search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேரடி ஒளிபரப்பு"

    • சட்டசபை நிகழ்வுகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக அப்படியே ஒளிபரப்ப இயலாது.
    • தமிழ்நாடு சட்டசபையில் நேரடி ஒளிபரப்பு செய்வதால் என்ன பிரச்சனை ஏற்படும்?

    சென்னை:

    சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி ஜெகதீஷ்வரன் என்பவர் 2012-ம் ஆண்டு பொதுநல வழக்கு தொடர்ந்தார். இவரை தொடர்ந்து இதே கோரிக்கையுடன் தே.மு.தி.க. தலைவர் மறைந்த விஜயகாந்த் 2015-ம் ஆண்டும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 2023-ம் ஆண்டும் பொதுநல வழக்குகளை தொடர்ந்தனர்.

    இந்த வழக்குகள் எல்லாம் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது விஜயகாந்த் தரப்பில் ஆஜரான வக்கீல் வி.டி.பாலாஜி, அண்மையில் மனுதாரர் விஜயகாந்த் இறந்து விட்டார். எனவே, இந்த வழக்கை தொடர்ந்து நடத்த சட்டப்பூர்வமான பிரதிநிதி யார்? என்று கேட்டு தெரிவிப்பதாக கூறினார்.

    இதையடுத்து அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, "சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப சபாநாயகர் முழு விருப்பத்துடன் உள்ளார். ஆனால், இதை பகுதி பகுதியாகத்தான் அமல்படுத்த முடியும். தற்போது சட்டசபை கேள்வி நேரம், கவனஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதங்கள், கவர்னர் உரை, பட்ஜெட் உரைகள், அமைச்சர்களின் பதிலுரைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது'' என்று கூறினார்.

    அதற்கு நீதிபதிகள், "ஆனால், சட்டசபை நிகழ்வுகளில் ஆளும் கட்சியினருக்கு பாதகமான காட்சிகள், எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான காட்சிகளை எல்லாம் வெட்டி, தணிக்கை செய்து ஒளிபரப்புவதாகத்தான் அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டு்கின்றனர். எதிர்க்கட்சியினரின் வாதங்களை காட்டுவதே இல்லை என்கின்றனர். அதற்கு என்ன சொல்கிறீர்கள்?'' என்று கேள்வி எழுப்பினர்.

    ''இந்த வழக்கு 2012-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. அப்போது அவர்கள் (அ.தி.மு.க.வினர்) நேரடி ஒளிபரப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இப்போது நேரடி ஒளிபரப்பு வேண்டும் என்கின்றனர்'' என்ற அட்வகேட் ஜெனரல் கூறினார்.

    மேலும், "சட்டசபை நிகழ்வுகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக அப்படியே ஒளிபரப்ப இயலாது. ஏன் என்றால் உறுப்பினர்கள் ஏதாவது அவதூறாக பேசினால் அது அப்படியே ஒளிபரப்பாகிவிடும். அதை சமூக வலைத்தளங்கள் எடுத்து மறு ஒளிபரப்பு செய்து வைரலாக்கி விடுவர். அந்த பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கினால், அது பயனற்றதாகி விடும்'' என்றார்.

    மனுதாரர் ஜெகதீஷ்வரன் சார்பில் ஆஜரான வக்கீல்கள் கார்த்திக் சேஷாத்திரி, எலிசபெத் சேஷாத்திரி ஆகியோர், "அதுபோன்ற விவாதங்கள் நேரடி ஒளிபரப்பில் வந்தாலும், எதிர்காலத்தில் அந்த காட்சியை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிடலாம். பாராளுமன்றம் மற்றும் மக்களவையில் நேரடியாகத்தான் ஒளிபரப்பு செய்யப்படுகிறது'' என்றனர்.

    அதற்கு நீதிபதிகள், பாராளுமன்றத்தில் மட்டும் எப்படி நேரடி ஒளிபரப்பு செய்கின்றனர்? அவர்கள் செய்யும்போது, தமிழ்நாடு சட்டசபையில் நேரடி ஒளிபரப்பு செய்வதால் என்ன பிரச்சனை ஏற்படும்? சட்டசபை விவாதங்கள் அனைத்தும் அவைகுறிப்பாக புத்தகமாக வெளியிடும்போது, நேரடி ஒளிபரப்பு செய்தால் என்ன? தேவையில்லாத சம்பவம் நடக்கும்போது, அதுபோன்ற காட்சிகளை நீக்கி விட்டு சிறிது நேரம் கழித்து ஒளிபரப்பலாமே? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அட்வகேட் ஜெனரல், பாராளுமன்றத்தில் நேரடி ஒளிபரப்பு குறித்து எனக்கு தெரியவில்லை. இருந்தாலும், இதுகுறித்து அரசிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்கிறேன்'' என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை மார்ச் 11-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    • கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.
    • ரெயில் நிலையங்களில் உள்ள 9000 திரைகளில் கும்பாபிஷேக நிகழ்வு.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியாவில் ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.

    இதற்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்கள் வண்ண விளக்குகளால் ஒளிரும் என ரெயில்வே நிர்வாகம் நேற்று அறிவித்திருந்தது.

    இந்நிலையில், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்த்துள்ளது.

    அதாவது, நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் உள்ள 9000 திரைகளில் கும்பாபிஷேக நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×