search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தன்னார்வலர்"

    • சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • சட்ட தன்னார்வலர் கோட்டைச்சாமி முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே தினையத்தூர் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் படியும் ராமநாதபுரம் மாவட்டம் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்படியும், திருவாடானை வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    வழக்கறிஞர் வினோத்குமார் கலந்து கொண்டு சட்ட விழிப்புணர்வு பற்றி பேசினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். சட்ட தன்னார்வலர் கோட்டைச்சாமி முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • முதலுதவி பயிற்சி ஒவ்வொரு தனி நபருக்கும் அவசியமானது.
    • முதலுதவி பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    உலகெங்கிலும் உள்ள பலர் சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால் விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் பலர் உயிரை இழக்கிறார்கள்.

    ஆனால் ஒரு நபருக்கு முதலுதவி பற்றிய அறிவு இருந்தால் தொழில்முறை உதவிக்காக காத்திருக்கும் போது ஒருவரின் உயிரைக் காப்பாற்ற முடியும். மேலும் பேரழிவுகள் மற்றும் தினசரி அவசர நிலைகளின் தாக்கத்தை பெருமளவில் குறைக்க உதவும்.

    அந்த வகையில் உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு முதலுதவி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் 108 ஆம்புலன்ஸ் சார்பில் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு உள்ளரங்கில் 100 ஆப்தமித்ரா, ரெட்கிராஸ் தன்னார்வலர்கள் முதலுதவி செய்யும் முறையினை ஒத்திகையாக வெளிப்படுத்தினர்.

    அப்போது ஒருவரை மயக்க நிலையில் இருந்து காத்தல், எலும்பு முறிவு, காயங்களுக்கு கட்டு போடுதல், அடிபட்டவர்களை சுமந்து செல்லுதல் மற்றும் மிகவும் அத்தியாவசியமான கார்டியோ புல்மோனரி மறுமலர்ச்சி குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

    இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் பேசும்போது,

    முதலுதவி பயிற்சி ஒவ்வொரு தனி நபருக்கும் அவசியமானது.

    பேரிடர் காலங்களிலும், விபத்து காலங்களிலும் கோல்டன் ஹவர் என சொல்லப்படும் நேரத்தில் முறையான முதலுதவி செய்வதன் மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும்.

    அத்தமித்ரா தன்னார்வலர்கள் அதற்கு முன்னோ டியாக திகழ்கிறார்கள்.

    மாவட்டத்திற்கு அவர்கள் பெரிதும் உதவிகரமாக திகழ்வார்கள்.

    ரெட்கிராஸ் அமைப்பின் மூலம் முதலுதவி பயிற்சி மாவட்டத்திலுள்ள அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என்றார்.

    இந்நிகழ்வில் யூத் ரெட்கிராஸ் ஆலோசகர் ஜெயக்குமார், ஜூனியர் ரெட்கிராஸ் ஆலோசகர் பிரகதீஷ், ரெட்கிராஸ் பயிற்றுனர் சுரேஷ் குமார், தாசில்தார் சக்திவேல், 108 ஆம்புலன்ஸ் உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ரெட்கிராஸ் துணை சேர்மன் பொறியாளர் முத்துக்குமார், பொருளாளர் சேக்நாசர் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • மார்த்தாண்டம் நேசமணி நினைவு கல்லூரியில் நடந்தது
    • இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு இந்த பயிற்சியை தொடங்கி வைத்தார்.

    கன்னியாகுமரி :

    தமிழக அரசின் சார்பாக மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு முழுவதும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் இல்லம் தேடி கல்வியில் பணியாற்றி வரும் தன்னார்வலர்களை ஈடுபடுத்துவது என்று தமிழக அரசு தெரி வித்துள்ளது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு இந்த பணிக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட் டத்திலும் மாவட்ட கலெக்டர் தலைமையில்இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு இந்த பயிற்சியை தொடங்கி வைத்தார்.

    இதன் பின்னர் ஒவ்வொரு வட்டாட்சியர்கள் தலைமையிலும் இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் விளவங்கோடு வட்டாட்சியர் குமாரவேல் தலைமையில் நேற்று மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மேல்புறம், முஞ்சிறை, கிள்ளியூர் வட்டாரத்திற்கு உட்பட்ட விருப்பப்பட்ட இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த பயிற்சிக்கு இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜாண்சன் முன்னிலை வகித்தார். இந்த பணியினை செயல்படுத்துவதற்கு பொது மக்களிடையே வழங்கப்படும் விண்ணப்பங்களை எப்படி பூர்த்தி செய்வது மற்றும் என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் மேலும் பொது மக்களிடையே எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது உட்பட அனைத்திற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

    பின்னர் குமரி மாவட்ட வருவாய் அலுவலர் பால சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த திட்டத்தை பற்றி பேசினார். பின்னர் தன்னார்வலர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனைத்து சந்தேகங்களையும் ஆர்வத் துடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.

    • தன்னார்வலருக்கு விருது வழங்கப்பட்டது.
    • நிறுவனர் சபரிமலைநாதனுக்கு, நவாஸ் கனி எம்.பி. விருது வழங்கினார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் நேரு யுவகேந்திரா சார்பில் பேச்சு, கவிதை, நடன போட்டி நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக கலெக்டர், கூடுதல் கலெக்டர் மற்றும் ராமநாதபுரம் எம்.பி. கலந்துகொண்டனர்.

    இதில் தன்னார்வலர்களை சிறப்பிக்கும் வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் சேவையில் சிறந்து விளங்கும் தொண்டு நிறுவனங்களில், முத்தமிழ் அறக்கட்டளை தேர்வு செய்யப்பட்டு, அதன் நிறுவனர் சபரிமலைநாதனுக்கு, நவாஸ் கனி எம்.பி. விருது வழங்கினார்.

    • ராமநாதபுரம் அருகே தன்னார்வலர்களுக்கான பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.
    • இந்த பயிற்சியை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், சாத்தக்கோன் வலசை கிராமத்தில் உள்ள அரியமான் ஒருங்கிணைந்த பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அபாய குறைப்பு முகமை மூலம் ஆப்தா மித்ரா திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கான பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெறுகிறது.

    இதை மாவட்ட கலெக்டர். ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார். ஆப்தா மித்ரா திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 300 தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்க தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல் கட்டமாக 200 தன்னார்வலர்களுக்கு 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இந்த பயிற்சியானது தகுதி வாய்ந்த, பேரிடர் மேலாண்மையில் அனுபவ–மிக்க பயிற்றுநர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது. பேரிடர் காலங்களில் அவசர சூழ்நிலைகளை கையாள்வது தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

    பயிற்சியின் முடிவில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ், காப்பீடு, மற்றும் அவசர கால பேரிடர் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மேதலோடை கிராமத்தில் உள்ள ஊரணியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியிகளையும், வண்ணாங்குண்டு கிராமத்தில் உள்ள ரேசன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களின் தரம் மற்றும் இருப்பு குறித்தும், கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் ஆய்வு செய்தார்.

    கீழக்கரை வட்டம் குலபதம் கிராமத்தில் பட்டா மாறுதலுக்கான உத்தரவு ஆணையினை 22 பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர், பேரிடர் மேலாண்மை பயிற்சி மைய இயக்குநர் சோனியா, ராமநாதபுரம் வருவாய் வட்டாட்சியர் முருகேசன், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் முருகேசன், சரவணன் , திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் அதிகம் கூடும் நகரங்களில் போக்குவரத்தை சரி செய்தல், ஆதரவற்றவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து, மனநல காப்பகங்களில் சேர்த்து வருகிறேன்.
    • தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வருவதால் காவல்துறையினர் தனக்கு ஆதரவாக பல உதவிகளை செய்கின்றனர் என நிஷார்சேட் கூறினார்.

    ஒட்டன்சத்திரம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் நிஷார்சேட் (வயது 55). இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் தனது இருசக்கர வாகனத்தில் சென்று, சாலையோரங்களில் அழுக்குத் துணியுடன் சுற்றித்திரியும் மனநோயாளிகளை மீட்டு அவர்களின் தலைமுடிகளை சுத்தம் செய்து, மொட்டை அடித்து, குளிக்க வைத்து புதிய ஆடைகளை அணிவித்து விடுவார்.

    இதன் பிறகு அவர்களை மன நல காப்பகத்தில் சேர்த்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து வருகிறார். இவர் திருவனந்தபுரம், திருச்சி, ராமேஸ்வரம், ஏர்வாடி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட மன நோயாளிகளின் தலைமுடிகளை சுத்தம் செய்து குளிக்க வைத்துள்ளார். இது குறித்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு வந்திருந்த நிஷார்சேட் தெரிவிக்கையில், பல ஆண்டுகளாக இது போன்ற பணிகளை செய்து வருகிறேன்.

    பொதுமக்கள் அதிகம் கூடும் நகரங்களில் போக்குவரத்தை சரி செய்தல், ஆதரவற்றவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து, மனநல காப்பகங்களில் சேர்த்து வருகிறேன். தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் நான் சென்று வருவதால் காவல்துறையினர் எனக்கு ஆதரவாக பல உதவிகளை செய்து வருகின்றனர். முழுநேரமாகவும் இப்பணிகளை செய்து வருகிறேன். இது எனக்கு மனநிறைவாக உள்ளது என்று கூறினார்.

    ×