search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதிப்புடன்"

    • புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
    • கொரோனா பாதிப்புடன் ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றார்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு நடவடிக்கையால் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தினசரி பாதிப்பை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 893 ஆக உள்ளது.

    இதுவரை மாவட்டத்தில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 156 ஆக உள்ளது. இதுவரை கொரோனா தாக்கத்தால் மாவட்டத்தில் 736 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றார்.

    • தட்ப வெப்ப மாற்றத்தால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சலால் பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • மருத்துவரிடம் முறையாக தகவல் சொல்லி சிகிச்சை பெற வேண்டும். சுயமாக சிகிச்சை பெற கூடாது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நாளொன்றுக்கு 40-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்று பாதிப்பினால் 280-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் தட்ப வெப்ப மாற்றத்தால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சலால் பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் அதிகரித்து வருகிறது.

    இதனால் ஈரோட்டில் தினமும் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சளி, காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சைக்கு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

    இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:

    தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக தற்போது மாவட்டத்தில் சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ளது.

    இதற்காக பெற்றோர்கள், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இதற்கு முறையான சிகிச்சை எடுத்து கொண்டாலே போதும். மருத்துவரிடம் முறையாக தகவல் சொல்லி சிகிச்சை பெற வேண்டும். சுயமாக சிகிச்சை பெற கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.
    • தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 17 நாட்களாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டி–யல்படி மேலும் ஒரே நாளில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 739 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 972 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 18 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×