பரமத்திவேலூர் பகுதியில் பூக்களின் விலை வீழ்ச்சி

உற்பத்தி அதிகரிப்பால் பூக்கள் விலை சரிவடைந் துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் விலை சரிவால் பூ பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பரமத்திவேலூர் பகுதியில் பூக்களின் விலை வீழ்ச்சி
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை, தண்ணீர் பந்தல், சின்ன மருதூர், பெரிய மருதூர், நாக பாளையம், கண்டிபாளம், செல்லப்பம்பாளையம், பள்ளக்காடு மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம் பாளையம், நொய்யல், பேச்சிப்பாறை நடையனூர், குளத்துப்பாளையம், கொங்கு நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் குண்டு மல்லிகை, முல்லை, ரோஜா, சம்பங்கி, அரளி, சாமந்திப்பூ, செவ்வந்தி, காக்கட்டான் உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.

இங்கு விளையும் பூக்களை உள்ளூர் பகுதி களுக்கு வரும் வியாபாரி களுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் 2 தினசரி பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

ஏலம் எடுப்பதற்கு பரமத்திவேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களைச் சேர்ந்த வியாபாரி கள் வந்திருந்து பூக்களை வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை ரூ.400-க்கும், சம்பங்கி கிலோ ரூ.60-க்கும், அரளி கிலோ ரூ.150-க்கும், ரோஜா கிலோ ரூ.240-க்கும், முல்லைப் பூ ரூ.350-க்கும், செவ்வந்திப்பூ ரூ.240-க்கும், கனகாம்பரம் ரூ.450-க்கும் ஏலம் போனது.

நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.300-க்கும், சம்பங்கி கிலோ ரூ.30-க்கும், அரளி கிலோ ரூ.110-க்கும், ரோஜா கிலோ ரூ.200-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.300-க்கும், கனகாம்பரம் ரூ.350-க்கும் ஏலம் போனது.

உற்பத்தி அதிகரிப்பால் பூக்கள் விலை சரிவடைந் துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் விலை சரிவால் பூ பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com