search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "textile company"

    • மோகன்ராஜ் அவரை மடக்கிப் பிடித்து ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
    • போலீசார் மணிக்குமார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    மதுரை தெற்கு, புது ராமநாதபுரம் ரோடு, தியாகராஜன் பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (48). இவர், கடந்த 5 மாதங்களாக ஈரோடு, அசோக புரத்தில், வருண்ஜோதி டெக்ஸ் எனும் பெயரில் ஜவுளி நிறுவனம் நடத்தி வந்தார்.

    அதில், தேனி அல்லி நகரம், பங்களா மேடு திட்ட சாலை, சடைய முனீஸ்வரர் கோயில் வீதியைச் சேர்ந்த மணிகுமார் (40) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார். வாரந்தோறும் ஜவுளி விற்பனை யில் வசூலாகும் பணத்தை மணிக்குமார் வங்கியில் செலுத்திவிட்டு கடை உரிமையாளரான மோகன்ராஜூக்கு தகவல் தெரிவிப்பது வழக்கம்.

    இந்நிலையில், கடந்த மாதம் 8-ந் தேதி அன்று வசூல் பணம் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்தை வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டதாக மேலாளர் மணிகுமார், நிறுவன உரிமையாளர் மோகன்ரா ஜூக்கு போன் மூலமாக தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், கடந்த மாதம் 26-ந் தேதி அன்று ஈரோடு வந்த உரிமையாளர் மோகன்ராஜ், வங்கிக் கணக்கை சரி பார்த்தபோது, கடந்த மாதம் 8-ந் தேதி அன்று மணிகுமார் குறிப்பி ட்டவாறு ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்தை வங்கியில் செலுத்தவில்லை என்பது தெரியவந்தது.

    அதுகுறித்து கேட்டபோது, பணத்தை தான் செலவு செய்துவிட்டதாகவும் மறு நாள் கொடுத்து விடுவதாகவும் கூறிச்சென்றவர் அதன் பின் வேலைக்கு வரவில்லையாம். மேலும் அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டதாம்.

    இதையடுத்து, மோகன்ராஜ் தனது நிறுவனத்தில் வேலை செய்யும் ஆள்களுடன் மணிகுமாரை தேடி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று ஈரோடு பஸ் நிலையம் அருகில் மணிகுமார் நின்றிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, மோகன்ராஜ் அவரை மடக்கிப் பிடித்து, ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    மேலும், அவர் அளித்த புகாரின் பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் மணிக்குமார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சண்முகம் தனது மேஜையை திறந்து பார்த்தபோது அதில் பணம் இல்லாததால் சதீஷ்குண்டுவை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
    • பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியாருக்கு சொந்தமான டெக்ஸ்டைல் நிறுவனத்தில் ஒரு பிரிவின் மேலாளராக பணிபுரிந்து வருபவர் சண்முகம் (வயது 29).

    இவர் தனது அலுவலகத்தில் உள்ள மேஜையில் ரூ.5 ஆயிரத்தை வைத்துவிட்டு தனது வருகையை பதிவு செய்ய சென்று விட்டார். பின்னர் பணத்தை சூப்பர்வைசராக வேலை செய்யும் சுஜித்குமார் மாலிக் என்பவருக்கு தர அவரையும் அழைத்துக்கொண்டு தனது அலுவலக அறைக்கு வந்தார்.

    அப்பொழுது அவருடைய அறையில் இருந்து கையில் பணத்துடன் அந்த கம்பெனியின் மிஷின் ஆபரேட்டராக வேலை செய்யும், உத்திரபிரதேசம் மாநிலம் கேராம் குடவா பகுதியை சேர்ந்த சதீஷ்குண்டு (வயது 25) வெளியே வந்துள்ளார்.

    உடனடியாக சண்முகம் தனது மேஜையை திறந்து பார்த்தபோது அதில் பணம் இல்லாததால், உடனடியாக சத்தம் போட்டு அங்கிருந்த சூப்பர்வைசர் கோடீஸ்வரன் மற்றும் சுஜித்குமார் மாலிக் ஆகியோர் உதவியுடன் சதீஷ்குண்டுவை கையும் களவுமாக பிடித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×