search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமுடி பராமரிப்பு"

    • தகுந்த ஷாம்பூவைக் கொண்டு வழக்கமாக முடியை அலச வேண்டும்.
    • அகலமான பல் கொண்ட சீப்பைப் பயன்படுத்துதல் வேண்டும்.

    * முடி உதிர்வைத் தடுக்க சரியான முடி பராமரிப்பு வழக்கத்தை உருவாக்குவது மிகவும் முக்கியமானது. தகுந்த ஷாம்பூவைக் கொண்டு வழக்கமாக முடியை அலச வேண்டும். உங்கள் தலைமுடியை நீரேற்றமாக வைத்திருக்க கண்டிஷனிங் செய்தல் மற்றும் ஈரமான முடியை மெதுவாக அகற்றுவதற்கு அகலமான பல் கொண்ட சீப்பைப் பயன்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். உங்கள் தலைமுடியை எப்போதும் காற்றில் உலர்த்த வேண்டும். கூடுதலாக, முடி கட்டுவதைக் குறைக்க முயற்சிக்கவும், நீங்கள் அதை கட்டும்போது, மென்மையான, துணியால் செய்யப்பட்ட ஹேர் பேண்டுகளைப் பயன்படுத்த வேண்டும்.

    * தலைக்கு குளிக்கும் போது தலையில் கட்டாயம் எண்ணெய் இருக்க வேண்டும். எண்ணெய் இல்லாத தலையை தண்ணீர் ஊற்றி ஷாம்பு போட்டு தலை கசக்கினால் கட்டாயமாக முடி உதிர்வு அதிகமாகும்.

    * தினமும் தலைக்கு குளிப்பது அவ்வளவு சரியான விஷயம் அல்ல. முடிந்தவரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு குளிக்கலாம். தினமும் தலைக்கு குளித்தால் முடி உதிர்வது அதிகரிக்கத்தான் செய்யும்.

    * ஷாம்புகள், கண்டிஷனர்கள் மற்றும் ஸ்டைலிங் பொருட்கள் போன்ற ரசாயனங்கள் நிறைந்த முடி தயாரிப்புகளை அதிகமாக பயன்படுத்துவதால் முடி உதிர்வு ஏற்படலாம். உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் மென்மையாக இருக்கும் லேசான, சல்பேட் இல்லாத பொருட்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

     * நிறைய பேர் தினமும் தலை சீவினால் முடி உதிர்கிறது என்று ஒரு கொண்டையை கட்டி வைத்துக் கொள்வார்கள். 2 நாட்கள் தலை சீவாமல் இருந்து, மூன்றாவது நாள் தலையை சீவும் போது அதிலிருக்கும் சிக்கு இன்னும் அதிகப்படியான முடி உதிர்வை உண்டாகும். தலை சீவுவது என்பது நம்முடைய மண்டை ஓட்டில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். தலைக்கு மசாஜ் கொடுக்கும்.

    * வெயில் காலம் வரப்போகிறது. தலை அடிக்கடி அழுக்காகத் தொடங்கும். அதிகமாக தலையில் தூசு பட்டு, வியர்வை படிந்தால் முடி உதிர்வு அதிகமாகும். வெளியே செல்லும் போது உங்களுடைய தலையில் ஒரு காட்டன் துணியை கட்டிக்கொண்டு அதன் பின்பு வெளியே சென்றால் நல்லது. தினமும் பஸ்சில் டிராவல் செய்பவர்கள் கூட தலையில் ஒரு துணியை கட்டிக் கொண்டு செல்வது நல்லது. காற்று மாசுபாட்டால் ஏற்படும் முடி உதிர்வு குறையும்.

    • மழைக்காலத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது.
    • ஈரப்பதம் நிறைந்த வானிலை காரணமாக சருமமும், கூந்தலும் பாதிக்கப்படும்.

    பருவமழை காலங்களில் உடல் ஆரோக்கியம் மற்றும் பாராமரிப்பில் கூடுதல் சுவனம் செலுத்த வேண்டும். கோடை காலத்தில் கடுமையான தணித்து குளிர்ச்சியை தந்தாலும் உடல் நலத்தை பொறுத்தவரையில் மழைக்காலத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது. ஈரப்பதம் நிறைந்த வானிலை காரணமாக சருமமும், கூந்தலும் அதிகமாக பாதிக்கப்படும். தலைமுடி எளிதில் வலுவிழக்கும். தலையில் அரிப்பு, பொடுகு, முடி உதிர்வு போன்ற பிரச்சினைகள் உண்டாகும். இவற்றை தவிர்ப்பதற்கான டிப்ஸ் இதோ...

    மழைக்காலமாக இருந்தாலும், சில சமயங்களில் தலை பகுதியில் அதிகமாக வியர்வை வெளியேறும். இந்த ஈரத்தால் தலையில் அரிப்பு. பொடுகு, பிசுபிசுப்பு என பல பிரச்சினைகள் ஏற்படும். இதை தவிர்க்க தினமும் தலைமுடியை சுத்தமான வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். இதற்கு ரசாயனம் கலக்காத மென்மையான ஷாம்புவை மட்டும் பயன் படுத்தலாம்.

    தலைக்கு குளிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தலைமுடியை பிரி-கண்டிஷனிங் செய்ய வேண்டும். தேங்காய் எண்ணெய் அல்லது எசன்ஷியல் எண்ணெய்யை உச்சந்தலை முதல் முடியின் வேர்க்கால்கள் வரை முடியின் நுனி என அனைத்து பகுதியிலும் விரல் நுனியால் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இது தலைமுடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

    மழைக்காலத்தில் தலைமுடியில் இருக்கும் ஈரம் எளிதில் உலராது. இதனால் சளி, தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். எனவே தலைமுடி தானாக உலரும் வரை காத்திருக்காமல், தலைக்கு குளித்த பின்பு ஹேர் டிரையரை பயன்படுத்தி உலர்த்தலாம். இதில் குறைந்த அளவு வெப்பநிலையை மட்டும் பயன்படுத்தி முடியை உலர்த்துவது நல்லது.

    இவ்வாறு செய்யும்போது பொடுகு, தலைமுடி உதிர்வு போன்ற பிரச்சினைகளையும் தடுக்க முடியும். மழைக்காலத்தில், தலைமுடியை இறுக்கி கட்டாமல், காற்றோட்டமான வகையில் தளர்வாக பின்னிக்கொள்வது நல்லது. இது உச்சந்தலையில் வியர்வையால் ஏற்படும் கிருமித்தொற்றை தடுக்க உதவும்.

    தலைமுடியை சீரான இடைவெளியில் டிரிம் செய்ய வேண்டும். இது முடியின் நுனியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுவதுடன், தலைமுடிக்கு சீரான வடிவத்தையும் தரும். இதனால் கூந்தலை பராமரிப்பதும் எளிதாகும்.

    ஈரமான கூந்தலுடன் வெளியே செல்லும்போது, தூசி, அழுக்கு ஆகியவை எளிதாக கூந்தலில் படியக்கூடும். இது தலைமுடியின் தன்மையை பாதிப்பதோடு முடி உதிர்வு பிரச்சினையையும் உண்டாக்கும். எனவே கூந்தலை நன்றாக உலர்த்திய பின்பு வெளியில் செல்வது நல்லது.

    தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு நாம் பயன்படுத்தும் ஷாம்புவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ரசாயனம் கலக்காத கடினத்தன்மை இல்லாத ஷாம்புவை பயன்படுத்துவது நல்லது. மழையில் நனைந்தால் வீட்டிற்கு வந்தவுடன் மிருதுவான ஷாம்பு கொண்டு உடனடியாக தலைமுடியை கழுவ வேண்டும்.

    முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கற்றாழைக்கு முக்கிய பங்கு உண்டு. வாரத்திற்கு ஒருமுறை, கற்றாழை ஜெல்லை தலையில் மாஸ்க் போல பூசவும். 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து சுத்தமான தண்ணீர் கொண்டு தலைமுடியை கழுவவும். இதனால் பொடுகுத்தொல்லை, முடி உதிர்வும் குறையும், முடியின் வேர்க்கால்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

    ×