என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "படிக்கட்டு பயணம்"
- படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் :
படியில் பயணம் நொடியில் மரணம்என்ற வாசகத்தை, பெரும்பாலான பஸ்களில் பயணிகள் கவனித்திருக்க முடியும். ஆனால் இந்த வாசகம் வெறும் எழுத்தளவில் மட்டுமே உள்ளது.பெரும்பாலான பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி செல்வதை நாம் அன்றாடம் பார்க்க முடிகிறது.
தங்களை ஹீரோவாக கற்பனை செய்து கொள்ளும் இன்றைய இளம் தலைமுறையினர் சிலர், இதுபோன்ற சாகசங்களை நிகழ்த்தி வருகின்றனர்.அவ்வாறு திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டை அருகே கோவை செல்லும் தனியார் பஸ் ஒன்றில் கல்லூரி மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பஸ் முழுவதும் பயணிகள் நிறைந்திருக்க ஏறும் வழி, இறங்கும் வழி என இரண்டு பக்கமும் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்களில் சிலர் ஒற்றைக்காலை ஆட்டியபடி தங்களது ஹீரோயிசத்தை காண்பித்தபடி சென்றனர்.பின்னால் காரில் வந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.மேலும் இது போன்ற செயலில் ஈடுபடும் மாணவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்