பூக்களின் விலை பாதியாக சரிந்தது

சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் ஆயுதபூஜை, நேற்று விஜயதசமி விழா கோலகலமாக கொண்டா டப்பட்டது. இதை தொடர்ந்து சேலத்தில் மார்க்மகெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.500-க்கு விற்பனை
பூக்களின் விலை பாதியாக சரிந்தது
Published on

சேலம், அக்.6-

சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் ஆயுதபூஜை, நேற்று விஜயதசமி விழா கோலகலமாக கொண்டா டப்பட்டது. கோவில்களில் சாமிக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம், பூைஜ கள் செய்யப்பட்டது. வீடு கள், நிறுவனங்களில் சாமி படங்களுக்கு மலர்க ளால் அலங்காரம் செய்யப்பட்டது.

மேலும் கோவில்களில் வழிபட பூக்கள் அதிக அளவில் பொதுமக்கள் வாங்கிச்சென்றனர். இதனால் ஆயுத பூைஜ, சரஸ்வதி பூைஜயை முன்னிட்டு பூக்களில் விலை பல மடங்கு அதிகமாக இருந்தது. குறிப்பாக ஒரு கிலோ குண்டு மல்லிகை பூ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று பூக்கள் விலை பாதியாக குறைந்துள்ளது. சேலம் வ.உ.சி. மார்க்கெட், பழைய பஸ் நிலையத்தையொட்டி உள்ள பூ மார்க்கெட்டுகளில் பூக்களில் விைல விபரம் வருமாறு-

குண்டு மல்லிகை பூ- ரூ.500, முல்லை- ரூ.360, ஜாதி மல்லிகை- ரூ.280, காக்காட்டான்- ரூ.240, கலர் காக்கட்டான் - ரூ.200, சம்மங்களி - ரூ.70, சாதா சம்மங்கி- ரூ.70, அரளி - ரூ.60, வெள்ளை அரளி - ரூ.60, மஞ்சள் அரளி - ரூ.60, செவ்வரளி- ரூ.80, ஐ.செவ்வரளி- ரூ.80, நந்தியாவட்டம் - ரூ.15, சி.நந்திவட்டம் - ரூ.15.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com