search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாய் குட்டி"

    • சமீபத்தில் சரவணனை தொடர்பு கொண்ட ஒரு குழு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இந்த வகை நாய் குட்டி வேண்டும் என்று கூறினர்.
    • நான் வளர்த்த நாய்க்கு ட்டியை ராகுல் காந்தி ஆசையாக பெற்று கொண்டார்.

    கரூர்:

    கரூர் சின்னாண்டாங் கோவில் எல்.பி.ஜி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 32). வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். நாய்கள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர் வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்து வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.

    ரஷ்யாவின் ஜாக் ரசல் டெரியர் வகையை சேர்ந்த இரண்டு ஜோடி நாய்க்குட்டிகளை 10 ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்தார். தற்போது அவை ஈன்று வரும் குட்டிகளை விற்பனை செய்து வருகிறார்.

    இந்த அரிய வகை நாய்கள் குறித்த தகவல்களை அவர் வலைதளங்களில் வெளியிடுவார். அதைப் பார்த்த கேரளா போலீசார் கடந்த ஆண்டு கரூர் வந்து 4 குட்டிகளை வாங்கிச் சென்றனர்.

    இதற்கிடையே சமீபத்தில் சரவணனை தொடர்பு கொண்ட ஒரு குழு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இந்த வகை நாய் குட்டி வேண்டும் என்று கூறினர்.

    பின்னர் கடந்த மாதம் கரூரில் உள்ள அவரது அலுவலகத்திற்கு ராகுலின் உதவியாளர்கள் வந்தனர். பின்னர் நாய் குட்டியின் வளர்ப்பு முறை குறித்து கேட்டு அறிந்தனர். அதன் பின்னர் கேரளா வந்த ராகுல் காந்தியை சரவணன் நேரில் சந்திக்க ஏற்பாடு செய்தனர். அதை தொடர்ந்து தொழிலதிபர் சரவணன் 3 ஜாக் ரசல் டெரியர் வகை நாய் குட்டிகளுடன் அவரை சந்தித்தார்.

    அப்போது மூன்றில் ஒரு குட்டியை ராகுல் காந்தி தேர்வு செய்தார். அந்த நாய்க்குட்டி பிறந்து 40 நாட்கள் மட்டுமே ஆகியிருந்தது. அதனால் மீண்டும் கரூருக்கு கொண்டு வரப்பட்டு 60 நாட்கள் ஆன பின்னர் அதனை டெல்லி க்கு எடுத்துச் சென்று ராகுல் காந்தி வீட்டில் அவரிடம் சரவணன் நேரில் வழங்கினார். இது தொட ர்பாக சரவணன் கூறும்போது,இந்த வகை நாய்கள் குடும்ப உறுப்பினர்களிடம் எளிதாக பழகும். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். இதனால் பலரும் ஆர்வமாக வாங்கி செல்கிறார்கள்.

    நான் வளர்த்த நாய்க்கு ட்டியை ராகுல் காந்தி ஆசையாக பெற்று கொண்டார். அந்த தருணம் மகிழ்ச்சிகரமாக இருந்தது என்றார்.

    • மழை வெள்ளத்தால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள கிராமத்தை சூழ்ந்தது.
    • நாய்க்குட்டிகள் இருப்பதை கண்டனர் குட்டிகளை மீட்டு தாய்நாயிடம் ஒப்படைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நந்திகம் அருகே உள்ள அய்த்தாபுரம் தேசிய நெடுஞ்சாலை ஒட்டி நதி ஒன்று உள்ளது.

    நதிக்கரையை ஒட்டி உள்ள மாட்டுக்கொட்டகையில் நாய் ஒன்று குட்டிகளை ஈன்றது. நேற்று அதிகாலை தாய் நாய் உணவு தேடி மறுக்கரைக்கு வந்தது.

    அப்போது திடீரென ஏற்பட்ட மழை வெள்ளத்தால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள கிராமத்தை சூழ்ந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த நந்திகம் அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

    அப்போது அங்கிருந்த தாய் நாய் அங்கும் இங்கும் அலறியபடி மறுக்கரையை நோக்கி குறைத்தது.

    இதனை கண்ட போலீசார் படகு மூலம் மறுகரைக்கு சென்று பார்த்தனர். அங்கு இருந்த கொட்டகையில் நாய்க்குட்டிகள் இருப்பதை கண்டனர் குட்டிகளை மீட்டு தாய்நாயிடம் ஒப்படைத்தனர்.

    தனது குட்டிகளை கண்ட நாய் போலீசாருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வாலை ஆட்டியபடி ஆனந்த கண்ணீர் வடித்தது.

    • கால்வாய் அருகில் நின்று கொண்டு குரைத்துக் கொண்டே இருந்துள்ளது.
    • கால்வாய்க்குள் இருந்து குட்டி நாய்களின் சப்தம் கேட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள செம்மிபாளையம் ஊராட்சி குப்புசாமிநாயுடுபுரத்தில் இந்திரா காலனியில் உள்ள ஒரு தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஒரு தாய் நாய் சாக்கடை கால்வாய்க்குள் உள்ளே சென்று குட்டிகளுக்கு பால் கொடுத்துவிட்டு பின்னா் மேலே வருவதுமாக இருந்துள்ளது. மேலும் கால்வாய் அருகில் நின்று கொண்டு குரைத்துக் கொண்டே இருந்துள்ளது.

    இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் ஒருவா் சாக்கடை கால்வாய் அருகில் சென்று சிமெண்ட் சிலேப் போட்டு மூடப்பட்டிருந்த பகுதியில் இருந்த சிறிய இடைவெளி வழியாக உள்ளே பாா்த்துள்ளாா். அப்போது கால்வாய்க்குள் இருந்து குட்டி நாய்களின் சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளாா்.

    அதன் பேரில் நிலைய அலுவலா் முத்துக்குமாரசாமி தலைமையில் சென்ற தீயணைப்பு வீரா்கள் சாக்கடை கால்வாய் சந்தில் கையை விட்டு 6 நாய் குட்டிகளையும் மேலே எடுத்து வெளியே விட்டனா். அப்போது தாய் நாய் அருகிலேயே நின்று பாா்த்துக் கொண்டிருந்தது. குட்டிகள் அனைத்தும் மேலே வந்ததும் அனைத்து குட்டிகளையும் அழைத்து கொண்டு சென்றது. நாய் குட்டிகளை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினா்.

    ×