search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Eligibility Certificate"

    • தானியங்கி சோதனை நிலையம் மூலமாக மட்டுமே வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
    • 18 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தனியார் பங்களிப்புடன் தானியங்கி வாகன சோதனை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

    சென்னை:

    போக்குவரத்து வாகனங்களுக்கான தகுதிச் சான்றை 2024-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி முதல் தானியங்கி சோதனை நிலையம் மூலமாக மட்டுமே வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி தமிழ்நாட்டில் செங்குன்றம், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், வேலூர், திண்டிவனம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 18 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தனியார் பங்களிப்புடன் தானியங்கி வாகன சோதனை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

    இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 15 ஆண்டுகளுக்கு மேலான இரு சக்கர வாகனங்களுக்கு தகுதிச் சான்று பெற ரூ.650 கார்களுக்கு ரூ.850 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    • மொத்தமுள்ள 1,667 பஸ்களில் 1,352 பஸ்கள் சான்றிதழ் பெற்றுள்ளது.
    • மொத்தமுள்ள 1,667 பஸ்களில் 1,352 பஸ்கள் சான்றிதழ் பெற்றுள்ளது.

    திருப்பூர்:

    நடப்பு கல்வியாண்டு தொடங்கிய நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,667 பஸ்களில் 885 பஸ்கள் சான்றிதழ் பெற்றன. ஜூலை முதல் கடந்த 2 வாரத்தில் மீதமுள்ள பஸ்கள் சான்றிதழ் பெற வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்துக்கு வர ஆர்.டி.ஓ.,க்கள் உத்தரவிட்டனர்.

    தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,667 பஸ்களில் 1,352 பஸ்கள் சான்றிதழ் பெற்றுள்ளது. இன்னமும் 315 பஸ்கள் தகுதிச்சான்றிதழ் பெறவில்லை. இந்நிலையில் ஜூலை 31க்குள் பள்ளி பஸ்கள் ஆய்வு செய்து முடித்து மாவட்டத்தில் தகுதிச்சான்றிதழ் பெற்ற பள்ளி பஸ்கள் குறித்த விபரத்தை அறிக்கையாக தெரிவிக்க வேண்டும் என போக்குவரத்து துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.இதனால் இன்னும் சான்றிதழ் பெறாத திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உடுமலை, தாராபுரம் ஆர்.டி.ஓ.,க்களிடம் இருந்து பள்ளிகளுக்கு பஸ்கள் நிலை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    ×