என் மலர்
நீங்கள் தேடியது "stealing money from"
- ஒருவர் நைசாக குணசேகரன் பையில் வைத்திருந்த ரூ.16,750 பணத்தை திருடி அருகில் இருந்த மற்றொரு நபரிடம் கொடுத்தார்.
- இது குறித்து குணசேகரன் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
ஈரோடு:
ஈரோடு கொல்லம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (57). ஈரோடு ரெயில் நிலையத்தில் ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மாலை ஆட்டோ ஸ்டாண்ட் அருகே குணசேகரன் புதிய ஆட்டோ வாங்குவதற்காக ரூ.16,750 வைத்திருந்தார். பின்னர் அந்த பகுதியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே 2 வாலிபர்கள் வந்து அமர்ந்தனர்.
அதில் ஒருவர் நைசாக குணசேகரன் பையில் வைத்திருந்த ரூ.16,750 பணத்தை திருடி அருகில் இருந்த மற்றொரு நபரிடம் கொடுத்தார்.
திடீரென எழுந்து இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குணசேகரன் திருடன்.. திருடன் என அலறினார். அதற்குள் அந்த 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து குணசேகரன் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த திருட்டு தொடர்பாக கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த நாகராஜ் (35), வெட்டுக்காட்டுவலசு, சங்கரன் மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியை சேர்ந்த குமார் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து குணசேகரிடம் இருந்து திருடிய பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் நாகராஜ் மீது ஏற்கனவே கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் நாகராஜ், குமார் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
- சண்முகம் தனது மேஜையை திறந்து பார்த்தபோது அதில் பணம் இல்லாததால் சதீஷ்குண்டுவை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
- பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியாருக்கு சொந்தமான டெக்ஸ்டைல் நிறுவனத்தில் ஒரு பிரிவின் மேலாளராக பணிபுரிந்து வருபவர் சண்முகம் (வயது 29).
இவர் தனது அலுவலகத்தில் உள்ள மேஜையில் ரூ.5 ஆயிரத்தை வைத்துவிட்டு தனது வருகையை பதிவு செய்ய சென்று விட்டார். பின்னர் பணத்தை சூப்பர்வைசராக வேலை செய்யும் சுஜித்குமார் மாலிக் என்பவருக்கு தர அவரையும் அழைத்துக்கொண்டு தனது அலுவலக அறைக்கு வந்தார்.
அப்பொழுது அவருடைய அறையில் இருந்து கையில் பணத்துடன் அந்த கம்பெனியின் மிஷின் ஆபரேட்டராக வேலை செய்யும், உத்திரபிரதேசம் மாநிலம் கேராம் குடவா பகுதியை சேர்ந்த சதீஷ்குண்டு (வயது 25) வெளியே வந்துள்ளார்.
உடனடியாக சண்முகம் தனது மேஜையை திறந்து பார்த்தபோது அதில் பணம் இல்லாததால், உடனடியாக சத்தம் போட்டு அங்கிருந்த சூப்பர்வைசர் கோடீஸ்வரன் மற்றும் சுஜித்குமார் மாலிக் ஆகியோர் உதவியுடன் சதீஷ்குண்டுவை கையும் களவுமாக பிடித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.