search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி விபத்து"

    • கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காபு மணி பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி இறந்தார்.
    • விபத்தில் பலியான காபு மணிக்கு சிலை வடிக்க வேண்டும் என அவரது சகோதர, சகோதரிகள் முடிவு செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் சங்கராபுரம் மண்டலம் கட்சி பிடி பகுதியை சேர்ந்தவர் காபு மணி (வயது 29). இவருக்கு வரலட்சுமி என்ற அக்காவும், சிவைய்யா என்கிற அண்ணன் மற்றும் தம்பி ராஜா உள்ளனர்.

    இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காபு மணி பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி இறந்தார்.

    விபத்தில் பலியான காபு மணிக்கு சிலை வடிக்க வேண்டும் என அவரது சகோதர, சகோதரிகள் முடிவு செய்தனர்.

    இதையடுத்து காபு மணிக்கு 7 அடி உயரத்தில் உலோக சிலை வடித்தனர். ரக்சா பந்தன் விழாவையொட்டி அவரது அக்கா வரலட்சுமி, அண்ணன் சிவைய்யா மற்றும் தம்பி ராஜா ஆகியோர் காபுமணி உருவ சிலைக்கு ஆள் உயர மாலை அணிவித்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

    அப்போது அவர்கள் தன்னுடைய தங்கை பைக் விபத்தில் இறந்து விட்டதால் பொதுமக்கள் வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணிந்து கவனமாக வாகனத்தில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர்.

    பின்னர் காபுமணி சிலையை தங்களது வீட்டிற்கு முன்பாக பிரதிஷ்டை செய்தனர்.

    தங்கை மீது கொண்ட பாசத்தால் அவருக்கு சிலை அமைத்து ஊர்வலமாக கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • எதிரே வேகமாக வந்த கார் குண்டும் குழியுமாக உள்ள சாலையில் இறங்கியதால் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ்சின் மீது மோதி கவிழ்ந்தது.
    • கார் பஸ் மீது மோதிய வேகத்தில் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் சீட்டிலிருந்து எகிறி சாலையில் விழுந்தார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருவதால் சாலைகள் போக்குவரத்துக்கு லாயக்கு இன்றி குண்டும் குழியுமாக உள்ளது.

    பொட்டி ஸ்ரீ ராமுலு மாவட்டம் காவனி பட்டினத்தில் இருந்து நெல்லூர் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அப்போது எதிரே வேகமாக வந்த கார் குண்டும் குழியுமாக உள்ள சாலையில் இறங்கியதால் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ்சின் மீது மோதி கவிழ்ந்தது. கார் பஸ் மீது மோதிய வேகத்தில் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் சீட்டிலிருந்து எகிறி சாலையில் விழுந்தார்.

    இதனால் பஸ் தாறுமாறாக ஓடியது. சுமார் 150 மீட்டர் தூரம் டிரைவர் இல்லாமல் பஸ் ஓடியது பஸ்சில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.

    இதனால் பதறிபோன பஸ் கண்டக்டர் சினிமா பாணியில் வேகமாக ஓடிச் சென்று டிரைவர் சீட்டில் அமர்ந்து பிரேக் பிடித்து பஸ்சை சாலையின் ஓரமாக நிறுத்தினார்.

    பதட்டத்தில் இருந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவனி பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த பஸ் டிரைவர் மற்றும் காரில் இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கண்டக்டர் மட்டும் பஸ்சை நிறுத்தாமல் இருந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு அசம்பாவிதம் நடந்து இருக்கும். சாமர்த்தியமாக பிரேக் போட்டு பஸ்சை நிறுத்திய கண்டக்டரை பயணிகள் பாராட்டினர்.

    • பூதலப்பட்டு-நாயுடு மங்கலம் இடையே பி.கொத்தகோட்டை என்ற இடத்தில் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து மேம்பால தடுப்பு சுவரில் மோதி சர்வீஸ் சாலையில் கவிழ்ந்தது.
    • காரில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அவினாஷ் போலீஸ்காரர் அனில் மற்றும் கார் டிரைவர் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    திருப்பதி:

    கர்நாடக மாநில போலீசார் ஒரு வழக்கு விசாரணைக்காக நேற்று திருப்பதிக்கு வந்தனர்.

    விசாரணை முடிந்து இன்று அதிகாலை 4.30 மணி அளவில் காரில் திரும்பி சென்று கொண்டு இருந்தனர். சித்தூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பூதலப்பட்டு-நாயுடு மங்கலம் இடையே பி.கொத்தகோட்டை என்ற இடத்தில் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து மேம்பால தடுப்பு சுவரில் மோதி சர்வீஸ் சாலையில் கவிழ்ந்தது.

    காரில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அவினாஷ் போலீஸ்காரர் அனில் மற்றும் கார் டிரைவர் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    மேலும் காரில் இருந்த 3 போலீசார் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சித்தூர் போலீஸ் சூப்பிரண்டு நிஷாந்த் ரெட்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஈடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×