search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிராய்லர் கோழி"

    • ஆண்களுக்கு புரோஸ்டெட் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும்.
    • இதய பிரச்சினை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

    பிராய்லர் கோழி அதிகமாக சாப்பிடுவதால் ஆண்களுக்கு புரோஸ்டெட் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும். வறுத்த கோழிகளை சாப்பிடும் போது உடலுக்கும் கெடுதல்களை ஏற்படுத்தும். இதனால் உடல் எடை அதிகரிக்கும்.

    பிராய்லர் கோழிகள் விரைவில் வளர்ச்சி அடைய அதற்கு தீவனமாக ஹார்மோன்கள் கொடுக்கப்படுகிறது. இந்த ஹார்மோன்கள் நிறைந்த பிராய்லர் கோழி இறைச்சியை சாப்பிடும் போது உடல் எடை அதிகரித்து உடல்நல பிரச்சினைகளை உண்டுபண்ணுகிறது.

    பிராய்லர் கோழியில் அதிகப்படியான கொழுப்புச்சத்துக்கள் உள்ளன. இதனை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது உடலில் கொழுப்புகள் அதிகரித்து இதய பிரச்சினை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

    பிராய்லர் கோழியில் உள்ள ரசாயனம் ஆண்களின் விந்தணுவை குறைத்து மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். இதனால் பிராய்லர் கோழியை தவிர்ப்பது நல்லது. பெண்களும் பிராய்லர் கோழி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு கருப்பையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் தான் பெண்குழந்தைகள் சிறுவயதிலேயே பருவம் அடைகின்றனர். பிராய்லர் கோழியை வறுத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வேண்டுமென்றால் அதிக எண்ணெய் இல்லாமல் சமைத்து சாப்பிடலாம்.

    குறைந்த பட்சம் 165 வெப்பநிலையில் இறைச்சியை சமைக்க வேண்டும். மேலும் பிராய்லர் கோழியில் சமைத்த உணவை மறுநாள் வைத்து சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்.

    • பிராய்லர் கோழிகள் நமக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது.
    • இரு கோழிகளில் உள்ள ஊட்டச்சத்துக்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை.

    திருப்பூர்:

    பிராய்லர் கோழிகளில் உள்ள ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.பல்லடம் பிராய்லர் கோழி கமிட்டி மற்றும் -பண்ணை கோழி விவசாயிகள் ஒழுங்குமுறை அமைப்பு சார்பில், நடந்த இக்கருத்தரங்கில் நாமக்கல் கால்நடை தீவன பகுப்பாய்வகம், கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் நடராஜன் பேசியதாவது:-

    பிராய்லர் கோழிகள் நமக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. கோழிகளின் இறைச்சி மற்றும் எடை அதிகரிப்புக்காக, ஊசி செலுத்துவது குறித்து ஒரு தவறான செய்தி பரவி வருகிறது. இதனை மக்கள் நம்ப வேண்டாம்.

    நமது குழந்தைகளுக்கு, அம்மை நோய் மற்றும் போலியோ போன்ற நோய்கள் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி செலுத்துவது போல், இந்த வகை கோழிகளுக்கும் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுகிறது.

    நாட்டுக்கோழிகளில் அதிக சத்து இருப்பதாகவும், பிராய்லர் கோழிகளில் சத்து இல்லை என்றும் மக்களிடம் நம்பிக்கை நிலவுகிறது. இரு கோழிகளில் உள்ள ஊட்டச்சத்துக்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை. நாட்டுக்கோழிகள் அதிக நாட்கள் வளரக்கூடியவை. இதனால் இதன் சுவை கூடுதலாக உள்ளது. சத்துக்களில் எந்த வித்தியாசமும் இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பிராய்லர் கோழி சாப்பிடுவதால் நமது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்ற கருத்தை பிராய்லர் கோழி பண்ணை உரிமையாளர்கள் மறுத்து வருகிறார்கள்.
    • பிராய்லர் கோழி தொடர்பாக நாடு முழுவதும் தேவையற்ற தகவல்கள் பரவி வருகின்றன.

    திருவனந்தபுரம்:

    பிராய்லர் கோழிகள் குறைந்த நாட்களில் அதிக இறைச்சியுடன் வளர்வதற்காக ஹார்மோன் ஊசி செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இவ்வாறு ஊசி போட்டு வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளை நாம் உண்ணுவதால் நமது உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது.

    நாடு முழுவதும் நிலவி வரும் இந்த கருத்தால் பிராய்லர் கோழி விற்பனை அடிக்கடி பாதிக்கப்படுகிறது. பிராய்லர் கோழி சாப்பிடுவதால் நமது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்ற கருத்தை பிராய்லர் கோழி பண்ணை உரிமையாளர்கள் மறுத்து வருகிறார்கள்.

    பிராய்லர் கோழியில் புரதச்சத்து அதிகமாக இருப்பதால், அதை உண்ணுவதன் மூலம் நமது உடலுக்கு பாதிப்பு ஏற்படாது என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த பிராய்லர் கோழி பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள், பிராய்லர் கோழிகள் ஹார்மோன் ஊசி போட்டு வளர்க்கப்படுகிறது என்பதை நிரூபித்தால், ரூ.25லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அசைவ பிரியர்கள் பிராய்லர் கோழி இறைச்சியை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் பிராய்லர் கோழி தொடர்பாக நாடு முழுவதும் தேவையற்ற தகவல்கள் பரவி வருகின்றன. அதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    பிராய்லர் கோழிகளில் வளர்ச்சி ஹார்மோன்கள் இருப்பதாக கூறுவது தவறானது. இதில் செரிவூட்டப்பட்ட தீவனம், நோய்த்தடுப்பு மற்றும் நோய் கட்டுப்பாடு போன்ற காரணிகளே பங்களிக்கின்றன என்று பாலக்காடு பறவை அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியின் அதிகாரி ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    • சம்பவத்தன்று காலை ஜெகதீஸ்வரன் தண்ணீரை காய வைக்க கியாஸ் அடுப்பை பற்ற போது கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது.
    • இந்த தீ விபத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு வெட்டுக்காட்டு வலசு நல்லி தோட்டத்தில் ஒரு பிராய்லர் கடை செயல்பட்டு வருகிறது. இது காஞ்சிகோவிலை சேர்ந்த பரமசிவம் என்பவருக்கு சொந்தமானது. இதனை ஜெகதீஸ்வரன் என்பவர் கவனித்து வருகிறார்.

    சம்பவத்தன்று காலை ஜெகதீஸ்வரன் தண்ணீரை காய வைக்க கியாஸ் அடுப்பை பற்ற வைக்க முயன்றார். அப்போது டியூப்பில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதில் திடீரென தீப்பிடித்து அருகில் இருந்து பொரு ட்கள் எரிய தொடங்கின.

    இது குறித்து தகவல் அறிந்த ஈரோடு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தோடு கியாஸ் கசிவையும் நிறுத்தினர்.

    இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக கோழிகள், குஞ்சுகள் தப்பின. கடையில இருந்த பிளாஸ்டிக் பொருட்கள், எந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தீயில் கருகி சாம்பலானது. மேற்புர பகுதியில் தகர ஷீட் அமைத்து இருந்ததால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வர்த்தக கியாஸ் சிலிண்டர் நல்ல நிலையில் இருந்து ள்ளது. நீண்ட நாட்களாக டியூப்பை மாற்றாமல் பயன்படுத்தி வந்துள்ளனர். பழுதான டியூப்பை பயன்படுத்தியதே தீ விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.

    இந்த தீ விபத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×