search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழைய பஸ் நிலையம்"

    • கணேசன் தனது நண்பர் ஒருவருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
    • செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபரை பயணிகள் ஓடி வந்து பிடித்தனர்.

    நெல்லை:

    தென்காசி அருகே உள்ள அச்சன்புதூரை சேர்ந்தவர் கணேசன்(வயது 48). இவர் நேற்று தென்காசி பழைய பஸ் நிலையத்தில் தனது நண்பர் ஒருவருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் கணேசனின் செல்போனை பறித்துக்கொ ண்டு தப்பியோட முயன்றார்.

    உடனே கணேசன் கத்தி கூச்சலிடவே, அந்த நபரை அக்கம்பக்கத்தில் நின்ற பயணிகள் ஓடி வந்து பிடித்தனர். அதற்குள் அந்த நபர், திருடிய செல்போனை அங்கு நின்று கொண்டிருந்த அவரது கூட்டாளிகள் 2 பேரிடம் கொடுத்துவிட்டார். இதுதொடர்பாக கணேசன் தென்காசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் தென்காசி எஸ்.கே.பி. தெருவை சேர்ந்த முகமது அலி(வயது 34) என்பதும், திருடிய செல்போனை தென்காசி டி.என்.எச்.பி. காலனியை சேர்ந்த சுடலைகுமார்(30), புதுமனை 1-வது தெருவை சேர்ந்த ரசாக் முகமது ஆகியோரிடம் கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • இன்று காலை 7.30 மணியளவில் விழுப்புரத்தில் இருந்து எழுசெம்பொன் கிராமத்திற்கு 7-ம் நம்பர் பஸ் புறப்படத் தயாராக இருந்தது.
    • மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகரில் திருச்சி நெடுஞ்சாலையில் புதிய பஸ் நிலையம் உள்ளது. புதுச்சேரி சாலையில் பழைய பஸ் நிலையம் உள்ளது. இந்த பழைய பஸ் நிலையத்தில் இருந்து சுற்று வட்டாராத்தில் உள்ள பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் விழுப்புரத்தில் இருந்து எழுசெம்பொன் கிராமத்திற்கு 7-ம் நம்பர் பஸ் புறப்படத் தயாராக இருந்தது. இதில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ்சினை இயக்க டிரைவர் கணபதி வந்து, அவரது இருக்கையில் அமர்ந்து பஸ்சை ஸ்டார்ட் செய்து இயக்கினார். அப்போது அவரது காலடியில் 10 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு படுத்து கிடந்ததை கண்டு அதிர்ந்தார்.

    உடனடியாக பஸ்சை விட்டு இறங்கிய கணபதி, பஸ்சிலிருந்த பயணிகளையும் எச்சரித்து கீழே இறக்கினார். இதனால் பயணிகளும், பொதுமக்களும் அலறியடித்து ஓடினர். டிரைவர் கணபதி இது தொடர்பாக போக்குவரத்து பணிமனை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அவர்கள் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவசங்கரன் தலைமையில் பாம்பு பிடி வீரர்களுடன் பழைய பஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு நின்று கொண்டிருந்த பஸ்சில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர். டிரைவர் பார்த்ததாக கூறிய கண்ணாடி விரியன் பாம்பு கிடைக்கவில்லை. இதனை அடுத்து பணிமனையில் இருந்து மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து பாம்பு இருந்ததாக கூறப்பட்ட பஸ்சினை பணிமனைக்கு எடுத்து சென்று பாம்பு பிடி வீரர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் பரபரப்பாக காணப்படுகிறது.

    • வேலைவாய்ப்பு தொடர்பாக தினந்தோறும் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர்.
    • தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    தொழில் நகரமான திருப்பூருக்கு தினந்தோறும் வேலைவாய்ப்பு தொடர்பாக வடமாநிலங்கள் மற்றும் அண்டை மாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். இதனால் பஸ் நிலையங்கள், ரெயில்வே நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் பனியன் நிறுவனங்களுக்கு பலர் பணிக்கு வந்து செல்வதால் காலை, மாலை மற்றும் வார விடுமுறை நாட்களில் பஸ் நிலைய பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது திருப்பூர் நகரில் சில வருடங்களாக வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பழைய பஸ் நிலையம் தொடங்கி ரெயில்வே நிலையம் வரை வாகனங்கள் வரை நீண்ட வரிசையில் ஆமை வேகத்தில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுக்கு மேலாக பழைய பஸ் நிலையம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனால் பஸ்கள் பஸ் நிலையத்தின் வெளியே பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இதுவே போக்குவரத்து நெருக்கடிக்கு காரணமாகும்.

    இது குறித்து பயணிகள் கூறுகையில், தற்போது பஸ் நிலையத்தில் இறுதி கட்ட பணிகள் (ஆர்ச் அமைப்பு) நடந்து வருவதால் முன்பு போல பஸ் நிலைய வளாகத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்ற முடியவில்லை. பல்லடம் சாலையில் இருபுறங்களிலும் கோவை மார்க்கமாக செல்லும் பஸ்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. பல்லடம், அவினாசி, அனுப்பர்பாளையம், புதிய பஸ் நிலையம் வழியாக செல்லும் அனைத்து அரசு பஸ்கள், தனியார் மினி பஸ்கள் சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க வேண்டியிருப்பதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பயணிகள் நிற்பதற்கு இடம் இன்றி அவதிப்படுகின்றனர். ரோட்டில் நடந்து செல்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். நடைபாதைகளில் திடீர் கடைகள் முளைத்து உள்ளதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் நிற்க இடமின்றி அவஸ்தைப்படுகின்றனர்.

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. சாதாரண நாட்களிலேயே இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு நெருக்கடி இருக்கும் நிலையில், பண்டிகை நாட்களில் எப்படி இருக்கும். இந்த பகுதிகளில் முக்கிய ஜவுளிக்கடைகள், நகைகடைகள் மற்றும் மளிகைகடைகள் அதிகளவில் உள்ளன. தினந்தோறும் மக்கள் வந்து செல்கின்றனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்ற சம்பவங்களும் நடக்க வாய்ப்புள்ளது. பஸ் நிலைய பணிகள் இறுதிக்கட்டத்தில் இருந்தாலும் முழுமையாக பணிகள் முடிய இன்னும் சில மாதங்கள் ஆகலாம். ஆகவே பழைய பஸ் நிலையம் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்வதற்கு போக்குவரத்து போலீசாரும், மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாக மாற்று நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றனர்.  

    • நாளை காலை 6.15மணிக்கு மேல் 7. 45 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை வேள்வி, கணபதி வழிபாடு, ஜப பாராயணம் நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள மேயர்கோவில் ஸ்ரீசோழாபுரி அம்மன் மற்றும் ஸ்ரீ மாதேஸ்வரர்( ராகு கேது ஸ்தலம்) கோவிலில் நாளை 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.15மணிக்கு மேல் 7. 45 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை வேள்வி, கணபதி வழிபாடு, புண்யாகவாசனம், திரவியாஹூதி, வேதிக அர்ச்சனை, மூல மந்திர ஹோமம், ஜப பாராயணம் நடைபெற்றது.

    காலை 8. 45 மணிக்கு விசேஷசந்தி, 11 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, பிரசாதம் வழங்குதல், மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாக வேள்வி ஆரம்பம், விநாயகர் வழிபாடு, புண்யாகவாசனம், திரவியாஹூதி, வேதிக அர்ச்சனை, வேத ஜப பாராயணம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு, மஹா பூர்ணாஹூதி, பிரசாதம் வழங்குதல், இரவு 7.30 மணிக்கு தேவி ஸ்ரீயின் பரதநாட்டியம் நிகழ்ச்சி, 8 மணிக்கு திருப்பூர் ரஜினி செந்தில் வழங்கும் கொங்கு புகழ் மேஸ்ட்ரோ இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நாளை 21ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால யாக வேள்வி, விநாயகர் வழிபாடு, புண்யாஹவாசனம், திரவியாஹூதி, காலை 5.45 மணிக்கு நாடி சந்தானம், காலை 6.45 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, காலை 7 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, காலை 7.31 மணிக்கு ஸ்ரீசோழாபுரி அம்மன் மற்றும் ஸ்ரீ மாதேஷ்வரர் பரிவார விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம், 7.40 மணிக்கு ஸ்ரீ சோழாபுரி அம்மன் மற்றும் ஸ்ரீ மாதேஸ்வரர் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. விழாவிற்கு செல்வராஜ் எம். எல்.ஏ., தலைமை தாங்குகிறார். பக்தர்கள் பலர் பங்கேற்கின்றனர். 

    ×