search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "of flowers"

    • சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, பனமரத்துப்பட்டி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
    • சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (கிலோ கணக்கில்) : குண்டு மல்லி - ரூ.400,

    சேலம்:

    சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, பனமரத்துப்பட்டி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கும், ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. வருகிற 6 ந் தேதி புதன்கிழமை கிருஷ்ண ஜெயந்தி, தொடர்ந்து 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வருவதையொட்டி சேலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு குண்டு மல்லி கிலோ ரூ.250, ரூ.300 என்கிற விலைகளில் விற்கப்பட்டது. ஆனால் இன்று குண்டு மல்லி கிலோ ரூ.400- க்கு விற்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது பண்டிகை சீசன் என்பதால் பூக்கள் விலை சற்று உயர்ந்து உள்ளது. ஒரு சில ரகங்கள் விலை குறைந்தும் உள்ளன. சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (கிலோ கணக்கில்) : குண்டு மல்லி - ரூ.400, முல்லை - ரூ.240, ஜாதி மல்லி - ரூ.260, காக்கட்டான் - ரூ.100, கலர் காக்கட்டான் - ரூ.100, மலை காக்கட்டான்- ரூ.100, சி.நந்தியா வட்டம் - ரூ.200, சம்மங்கி - ரூ.100, சாதா சம்மங்கி - ரூ.100, அரளி - ரூ.40, வெள்ளை அரளி - ரூ.60, மஞ்சள் அரளி - ரூ.60, செவ்வரளி - ரூ.80, ஐ.செவ்வரளி - ரூ.50, நந்தியா வட்டம் - ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • உற்பத்தி அதிகரிப்பால் பூக்கள் விலை சரிவடைந் துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    • மேலும் விலை சரிவால் பூ பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை, தண்ணீர் பந்தல், சின்ன மருதூர், பெரிய மருதூர், நாக பாளையம், கண்டிபாளம், செல்லப்பம்பாளையம், பள்ளக்காடு மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம் பாளையம், நொய்யல், பேச்சிப்பாறை நடையனூர், குளத்துப்பாளையம், கொங்கு நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் குண்டு மல்லிகை, முல்லை, ரோஜா, சம்பங்கி, அரளி, சாமந்திப்பூ, செவ்வந்தி, காக்கட்டான் உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.

    இங்கு விளையும் பூக்களை உள்ளூர் பகுதி களுக்கு வரும் வியாபாரி களுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் 2 தினசரி பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    ஏலம் எடுப்பதற்கு பரமத்திவேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களைச் சேர்ந்த வியாபாரி கள் வந்திருந்து பூக்களை வாங்கி செல்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை ரூ.400-க்கும், சம்பங்கி கிலோ ரூ.60-க்கும், அரளி கிலோ ரூ.150-க்கும், ரோஜா கிலோ ரூ.240-க்கும், முல்லைப் பூ ரூ.350-க்கும், செவ்வந்திப்பூ ரூ.240-க்கும், கனகாம்பரம் ரூ.450-க்கும் ஏலம் போனது.

    நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.300-க்கும், சம்பங்கி கிலோ ரூ.30-க்கும், அரளி கிலோ ரூ.110-க்கும், ரோஜா கிலோ ரூ.200-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.300-க்கும், கனகாம்பரம் ரூ.350-க்கும் ஏலம் போனது.

    உற்பத்தி அதிகரிப்பால் பூக்கள் விலை சரிவடைந் துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் விலை சரிவால் பூ பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

    • கோடை காலம் துவங்கியவுடன் பூக்கள் விளைச்சல் அதிகரிக்கும். அதனால் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது.
    • வரும் காலங்களில் குண்டு மல்லிகை பூ மேலும் விலை சரிவடையும்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா தண்ணீர் பந்தல், ஆனங்கூர், சின்னமருதூர் நகப்பாளையம், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை, காக்கட்டான், சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.

    இந்த பூக்களை உள்ளூர் பகுதி வியாபாரிகளுக்கும், பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் 2 பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    பூக்களை ஏலம் எடுப்பதற்கு கரூர் மற்றும் நாமக்கல் மாவட்ட பகுதியினை சேர்ந்த பூ வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுப்படி யாகும் விலைக்கு பூக்களை ஏலம் எடுத்து செல்கின்றனர்.

    கடந்த சில வாரங்களாக பூக்கள் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. கோடை காலம் தொடங்கி, வெயில் அதிகரித்துள்ளதால் தற்போது பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ குண்டுமல்லிகை ரூ.600-க்கும், முல்லை ரூ.600க்கும், காக்கட்டான், ரூ.500க்கும், சம்பங்கி ரூ.200-க்கும், அரளி ரூ.200-க்கும், சாமந்திப்பூ ரூ.150 -க்கும், ரோஜா ரூ.200க்கும், செவ்வந்தி ரூ.250-க்கும் விற்பனையானது.

    நேற்று ஒரு கிலோ குண்டுமல்லிகை ரூ.300-க்கும், முல்லை ரூ.300க்கும், காக்கட்டான் ரூ.200க்கும், சம்பங்கி ரூ.70-க்கும், அரளி ரூ.80-க்கும், சாமந்திப்பூ ரூ.80-க்கும், ரோஜா ரூ.150-க்கும், செவ்வந்தி ரூ.150-க்கும் விற்பனையானது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கோடை காலம் துவங்கியவுடன் பூக்கள் விளைச்சல் அதிகரிக்கும். அதனால் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் குண்டு மல்லிகை பூ மேலும் விலை சரிவடையும்.

    கடந்த ஜனவரி மாதத்தில் குண்டு மல்லிகை பூ கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்போது கிலோ 300 ரூபாயாக சரிந்துள்ளது.

    ×