search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரியேறும் பெருமாள்"

    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருந்த படம் பரியேறும் பெருமள்.
    • இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த 2018ம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் பரியேறும் பெருமாள். இதில் கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு, மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தை அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் பா.இரஞ்சித் தயாரித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


    பரியேறும் பெருமாள்

    பரியேறும் பெருமாள்

    இந்நிலையில் பரியேறும் பெருமாள் படத்தின் இந்தி ரீமேக் உரிமத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. முழுக்க முழுக்க காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதன் பின்னணியில் உள்ள சாதிய முரண்பாடுகளை பற்றி பேசும் படமாக எடுக்க கரண் ஜோஹர் திட்டமிட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முதன்மை கதாபாத்திரங்களில் சித்தார்த் சதுர்வேடியும், டிரிப்டி டிமிரி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    • பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தெருக்கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ்.
    • இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    2018-ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நெல்லை தங்கராஜ். தெருக்கூத்து கலைஞரான நெல்லை தங்கராஜ் இப்படத்தில் பரியனின் (கதிர்) தந்தையாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலம் அடைந்திருந்திருந்தாலும் வசிப்பதற்கு வீடு இல்லாமல் குடுசை வீட்டில் வாழ்ந்து வந்த தங்கராஜுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அவருக்கு வீடுகட்டி கொடுக்கப்பட்டது.


    நெல்லை தங்கராஜ்

    தெருக்கூத்துக் கலைஞரும் நடிகருமான நெல்லை தங்கராஜ் நேற்று அதிகாலை 5 மணிக்கு உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், கலைஞர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குனர் மாரிசெல்வராஜ், நெல்லை தங்கராஜுக்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    மாரி செல்வராஜ் -நெல்லை தங்கராஜ்

    அதில், "ஆங்காரமாய் ஆடியது போதும் இளைப்பாறுங்கள் அப்பா. என் கடைசி படைப்பு வரையிலும் உங்கள் பாதச்சுவடிருக்கும் .. பரியேறும் பெருமாள்" என்று பதிவிட்டுள்ளார்.


    • பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தெருக்கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ்.
    • இன்று அதிகாலை 5 மணிக்கு உடல்நலக்குறைவால் நெல்லை தங்கராஜ் காலமானார்.

    2018-ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நெல்லை தங்கராஜ். தெருக்கூத்து கலைஞரான நெல்லை தங்கராஜ் இப்படத்தில் பரியனின் (கதிர்) தந்தையாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலம் அடைந்திருந்திருந்தாலும் வசிப்பதற்கு வீடு இல்லாமல் குடுசை வீட்டில் வாழ்ந்து வந்த தங்கராஜுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அவருக்கு வீடுகட்டி கொடுக்கப்பட்டது.

     

    நெல்லை தங்கராஜ்

    நெல்லை தங்கராஜ்


    இந்நிலையில் தெருக்கூத்துக் கலைஞரும் நடிகருமான நெல்லை தங்கராஜ் இன்று அதிகாலை 5 மணிக்கு உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், கலைஞர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    ×