search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் திருடிய"

    • போலீசார் விசாரணை நடத்தியதில் மணிகண்டன் என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
    • பின்னர் மணிகண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு வெட்டுக் காட்டு வலசு மடிக்காரர் காலனியை சேர்ந்தவர் சரவணன் (41). இவர் வீரப்பம் பாளையம் பகுதியில் கிருத்திகாட்ரை கிளினர்ஸ் என்ற துணி சலவை மற்றும் அயர்னிங் செய்யும் கடையை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 4 ம் தேதி கடையில் பணிகளை முடித்து கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார். இதை தொடர்ந்து அடுத்த நாள் காலை சரவணன் கடையை வந்து பார்த்த போது கடையின் முன் பக்க சட்டர் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கடையின் உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் மின் கட்டணம் செலுத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்த ரூ.10 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது.

    இதுகுறித்து சரவணன் வீரப்பன் சத்திரம் போலீசில் தகவல் கொடுத்தார்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சி களை ஆய்வு செய்தனர்.

    அதில் போலீசாருக்கு முக்கிய தடையம் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் சூரம்பட்டி வலசு கோவலன் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் (29) என்பவர் தான் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதனைஅடுத்து வீரப்பன்சத்திரம் போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

    மணிகண்டன் மீது ஏற்க னவே அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு நிலுவைவில் உள்ளது. பின்னர் மணிகண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    • சண்முகம் தனது மேஜையை திறந்து பார்த்தபோது அதில் பணம் இல்லாததால் சதீஷ்குண்டுவை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
    • பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியாருக்கு சொந்தமான டெக்ஸ்டைல் நிறுவனத்தில் ஒரு பிரிவின் மேலாளராக பணிபுரிந்து வருபவர் சண்முகம் (வயது 29).

    இவர் தனது அலுவலகத்தில் உள்ள மேஜையில் ரூ.5 ஆயிரத்தை வைத்துவிட்டு தனது வருகையை பதிவு செய்ய சென்று விட்டார். பின்னர் பணத்தை சூப்பர்வைசராக வேலை செய்யும் சுஜித்குமார் மாலிக் என்பவருக்கு தர அவரையும் அழைத்துக்கொண்டு தனது அலுவலக அறைக்கு வந்தார்.

    அப்பொழுது அவருடைய அறையில் இருந்து கையில் பணத்துடன் அந்த கம்பெனியின் மிஷின் ஆபரேட்டராக வேலை செய்யும், உத்திரபிரதேசம் மாநிலம் கேராம் குடவா பகுதியை சேர்ந்த சதீஷ்குண்டு (வயது 25) வெளியே வந்துள்ளார்.

    உடனடியாக சண்முகம் தனது மேஜையை திறந்து பார்த்தபோது அதில் பணம் இல்லாததால், உடனடியாக சத்தம் போட்டு அங்கிருந்த சூப்பர்வைசர் கோடீஸ்வரன் மற்றும் சுஜித்குமார் மாலிக் ஆகியோர் உதவியுடன் சதீஷ்குண்டுவை கையும் களவுமாக பிடித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • பங்கில் வரவு செலவு கணக்குகளை சரிபார்த்த போது ரூ.2 ஆயிரம் பற்றாக்குறை இருந்துள்ளது.
    • ஹரினிடம் பண பற்றாக்குறை பற்றி கேட்ட போது மது குடிக்க கல்லாவில் இருந்து ரூ.2ஆயிரம் எடுத்து வந்து விட்டதாக கூறியுள்ளார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோயில் தனியார் பெட்ரோல் பங்கில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் சசிகுமார் (வயது43).

    இந்த பங்கில் வரவு செலவு கணக்குகளை சரிபார்த்த போது ரூ.2 ஆயிரம் பற்றாக்குறை இருந்துள்ளது. பெட்ரோல் பங்கில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களை கேட்டபோது தாங்களுக்கு தெரியாது என்றும் கேசியரை தான் கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

    வேலை முடித்து சென்ற ஊழியர் ஹரின் என்பவரை தேடி வீட்டிற்கு சென்ற போது அங்கு அவர் இல்லை. பின்னர் மதியம் காஞ்சிக்கோயில் நால் ரோட்டில் நின்று கொண்டி ருந்த ஹரினிடம் பண பற்றாக்குறை பற்றி கேட்ட போது மது போதையில் இன்று விடுமுறை என்ப தால் மது குடிக்க கல்லாவில் இருந்து ரூ.2ஆயிரம் எடுத்து வந்து விட்டதாக கூறியு ள்ளார்.

    அவரிடம் பாக்கெட்டில் மீதம் இருந்த ரூ.1600 எடுத்து கொடுத்து கொண்டார். பின்னர் இது குறித்து காஞ்சிக்கோயில் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இது தொட ர்பாக காஞ்சிக்கோயில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் வழக்கு பதிந்து ஹரினை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • ஒருவர் நைசாக குணசேகரன் பையில் வைத்திருந்த ரூ.16,750 பணத்தை திருடி அருகில் இருந்த மற்றொரு நபரிடம் கொடுத்தார்.
    • இது குறித்து குணசேகரன் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு கொல்லம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (57). ஈரோடு ரெயில் நிலையத்தில் ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை ஆட்டோ ஸ்டாண்ட் அருகே குணசேகரன் புதிய ஆட்டோ வாங்குவதற்காக ரூ.16,750 வைத்திருந்தார். பின்னர் அந்த பகுதியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே 2 வாலிபர்கள் வந்து அமர்ந்தனர்.

    அதில் ஒருவர் நைசாக குணசேகரன் பையில் வைத்திருந்த ரூ.16,750 பணத்தை திருடி அருகில் இருந்த மற்றொரு நபரிடம் கொடுத்தார்.

    திடீரென எழுந்து இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குணசேகரன் திருடன்.. திருடன் என அலறினார். அதற்குள் அந்த 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து குணசேகரன் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த திருட்டு தொடர்பாக கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த நாகராஜ் (35), வெட்டுக்காட்டுவலசு, சங்கரன் மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியை சேர்ந்த குமார் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து குணசேகரிடம் இருந்து திருடிய பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் நாகராஜ் மீது ஏற்கனவே கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    பின்னர் நாகராஜ், குமார் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். 

    • இளம்பெண் திடீரென எல்லம்மாள் பணம் வைத்திருந்த பேக்கை திருடி கொண்டு தப்பிக்க முயன்றார்.
    • இதையடுத்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தினியை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மதுரைக்கு பஸ் கிளம்ப தயாரானது. பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது ஈரோட்டை சேர்ந்த எல்லம்மாள் என்ற பெண் பஸ்சில் ஏறி அமர்ந்து இருந்தார்.

    அவர் அருகே மற்றொரு இளம்பெண் அமர்ந்திருந்தார். பஸ் கிளம்ப தயாரான போது எல்லம்மாள் அருகே அமர்ந்திருந்த இளம்பெண் திடீரென எல்லம்மாள் பணம் வைத்திருந்த பேக்கை திருடி கொண்டு தப்பிக்க முயன்றார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடி, திருடி என கூச்சலிட்டார். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அந்த இளம்பெண்ணை ஓடி சென்று மடக்கிப் பிடித்தனர்.

    அந்த பெண் திருடிய பையில் ரூ.2000 ரொக்கப் பணம் இருந்தது. இது குறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்தப் பெண்ணை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    விசாரணையில் அந்தப் பெண் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த நந்தினி (28) என தெரிய வந்தது. இவர் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்தது பெரிய வந்தது.

    மேலும் இவர் மீது சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளில் 6 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தினியை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×