்தது. குறிப்பாக ஒரு கிலோ குண்டு மல்லிகை பூ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இன்று பூக்கள் விலை பாதியாக குறைந்துள்ளது. சேலம் வ.உ.சி. மார்க்கெட், பழைய பஸ் நிலையத்தையொட்டி உள்ள பூ மார்க்கெட்டுகளில் பூக்களில் விைல விபரம் வருமாறு-

    குண்டு மல்லிகை பூ- ரூ.500, முல்லை- ரூ.360, ஜாதி மல்லிகை- ரூ.280, காக்காட்டான்- ரூ.240, கலர் காக்கட்டான் - ரூ.200, சம்மங்களி - ரூ.70, சாதா சம்மங்கி- ரூ.70, அரளி - ரூ.60, வெள்ளை அரளி - ரூ.60, மஞ்சள் அரளி - ரூ.60, செவ்வரளி- ரூ.80, ஐ.செவ்வரளி- ரூ.80, நந்தியாவட்டம் - ரூ.15, சி.நந்திவட்டம் - ரூ.15.

    • திருமண விழாக்கள் இல்லாததால் குண்டுமல்லிகை கிலோ ரூ.200 ஆக சரிந்துள்ளது.
    • அதேபோல் கோவில் திருவிழாக்கள் இல்லாததால் பூக்களின் தேவை குறைந்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் குண்டு மல்லிகை, சன்னமல்லிகை, கனகாம்பரம், அரளி, சம்பங்கி உள்பட பல வகையான பூக்கள் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.

    இப்பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூக்கள் சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

    தற்போது தேய்பிறை முகூர்த்தம் என்பதால் திருமணங்கள் எதிர்பார்த்த அளவில் இல்லை. அதேபோல் கோவில் திருவிழாக்கள் இல்லாததால் பூக்களின் தேவை குறைந்துள்ளது. இதனிடையே பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பூக்களின் விலை சரிந்துள்ளது.

    குண்டு மல்லிகை பூ கிலோ ரூ.200 -க்கு சரிந்துள்ளது. அதேபோல் சன்னமல்லிகை கிலோ ரூ.160, ஜாதி மல்லிகை ரூ.200, காக்கட்டான் ரூ.80, கலர் காக்கட்டான் ரூ.60, அரளி ரூ.25, வெள்ளை அரளி ரூ.40, மஞ்சள் அரளி ரூ.40, செவ்வரளி ரூ.40, நந்தியாவட்டம் ரூ.20, சிறிய நந்தியாவட்டம் ரூ.20, சாமந்தி ரூ.80 முதல் ரூ.120, சம்பங்கி ரூ.10, சாதா சம்பங்கி ரூ.25 என விற்கப்படுகிறது.

    ×