search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் சக்கரம்"

    • ஒரு பெண் குறுக்கே வந்தார்.
    • மோட்டார் சைக்கிளை திருப்பிய போது எதிரே வந்த தனியார் பஸ் டயரில் சிக்கினார்.

    தாராபுரம் :

    தாராபுரம் பொள்ளாச்சி சாலை அமராவதி சிலை ரவுண்டானா அருகே இன்று காலை 9 மணியளவில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது ஒரு பெண் குறுக்கே வந்தார்.

    அவர் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்பிய போது எதிரே வந்த தனியார் பஸ் டயரில் சிக்கினார். இதில் அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் விபத்தில் பலியானவர் தாராபுரத்தை சேர்ந்த இமானுவேல் என்பவரின் மகன் ரூபன் (வயது 26) என்பதும் அவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சிங்கம்புணரி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலியானார்.
    • இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மருதிப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகன் ஆகாஷ் (வயது 19). இவர் மதுரையில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று மாலை மாணவர் ஆகாஷ், திருப்பத்தூரில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    சிங்கம்புணரி அருகே எம்.கோவில்பட்டி பகுதியில் சென்று கொண்டி ருந்தபோது அவரது மோட்டார் சைக்கிள், எதிரே காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற தனியார் பஸ் மீது மோதியது. இதில் பஸ் சக்கரத்தில் சிக்கிய மாணவர் ஆகாஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்தி லேயே பலியானார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த எஸ்.பி.மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டர் சைக்கிளில் முன்புறத்தில் மகளை அமரவைத்து அழைத்து சென்றுள்ளார்.
    • பனியன் கம்பெனி பஸ் ஒன்று ராஜ்குமார் ஒட்டிவந்த பைக்கின் மீது மோதியது.

    அவிநாசி :

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர்ராஜ்குமார் (வயது32) இவருடைய மனைவி நூரேத் ஆமின் (வயது24) இவர்களுக்கு ஒரு வயதில் தியானா என்ற குழந்தை உள்ளது. ராஜ்குமார் திருமுருகன்பூண்டி அடுத்த ராக்கியாபாளைம் மாகலெட்சுமி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த பகுதியில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் தனது, மனைவி மகளுடன் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். மோட்டர் சைக்கிளில் முன்புறத்தில் மகளை அமரவைத்து அழைத்து சென்று–ள்ளார். அப்போது ராக்கிய–ம்பாளையம் ராசாத்தா குட்டை அருகே மோட்டர் சைக்கிள் சென்றபோது எதிரே வந்த தனியார் பனியன் கம்பெனி பஸ் ஒன்று ராஜ்குமார் ஒட்டிவந்த பைக்கின் மீது மோதியது. இதில் கீழே விழுந்த ஒரு வயது குழந்தை மீது பஸ் சக்கரம் ஏறியது. இதில் படுகாயம் அடைந்த குழந்தையை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கே குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக கூறினர். இதனையறிந்த குழந்தையின் பெற்றோர் பார்த்து கதறி அழுதனர்.

    இந்த சம்பவம் குறித்து அறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் குழந்தையை மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்றோர் கண் முன்பே விபத்து குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதிநில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×