search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தகுதி சான்றிதழ்"

    • மொத்தமுள்ள 1,667 பஸ்களில் 1,352 பஸ்கள் சான்றிதழ் பெற்றுள்ளது.
    • மொத்தமுள்ள 1,667 பஸ்களில் 1,352 பஸ்கள் சான்றிதழ் பெற்றுள்ளது.

    திருப்பூர்:

    நடப்பு கல்வியாண்டு தொடங்கிய நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,667 பஸ்களில் 885 பஸ்கள் சான்றிதழ் பெற்றன. ஜூலை முதல் கடந்த 2 வாரத்தில் மீதமுள்ள பஸ்கள் சான்றிதழ் பெற வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்துக்கு வர ஆர்.டி.ஓ.,க்கள் உத்தரவிட்டனர்.

    தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,667 பஸ்களில் 1,352 பஸ்கள் சான்றிதழ் பெற்றுள்ளது. இன்னமும் 315 பஸ்கள் தகுதிச்சான்றிதழ் பெறவில்லை. இந்நிலையில் ஜூலை 31க்குள் பள்ளி பஸ்கள் ஆய்வு செய்து முடித்து மாவட்டத்தில் தகுதிச்சான்றிதழ் பெற்ற பள்ளி பஸ்கள் குறித்த விபரத்தை அறிக்கையாக தெரிவிக்க வேண்டும் என போக்குவரத்து துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.இதனால் இன்னும் சான்றிதழ் பெறாத திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உடுமலை, தாராபுரம் ஆர்.டி.ஓ.,க்களிடம் இருந்து பள்ளிகளுக்கு பஸ்கள் நிலை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    • ஈரோடு மாவட்டம் உள்பட தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
    • அரசின் விதிமுறைகளின் படி வேக கட்டுப்பாட்டு கருவி மற்றும் அவசரகால வழி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் இயக்கப்படுகிறதா? என நேரில் ஆய்வு செய்தார்.
    • தகுதியான வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ்கள் வழங்கினார்.

    கோபி:

    தமிழகம் முழுவதும் இயங்கி வரும் பள்ளி வாகனங்களின் தரம் மற்றும் பராமரிப்பு குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆண்டு தோறும் ஆய்வு மேற்கொண்டு சான்றிதழ் வழங்கி வருகிறார்கள்.

    இந்த நிலையில் வரும் 13-ந் தேதி தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி ஈரோடு மாவட்டம் உள்பட தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அதன் தொடர்ச்சியாக கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து எல்லைக்குட்பட்ட சத்தியமங்கலம், பவானி மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான வாகன சோதனை ஒத்தக்குதிரை அருகே தனியார் கல்லூரி யில் நடைபெற்றது.

    கோபி வட்டார போக்குவரத்து அலுவலர் முனுசாமி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. பிரியதர்ஷினி கலந்து கொண்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் பள்ளி வாகனங்கள் அரசின் விதிமுறைகளின் படி வேக கட்டுப்பாட்டு கருவி மற்றும் அவசரகால வழி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் இயக்கப்படுகிறதா? என நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து தகுதியான வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ்கள் வழங்கினார்.

    இந்த ஆய்வில் கோபிசெட்டிபாளையம், சத்தி மற்றும் பவானி பகுதிகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டன.

    ×