search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் பொதுத்தேர்தல்"

    • பாராளுமன்றத்தை கூட்ட பாகிஸ்தான் அதிபர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
    • அடுத்த வாரம் நவாஸ் ஷெரீப்- பிலாவல் பூட்டோ கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க இருப்பதாக தகவல்.

    பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெற்று 3 வாரங்கள் முடிவடைய இருக்கும் நிலையிலும் இன்னும் ஆட்சி அமைக்கப்படவில்லை.

    இந்த நிலையில்தான், பாகிஸ்தானின் நாட்டின் காபந்து பிரதமராக இருக்கும் அன்வார்-உல்-ஹக் கக்கார் தனது பிரதமர் அலுவலக பணிகள் அனைத்தையும் நிறுத்தியுள்ளார். தனது ஒப்புதலுக்காக வைக்கப்பட்டுள்ள கோப்புகள் அனைத்திலும் கையழுத்திடவில்லை. முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்த்துள்ளார். "புதிய அரசின் தொடக்கத்திற்காக நாங்கள் காத்திருக்கிறோம். எங்களுடைய செயல்பாடுகள், திட்டங்கள் உள்ளிட்ட அனைத்தையும் புதிய நிர்வாகத்திடம் வழங்குவோம்" என்றார்.

    பாகிஸ்தானின் காபந்து அரசின் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம், பிப்ரவரி 29-ந்தேதி பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும். புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பதற்காக இதை நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என அதிபர் ஆரிஃப் அல்விக்கு கடிதம் அனுப்பியிருந்தது. ஆனால், பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்தின் கோரிக்கை பாகிஸ்தான் அதிபர் நிராகரித்துள்ளார்.

    மேலும், புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பதற்கு முன்னதாக அனைத்து ஒதுக்கீடு இடங்களும ஒதுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    2018-ம் ஆண்டும் ஆரிஃப் அலிவி பாகிஸ்தான் அதிபராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்னதாக இம்ரான் கான் கட்சியின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இம்ரான் கான் கட்சி அதிக இடங்களை பிடித்தும் ஆட்சியமைக்க முடியவில்லை.

    நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்- பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை இணைந்து ஆட்சி அமைக்க இருக்கின்றன. அடுத்த வாரம் ஆட்சி அமைக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    நவாஸ் ஷெரீப் சகோதரர் ஷெபாஷ் ஷெரீப் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். ஆசிப் அலி சர்தாரி ஜனாதிபதி தேர்தலுக்கு இரு கட்சி சார்பிலான வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனத் தெரிகிறது.

    பாகிஸ்தானின் அரசியலமைப்பு சட்டத்தின்படி தேர்தல் முடிந்து 21 நாட்களுக்குள் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும். அதன்படி 29-ந்தேதி பாராளுமன்றத்தை கூட்ட அமைச்சகம் ஒப்பதல் கேட்டிருந்தது.

    • பாகிஸ்தானில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
    • நவாஸ் ஷெரீப்- பிலாவல் பூட்டோ கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன.

    பாகிஸ்தானில் கடந்த வாரம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இம்ரான் கான், நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ ஆகியோர் கட்சிகளுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவி வருகிறது.

    பாகிஸ்தானை காப்பாற்ற நவாஸ் ஷெரீப்- பிலாவல் பூட்டோ ஆகியோர் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து இரு கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே தனிப்பட்ட முறையில் நாங்கள்தான் அதிக இடம் பெற்றுள்ளோம். அதனால் எங்களைத்தான் ஆட்சி அமைக்க அழைப்பார்கள் என இம்ரான் கான் கட்சி தெரிவித்து வருகிறது.

    இதனால் இரண்டு பக்கத்தில் இருந்தும் வெற்றி பெற்றவர்களை இழுப்பதற்கான குதிரை பேரம் நடைபெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இந்த நிலையில் எந்த அரசு அமைந்தாலும் அதனுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    தேர்தலின்போது முறைகே நடைபெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    மொத்தமுள்ள 264 இடங்களில் ஆட்சியை பிடிக்க 133 இடங்கள் தேவை. தனிப்பட்ட கட்சி அளவில் எடுத்துக் கொண்டால் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளது. நாவஸ் ஷெரீப் மற்றும் பிலாவல் பூட்டோ கட்சியை தவிர்த்து மற்ற கட்சிகளுடன் சேர்த்து பார்த்தால் இம்ரான் கானுக்கு சரியாக 135 இடங்கள் வரும். இது ஆட்சி அமைக்க போதுமானது.

    நவாஸ் ஷெரீப் பிலாவல் பூட்டோ கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளார். இவர்களுக்கு (75+54) 129 இடங்கள் உள்ளன. இன்னும் 4 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. சுயேட்சை வேட்பாளர்களை இழுக்க வாய்ப்புள்ளது. அல்லது சிறிய கட்சிகளை இணைத்துக் கொள்ளலாம்.

    • நவாஸ் ஷெரீப் கட்சி 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ கட்சி 54 இடங்களிலும் வெற்றி.
    • இம்ரான் கான் கட்சி 93 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது.

    பாகிஸ்தானில் கடந்த வியாழக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆனால், நேற்றுதான் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    இம்ரான் கான் கட்சி 93 இடங்களிலும், நவாஸ் ஷெரீப் கட்சி 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மற்ற கட்சிகள், சுயேட்சைகள் 42 இடங்களை பிடித்துள்ளன.

    மொத்தம் 264 இடங்களில் ஆட்சியை பிடிக்க 133 இடங்கள் தேவை. தனிப்பட்ட கட்சி அளவில் எடுத்துக் கொண்டால் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளது. நாவஸ் ஷெரீப் மற்றும் பிலாவல் கட்சியை தவிர்த்து மற்ற கட்சிகளுடன் சேர்த்து பார்த்தால் இம்ரான் கானுக்கு சரியாக 135 இடங்கள் வரும். இது ஆட்சி அமைக்க போதுமானது.

    ஆனால் நவாஸ் ஷெரீப் பிலாவல் பூட்டோ கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளார். இதை இரண்டு கட்சி தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். இவர்களுக்கு 128 இடங்கள் உள்ளன. இன்னும் 5 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. சுயேட்சை வேட்பாளர்களை இழுக்க வாய்ப்புள்ளது. அல்லது சிறிய கட்சிகளை இணைத்துக் கொள்ளலாம்.

    அரசியல் உறுதியற்ற நிலையில் பாகிஸ்தானை காப்பாற்ற கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளன. நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கா அரசியல் ரீதியிலான ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுத்தேர்தலின் போது பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கலாம் என அச்சம்.
    • மாவட்டம் அல்லது மாகாண நிர்வாகம் கோரிக்கை விடுத்தால் பரிசீலனை செய்யப்படும் என மந்திரி அறிவித்திருந்தார்.

    பாகிஸ்தானில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தேர்தல் தொடங்கிய நிலையில், மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெற இருக்கிறது. தேர்தலையொட்டி பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தற்போது நடைபெற்று வரும் காபந்து அரசு நினைக்கிறது.

    இதனால் உள்துறை மந்திரி கோஹர் இஜாஸ், அச்சுறுத்தல் காரணமாக நாடு தழுவிய அளவில் செல்போன் சேவையை தடைசெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும், மாவட்டம் அல்லது மாகாண நிர்வாகத்திடம் இருந்து பாதுகாப்பு அச்சுறத்தல் தொடர்பாக வேண்டுகோள் வந்தால், அதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என்றார்.

    ஆனால், அரசு சாரா பல்வேறு அமைப்புகள் தேர்தலின்போது தடையில்லா இணைய சேவை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தன.

    இந்த நிலையில் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம், பொதுத்தேர்தலில் மக்கள் சிரமமின்றி வாக்களிக்க தொடர்ந்து இணைய தள சேவை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    மேலும், இன்டர்நெட் சேவையை தற்காலிகமாக நிறுத்து வைக்க வேண்டும் என அரசிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்றார்.

    பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் 12 கோடியே 85 லட்சத்து 85 ஆயிரத்து 760 பேர் வாக்களிக்க இருக்கிறார்கள்.

    நவாஸ் ஷெரீப், இம்ரான் கான் கட்சி, பெனாசீர் பூட்டோ மகன் கட்சி ஆகியவை பொதுத்தேர்தலில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    • பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
    • இதையடுத்து பொதுத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சி ஆட்சி நடந்தது. பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைவதற்கு 3 நாட்களுக்கு முன் கடந்த ஆகஸ்டு மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

    பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தின்படி அடுத்த பொதுத்தேர்தல் 90 நாட்களுக்குள் நடத்தவேண்டும். ஆனால் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை நிறைவடையாததால் தேர்தல் தேதி அறிவிப்பு தாமதமாகியது.

    இதற்கிடையில், தேர்தலை விரைந்து நடத்தக் கோரி பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி காசிபேஸ் இசா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் வக்கீல் சஜீல் ஸ்வாதி ஆஜரானார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் தேதிக்குள் தொகுதி மறுவரையறை பணிகள் முடிவடைந்து விடும். எனவே பிப்ரவரி மாதம் 11-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டில் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனால் தேர்தல் தேதி குழப்பம் முடிவுக்கு வந்தது.

    சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் தேதி அறிவித்த சில மணி நேரங்களில் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் 3 நாட்களுக்கு முன் 8-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வியை பாகிஸ்தான் தேர்தல் ஆணையர் சிக்கந்தர் சுல்தான் மற்றும் தேர்தல் குழுவினர் சந்தித்து பொதுதேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பிறகு பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    • ஆகஸ்ட் வரை ஷாபாஸ் ஷெரீப் தலைமையில் இடைக்கால அரசாங்கம் நடைபெற்றது
    • தேர்தலை விரைவாக நடத்த உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கலானது

    கடந்த 2022 ஏப்ரலில், பாகிஸ்தானில் அதுவரை நடைபெற்று வந்த பிரதமர் இம்ரான்கானின் ஆட்சி கூட்டணி கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் முடிவுக்கு வந்தது.

    இதையடுத்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் தலைமையில் ஒரு இடைக்கால அரசாங்கம் பொறுப்பேற்றது.

    இவ்வருடம் ஆகஸ்ட் 10 அன்று அந்நாட்டின் பாராளுமன்றத்தை, அதன் காலம் முடிவடையும் 3 நாட்களுக்கு முன்பாகவே, பிரதமர் ஷாபாஸ் அளித்த பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி அரிஃப் ஆல்வி கலைத்தார்.

    அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின்படி அன்றிலிருந்து 90 நாட்களில் (நவம்பர் 7) பொதுத்தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், அந்நாட்டின் புதிய மக்கள்தொகை விகிதாசார தரவுகளுக்கு ஏற்ப புதிய பாராளுமன்ற எல்லைகளை நிர்ணயிக்கும் மறுசீரமைப்பில், தேர்தல் ஆணையம் தீவிரமாக இருந்ததால், தேர்தல் தள்ளி போடப்பட்டது.

    இதனையடுத்து, பாராளுமன்றத்தின் 336 இடங்களுக்கு தேர்தலை விரைவாக நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் தங்கள் பதில் மனுவில், அந்நாட்டின் தேர்தல் ஆணைய வழக்கறிஞர், தேர்தல் தேதியை தெரிவித்தார். இதன்படி, வரும் 2024 பிப்ரவரி 11 அன்று அந்நாட்டில் பாராளுமன்றத்திற்கான பொதுதேர்தல் நடைபெறும்.

    அந்நாட்டில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நடத்தும் தெஹ்ரிக்-ஏ-இன்ஸாஃப், முன்னாள் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் நடத்தும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக், முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் பிலவல் பூட்டோ ஜர்தாரி நடத்தும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை தேர்தல் களத்தில் உள்ளன.

    • பாகிஸ்தானில் கடைசியாக 2018ல் பொதுத்தேர்தல் நடைபெற்றது
    • தொகுதி மறுசீரமைப்பு இறுதி பட்டியல் நவம்பரில் வெளியிடப்படும்

    342 உறுப்பினர்களை கொண்ட பாகிஸ்தான் நாட்டு மக்களவையில் 272 உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இவையன்றி 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் அந்நாட்டின் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    கடைசியாக 2018 ஜூலை மாதம் அந்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் இம்ரான் கானின் கட்சி முழு பெரும்பான்மையிடங்களுக்கு குறைவாக இடங்களை பிடித்தது. இருப்பதற்குள்ளேயே அதிக இடங்களில் வென்ற கட்சி என்பதால் அவர் சில கட்சிகளுடன் ஒரு கூட்டணி ஆட்சியை அமைத்தார்.

    கடந்த ஏப்ரல் 10 அன்று அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விளைவாக, பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக நஆட்சியை விட்டு வெளியேறினார்.

    இதனையடுத்து, 2022 ஏப்ரல் மாதம், ஷெஹ்பாஸ் ஷரீஃப் பிரதமராக பதவியேற்றார். அவரது பிரதமர் பதவி காலம், 2023 ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்ததையடுத்து இடைக்கால பிரதமராக அன்வர்-உல்-ஹக் கக்கர் என்பவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

    அந்நாட்டுக்கான பொதுத்தேர்தல் குறித்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் எந்த அறிக்கையும் அளிக்காமல் இருந்து வந்ததால் அரசியலில் குழப்பம் நிலவியது.

    இந்நிலையில், 2024 ஜனவரி மாத கடைசி வார காலகட்டத்தில் பாகிஸ்தானின் பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது.

    அந்நாட்டின் தொகுதி சீரமைப்புக்கான முதல் பட்டியல் இம்மாதம் 27 அன்று வெளியிடப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் மற்றும் சம்பந்தபட்டவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு பரிசீலனை செய்யப்பட்ட பிறகு இறுதி பட்டியல் நவம்பர் 30 அன்று வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

    இதற்கு பிறகு 54-நாள் தேர்தல் பணிகள் நடைபெற்ற பிறகு ஜனவரி கடைசி வாரம் தேர்தல் நடைபெறும் என கூறியுள்ளது.

    அந்நாட்டில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஏ-இன்ஸாஃப் கட்சியும், ஷெஹ்பாஸ் ஷரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியும் பிலாவால் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் பிரதான கட்சிகளாகும். 

    பாகிஸ்தான் பொதுத்தேர்தலுக்காக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் முஸ்லிம் அல்லாத வாக்களர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும், குறிப்பாக இந்துக்கள் முதலிடம் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Pakistanelections
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் ஆளும் கட்சியின் ஆட்சிக்காலம் வரும் மே 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து, ஜூலை மாதம் 25ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மொத்தம் 100 மில்லியன் வாக்களார்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அவர்களில் 59.2 மில்லியன் ஆண் மற்றும் 46.7 மில்லியன் பெண் வாக்காளர்கள் உள்ளனர்.

    இந்நிலையில், கடந்த தேர்தலை விட முஸ்லிம் அல்லாத வாக்காளர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் உயர்ந்துள்ளது. 2013-ம் தேர்தலில் 2.77 மில்லியனாக இருந்த முஸ்லிம் இல்லாதவர்கள் எண்ணிக்கை 3.63 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது, மொத்தம் 1.77 மில்லியன் இந்து வாக்காளர்கள் உள்ளனர். 2013-ம் ஆண்டு தேர்தலின் போது 1.40 ஆக இருந்த இந்து வாக்காளர்கள் எண்ணிக்கை இந்த தேர்தலில் உயர்ந்துள்ளது.

    இந்து வாக்காளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக சிந்து மாகாணத்தில் 40 சதவீத இந்து வாக்களர்கள் உள்ளனர். ஒவ்வொரு தேர்தலுக்கும் முஸ்லிம் அல்லாத வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். #Pakistanelections

    ×