search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல் அறுவடை"

    • குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல்
    • நடவடிக்கையும் எடுக்க வில்லை என விவசாயிகள் குற்றம்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கதிர்குளம் கிராமத்தில் தொடர்ந்து கடந்த 20 நாட்களாக விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானை நெல், வாழை மரம், தக்காளி போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    இதனைத் தொடர்ந்து நேற்று இரவு கதிர்குளம் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை பிச்சாண்டி என்பவருக்கு சொந்தமான நெல் பயிர்களை சேதப்படுத்தியது.

    மேலும் கோவர்தன் என்பவருக்கு சொந்தமான தக்காளி செடிகளையும், தேவராஜ் என்பவருக்கு சொந்தமான வாழை மரங்களையும் மிதித்து சேதப்படுத்தியது.

    இந்த நிலையில் கதிர்குளம் கிராமத்தில் யானைக்கு பயந்து விவசாயிகள் அறுவடைக்கு முன்னதாகவே நெல் பயிர்களை அவசர, அவசரமாக அறுவடை செய்து வருகின்றனர்.

    இது குறித்து குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் கூட, அவர்கள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என கதிர்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    மேலும் விவசாய நிலங்களுக்குள் யானைகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

    • கோடை பருவத்தில் சாகுபடி செய்த நெல்லை அறுவடை செய்யும் பணி நடைபெற்றது.
    • நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல்செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை வட்டத்தில் தற்போது கோடை பருவத்தில் சாகுபடி செய்த நெல்லை அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை தங்கு தடையின்றி கொள்முதல் செய்வதற்காக இரும்புதலை, ரெங்கநாதபுரம், பொன்மான்மேய்ந்தல்லூர், சாலியமங்களம், கோவத்த குடி, கொத்தங்குடி, நிம்மேலி, காந்தாவனம், ராராமுத்திரகோட்டை உள்பட பல பகுதிகளில் உள்ள அரசு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல்கொள்முதல் செய்யு ம்பணி நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் அம்மாபேட்டை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருவதால் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல்செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளதோடு மழை பொழிவு காரணமாக நெல் அறுவடை செய்யும் பணியும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    • விவசா யிகளின் கோரிக்கையினை ஏற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முத்தரப்புக் கூட்டம் நடை பெற்றது.
    • விவசாயிகளின் அறுவடை பணிகளுக்கு ஒத்துழைப்புவழங்கிட வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் 2023ஆண்டுக்கு தனியார் நெல்அறுவடை எந்திரங்களுக்கான வாடகையினை நிர்ணயம் செய்து செயல்படுத்த வேண்டுமென்ற விவசா யிகளின் கோரிக்கையினை ஏற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முத்தரப்புக் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் விவசா யிகள் மற்றும் தனியார் நெல் அறுவடை எந்திரங்கள் உரிமையாளர்களின் கருத்துக்களை கேட்டறி ந்ததன் அடிப்படையில் தனியார் நெல் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை நிர்ணயம் செய்துகடலூர், மாவட்டக லெக்டர் பாலசுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி 2023 ஆண்டுக்கு சம்பா நெற்பயிர்களை அறுவடை செய்ய , பெல்ட் டைப் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு மணி ஒன்றுக்கு வாடகையாக ரூ.2,400 , டயர் டைப் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு மணி ஒன்றுக்கு வாடகையாக ரூ.1,750 வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனவே நெல் அறுவடை எந்திர உரிமையாளர்கள் நிர்ணயம் செய்யப்பட்ட வாடகைத் தொகைக்கு மிகாமல் விவசாயிகளின் அறுவடை பணிகளுக்கு ஒத்துழைப்புவழங்கிட வேண்டும். 

    தவறும் பட்சத்தில் கூடுதல் வாடகை கோரும் எந்திர உரிமையாளர்கள் மீதுசம்மந்தப்பட்ட பகுதி வட்டாட்சியர்கள், வேளாண்மைப் பொறி யியல் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம் என கலெக்டர் பாலசு ப்ரமணியம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்ப ட்டுள்ளது.

    • மழை குறைந்து வெயில் அடித்து வருவதால் அறுவடை தீவிரமடைந்துள்ளது.
    • விவசாயிகள் வங்கிக்கணக்கு ,பாஸ் புத்தகம் பெறப்பட்டு கொள்முதல் செய்த நெல்லுக்குரிய தொகை உடனடியாக அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

    மடத்துக்குளம் :

    உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை பழைய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள கல்லாபுரம், ராமகுளம் கால்வாய் பாசனத்தின் கீழ் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.

    இப்பகுதிகளில் இரண்டாம் போகம் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டது. தொடர் மழை பெய்து வந்ததால், அறுவடை தாமதமானது. தற்போது மழை குறைந்து வெயில் அடித்து வருவதால் அறுவடை தீவிரமடைந்துள்ளது.

    விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் ருத்ராபாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில், அரசு நெல் கொள்முதல் மையம் துவக்கப்பட்டுள்ளது.

    இம்மையத்தில் சன்ன ரகம் 2,160 ரூபாய்க்கும், மற்ற ரகங்கள் 2,115 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    உடுமலை பகுதிகளில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து தொடர்ந்து மழை பெய்ததால்,நெல் அறுவடை பாதித்தது. வயல்களில் அறுவடை இயந்திரம் இறக்க முடியாத அளவிற்கு நீர் தேங்கியிருந்தது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மழை குறைந்து, வெயில் அடித்து வருவதால் வயல்கள் காய்ந்துள்ளன.இதனால் கல்லாபுரம், பூளவாடி, மாவளம்பாறை, வேல் நகர் உள்ளிட்ட அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் நெல் அறுவடை தீவிரமடைந்துள்ளது.

    வேளாண் பொறியியல் துறை சார்பில் இப்பகுதிகளுக்கு அறுவடை இயந்திரமும் ஒதுக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் நெல் அறுவடையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில் அரசு கொள்முதல் மையத்தில் நெல் விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மழை குறைந்துள்ளதால் அறுவடை தீவிரமடைந்துள்ளது. கடந்த 1-ந் தேதி மையம் துவக்கப்பட்டு, 6-ந் தேதி முதல் கொள்முதல் நடந்து வருகிறது. 1,500 மூட்டை வரை நெல் வரத்து காணப்படுகிறது.அரசு கொள்முதல் மையத்திற்கு விவசாயிகள் கொண்டு வருவதற்கு முன் உரிய ஆவணங்களுடன் இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    வி.ஏ.ஓ., அனுமதி கொடுத்ததும் முன்னுரிமை அடிப்படையில் மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி வைக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.விவசாயிகள் வங்கிக்கணக்கு ,பாஸ் புத்தகம் பெறப்பட்டு கொள்முதல் செய்த நெல்லுக்குரிய தொகை உடனடியாக அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். 

    ×