search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி அருகே லாரி-பஸ் மோதல் - 30 பெண் தொழிலாளர்கள் காயம்
    X

    திருப்பதி அருகே லாரி-பஸ் மோதல் - 30 பெண் தொழிலாளர்கள் காயம்

    திருப்பதி அருகே இன்று காலை லாரி மீது தனியார் கம்பெனி பஸ் மோதி 30 பெண் தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி அடுத்த காளஹஸ்தி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ சிட்டி தொழிற்பேட்டை உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற் சாலையில் திருப்பதி, ரேணிகுண்டா, ஏர்பேடு காளஹஸ்தி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இன்று காலை முதல் ஷிப்டுக்கு 30 பெண் தொழிலாளர்கள் அந்நிறுவனத்திற்கு சொந்தமான பஸ்சில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த பஸ் காளஹஸ்தி-சென்னை நெடுஞ்சாலையில் வரதய்ய பாளையம் என்ற இடத்தில் சென்றபோது முன்னால் சென்ற லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் பஸ் டிரைவர் உள்பட 30 பெண் தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த வரதய்ய பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிட்டி தொழிற்பேட்டையில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×