search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வெள்ளத்தால் பிரிந்த நாய் குட்டிகளை தாயுடன் சேர்த்த போலீசார்
    X

    வெள்ளத்தால் பிரிந்த நாய் குட்டிகளை தாயுடன் சேர்த்த போலீசார்

    • மழை வெள்ளத்தால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள கிராமத்தை சூழ்ந்தது.
    • நாய்க்குட்டிகள் இருப்பதை கண்டனர் குட்டிகளை மீட்டு தாய்நாயிடம் ஒப்படைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நந்திகம் அருகே உள்ள அய்த்தாபுரம் தேசிய நெடுஞ்சாலை ஒட்டி நதி ஒன்று உள்ளது.

    நதிக்கரையை ஒட்டி உள்ள மாட்டுக்கொட்டகையில் நாய் ஒன்று குட்டிகளை ஈன்றது. நேற்று அதிகாலை தாய் நாய் உணவு தேடி மறுக்கரைக்கு வந்தது.

    அப்போது திடீரென ஏற்பட்ட மழை வெள்ளத்தால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள கிராமத்தை சூழ்ந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த நந்திகம் அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

    அப்போது அங்கிருந்த தாய் நாய் அங்கும் இங்கும் அலறியபடி மறுக்கரையை நோக்கி குறைத்தது.

    இதனை கண்ட போலீசார் படகு மூலம் மறுகரைக்கு சென்று பார்த்தனர். அங்கு இருந்த கொட்டகையில் நாய்க்குட்டிகள் இருப்பதை கண்டனர் குட்டிகளை மீட்டு தாய்நாயிடம் ஒப்படைத்தனர்.

    தனது குட்டிகளை கண்ட நாய் போலீசாருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வாலை ஆட்டியபடி ஆனந்த கண்ணீர் வடித்தது.

    Next Story
    ×