search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "manager arrested"

    • மோகன்ராஜ் அவரை மடக்கிப் பிடித்து ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
    • போலீசார் மணிக்குமார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    மதுரை தெற்கு, புது ராமநாதபுரம் ரோடு, தியாகராஜன் பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (48). இவர், கடந்த 5 மாதங்களாக ஈரோடு, அசோக புரத்தில், வருண்ஜோதி டெக்ஸ் எனும் பெயரில் ஜவுளி நிறுவனம் நடத்தி வந்தார்.

    அதில், தேனி அல்லி நகரம், பங்களா மேடு திட்ட சாலை, சடைய முனீஸ்வரர் கோயில் வீதியைச் சேர்ந்த மணிகுமார் (40) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார். வாரந்தோறும் ஜவுளி விற்பனை யில் வசூலாகும் பணத்தை மணிக்குமார் வங்கியில் செலுத்திவிட்டு கடை உரிமையாளரான மோகன்ராஜூக்கு தகவல் தெரிவிப்பது வழக்கம்.

    இந்நிலையில், கடந்த மாதம் 8-ந் தேதி அன்று வசூல் பணம் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்தை வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டதாக மேலாளர் மணிகுமார், நிறுவன உரிமையாளர் மோகன்ரா ஜூக்கு போன் மூலமாக தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், கடந்த மாதம் 26-ந் தேதி அன்று ஈரோடு வந்த உரிமையாளர் மோகன்ராஜ், வங்கிக் கணக்கை சரி பார்த்தபோது, கடந்த மாதம் 8-ந் தேதி அன்று மணிகுமார் குறிப்பி ட்டவாறு ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்தை வங்கியில் செலுத்தவில்லை என்பது தெரியவந்தது.

    அதுகுறித்து கேட்டபோது, பணத்தை தான் செலவு செய்துவிட்டதாகவும் மறு நாள் கொடுத்து விடுவதாகவும் கூறிச்சென்றவர் அதன் பின் வேலைக்கு வரவில்லையாம். மேலும் அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டதாம்.

    இதையடுத்து, மோகன்ராஜ் தனது நிறுவனத்தில் வேலை செய்யும் ஆள்களுடன் மணிகுமாரை தேடி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று ஈரோடு பஸ் நிலையம் அருகில் மணிகுமார் நின்றிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, மோகன்ராஜ் அவரை மடக்கிப் பிடித்து, ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    மேலும், அவர் அளித்த புகாரின் பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் மணிக்குமார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கைப்பையில் இருந்த செல்போனை ஒரு வாலிபர் பறித்து கொண்டு தப்பிச் செல்ல முயன்றார்.
    • இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    மேட்டுப்பாளையம் சேரன் நகரை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள் யாமினி (வயது22). இவர் கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று யாமினி அரசு பஸ்சில் காந்திபுரம் பஸ் நிலையத்திற்கு சென்றார். அப்போது அவரின் கைப்பையில் இருந்த செல்போனை ஒரு வாலிபர் பறித்து கொண்டு தப்பிச் செல்ல முயன்றார். இதனால், அதிர்ச்சியடைந்த யாமினி சத்தம் போட்டார். சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில், இளம்பெண்ணிடம் செல்போன் பறித்தது கோவை செல்வபுரம் ரங்கசாமி காலனியை சேர்ந்த ஸ்டாலின் (30) என்பதும், இவர் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர். அவரிடம் இருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

    கோவை சீரநாயாக்கன்பாளையம் திலகர் வீதியை சேர்ந்தவர் அஜித் (வயது26), பெயிண்டர். சம்பவத்தன்று இவர் பி.என்.புதூர் புதுக்கிணறு வீதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது நண்பர்கள் 4 பேர் அஜித்திடம் பணம் கடனாக கேட்டனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என கூறினார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி அஜித்தை அடித்து உதைத்தனர்.

    மேலும் பீர்பாட்டிலால் அவரை தாக்கினர். இதில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சண்டையை விலக்கி விட முயன்றனர். ஆனால், 4 பேர் கும்பல் அவர்களையும் மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் அங்கிருந்தவர்கள் காயமடைந்த அஜித்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

    இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அஜித்தை தாக்கியது கோவை வீரகேரளம் சிறுவாணி ரோட்டை சேர்ந்த பீடி ரமேஷ் (31), எஸ்.எஸ். பாளையத்தை சேர்ந்த கார்த்திக் (27), சீரநாயக்கன்பாளையம் ராஜன் காலனியை சேர்ந்த குட்டிகுரா என்ற சரவணன் (31) மற்றும் பி.என். புதூர் ஜீவா நகரை சேர்ந்த எலக்ட்ரீசியன் படையப்பா (24) என்பது தெரியவந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • கூடுதல் வட்டி கேட்டு கொடுமைபடுத்தி வந்தார்.
    • பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

    கோவை:

    கோவை ரத்தினபுரி அருகே உள்ள சாமியப்பன் வீதியை சேர்ந்தவர் ராஜ்கு மார். இவரது மனைவி ரேஸ்மா (வயது 27).

    இவர் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு திருமணம் செய்து வைப்பதற்காக எனது பெற்றோர் எங்கள் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்க்கும் வேணுகோபால் என்பவரிடம் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தனர். அதன் பின்னர் எனது பெற்றோர் கொஞ்சம் கொஞ்சமாக வட்டியையும், அசலையும் திருப்பி கொடுத்து விட்டனர்.

    இந்தநிலையில் வேணுகோபால் என்னிடம் வந்து கூடுதல் வட்டி கேட்டு கொடுமைபடுத்தி வந்தார். சம்பவத்தன்று நான் வீட்டில் இருந்த போது அங்கு வந்த அவர் கூடுதல் வட்டி கேட்டு தகாத வார்த்தைகள் பேசி மிரட்டல் விடுத்தார்.

    எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ரேஸ்மா அளித்த புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் போலீசார் கூடுதல் வட்டி கேட்டு இளம்பெண்ணை மிரட்டிய வேணுகோபாலை கைது செய்தனர்.

    அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    பெண் மேலாளர் உமா மகேஸ்வரி மோசடி செய்ததாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை குடியாத்தத்தில் உள்ளது. இங்கு 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மேலாளராக உமாமகேஸ்வரி (வயது 38) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் தற்போது வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றினார்.

    இவர் குடியாத்தம் கூட்டுறவு வங்கியில் பணியாற்றிய காலத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.97 லட்சத்து 37 ஆயிரம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து துறை உயர் அலுவலர்களுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து குடியாத்தம் வங்கியில் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தணிக்கை செய்தனர்.

    அதன் முடிவில் மன உமாமகேஸ்வரி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து கூட்டுறவு சங்க துணை பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி வேலூர் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இதில் உமாமகேஸ்வரி 33 மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உமா மகேஸ்வரியை கைது செய்தனர். அவர் வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த மோசடியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    பெண் மேலாளர் உமா மகேஸ்வரி மோசடி செய்ததாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு இருந்தால் அவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும் என போலீசார் தெரிவித்தனர்.

    தாராபுரத்தில் வேலை செய்த குடோனில் 134 மூட்டை விதை நெல் திருடிய மானேஜர் கைது செய்யப்பட்டார்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கொளத்து பாளையம் மேட்டுவலசு பகுதியை சேந்தவர் சிவக்குமார் (வயது 43). பல இடங்களில் விதை நெல் குடோன் நடத்தி வருகிறார்.

    பால்சொசைட்டி அருகே ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமாக இடத்தில் ஒரு குடோன் உள்ளது. இதன் மானேஜராக காளிப்பாளையம் காந்திஜி நகரை சேர்ந்த விஜயராஜ் (43) என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளார்.

    நேற்று காலை நெல்குடோனில் இருந்து அவசர அவசரமாக ஆட்கள் மூலம் மானேஜர் விஜயராஜ் வேனில் நெல் மூட்டைகளை ஏற்றினார். இதில் சந்தேகம் அடைந்த இட உரிமையாளரின் மனைவி குடோன் உரிமையாளர் சிவக்குமாருக்கு போன் செய்து விபரத்தை கூறினார்.

    தகவல் அறிந்து குடோன் உரிமையாளர் மானேஜரை தொடர்பு கொண்டு விபரம் கேட்டார். ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதனையடுத்து அவர் தாராபுரம் போலீசில் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மானேஜரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் உரிமையாளருக்கு தெரியாமல் 134 நெல் மூட்டைகளை திருடி சோளக்கடை வீதியில் உள்ள விஸ்வநாதன் என்பவருக்கு விற்றதாக கூறினார்.

    நெல் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து நெல் மூட்டைகளை திருடிய விஜயராஜை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட விதை நெல்லின் மதிப்பு ரூ.2 லட்சம் என்று குடோன் உரிமையாளர் தெரிவித்தார்.

    சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் சொகுசு பாரில் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தியதாக விடுதி மேலாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். #RaidsAtBar #ChennaiBarRaids
    சென்னை:

    சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் தனியாருக்கு சொந்தமான மதுபான சொகுசு பார் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு அரும்பாக்கம் தனிப்படை போலீசார், அந்த சொகுசு பாரின் உள்ளே அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது அங்கு, ‘கரோக்கி’ என்ற ஒரு வகையான பாடலுக்கு ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும் மதுபோதையில் நடனமாடி கொண்டிருந்தனர். சில பெண்கள், மேடையில் அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக நடனம் ஆடியபடி இருந்ததாக கூறப்படுகிறது.

    அங்கிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் உரிய அனுமதி பெறாமல் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து ஆபாச நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த அந்த மதுபான சொகுசு பாரின் மேலாளர் கரன்கேபிரியல்(வயது 40) மற்றும் பார் ஊழியர் தாமோதரன்(32) ஆகிய 2 பேரை அரும்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

    அங்கு ஆபாசமாக நடனமாடிய 6 பெண்களை மீட்டு மயிலாப்பூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுபோல் அனுமதி இன்றி வேறு எந்த சொகுசு பார்களிலாவது ஆபாச நடன நிகழ்ச்சி நடைபெறுகிறதா? என போலீசார் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர்.

    கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி போன்ற பகுதிகளில் சொகுசு பார்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் அதிகளவில் உள்ளது. அங்கு இதுபோன்ற ஆபாச நடனங்கள் நடைபெறுகிறதா? என போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தவேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். #RaidsAtBar #ChennaiBarRaids
    ×