search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "private school vehicles"

    • பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தி அந்தியூர் தாலுகாவில் உள்ள தனியார் பள்ளிக்கும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார்.
    • ஓட்டுநர்கள் சாலை விதிகளை பின்பற்றியும், வேகத்தை குறைத்தும் வாகனத்தை கட்டுப்பாட்டுடன் இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்காவில் 15-க்கு மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

    இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளை அழைத்து வர பள்ளி நிர்வாகம் வாகனங்களை இயக்கி வருகிறது.

    இந்த வாகனங்கள் பள்ளி வாகனங்களுக்கான அரசால் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடிக்கின்றனவா என கலெக்டரின் உத்தரவுப்படி பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தி அந்தியூர் தாலுகாவில் உள்ள ஒவ்வொரு தனியார் பள்ளிக்கும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார்.

    மேலும் பள்ளி வாகன ஓட்டுனர்களிடம் தனி மனித தவறுகளே வாகன விபத்துக்கு காரணமாக அமைகிறது.

    எனவே ஓட்டுநர்கள் சாலை விதிகளை பின்பற்றியும், வேகத்தை குறைத்தும் வாகனத்தை கட்டுப்பாட்டுடன் இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது வட்டார கல்வி அலுவலர் மாதேஷா,கல்வி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் உடன் இருந்தனர்.

    • ஈரோடு கிழக்கு, மேற்கு, பெருந்துறை ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் தனியார் பள்ளி வாகனங்களின் ஆய்வு நடந்தது.
    • வாகன சோதனையில் கிழக்கு பகுதியில் 355 வாகனங்களும், மேற்கு பகுதியில் 43 வாகனங்களும், பெருந்துறையில் 463 வாகனங்கள் என மொத்தம் 861 வாகனங்கள் வந்தன.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு, மேற்கு, பெருந்துறை ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் தனியார் பள்ளி வாகனங்களின் ஆய்வு இன்று ஈரோடு பெருந்துறை ரோடு, பவளத்தாம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடந்தது.

    வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார் தலைமை தாங்கி வாகனங்களை ஆய்வு செய்தார். வாகனங்களில் அவசர வழி சரியாக செயல்படுகிறதா? பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக உள்ளதா? தீயணைப்பு கருவிகள் உள்ளதா? என பல்வேறு சோதனைகள் செய்தார்.

    இந்த வாகன சோதனையில் கிழக்கு பகுதியில் 355 வாகனங்களும், மேற்கு பகுதியில் 43 வாகனங்களும், பெருந்துறையில் 463 வாகனங்கள் என மொத்தம் 861 வாகனங்கள் வந்தன.

    மேலும் தீ விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து டிரைவர்களுக்கு செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதில் வட்டார போக்கு வரத்து அலுவலர்கள் வெங்கட்ரமணி, பதுவை நாதன், சக்திவேல், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் பாஸ்கர், எம்.சிவகுமார், கதிர்வேல், கே.சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்டம் உள்பட தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
    • அரசின் விதிமுறைகளின் படி வேக கட்டுப்பாட்டு கருவி மற்றும் அவசரகால வழி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் இயக்கப்படுகிறதா? என நேரில் ஆய்வு செய்தார்.
    • தகுதியான வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ்கள் வழங்கினார்.

    கோபி:

    தமிழகம் முழுவதும் இயங்கி வரும் பள்ளி வாகனங்களின் தரம் மற்றும் பராமரிப்பு குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆண்டு தோறும் ஆய்வு மேற்கொண்டு சான்றிதழ் வழங்கி வருகிறார்கள்.

    இந்த நிலையில் வரும் 13-ந் தேதி தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி ஈரோடு மாவட்டம் உள்பட தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அதன் தொடர்ச்சியாக கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து எல்லைக்குட்பட்ட சத்தியமங்கலம், பவானி மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான வாகன சோதனை ஒத்தக்குதிரை அருகே தனியார் கல்லூரி யில் நடைபெற்றது.

    கோபி வட்டார போக்குவரத்து அலுவலர் முனுசாமி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. பிரியதர்ஷினி கலந்து கொண்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் பள்ளி வாகனங்கள் அரசின் விதிமுறைகளின் படி வேக கட்டுப்பாட்டு கருவி மற்றும் அவசரகால வழி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் இயக்கப்படுகிறதா? என நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து தகுதியான வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ்கள் வழங்கினார்.

    இந்த ஆய்வில் கோபிசெட்டிபாளையம், சத்தி மற்றும் பவானி பகுதிகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டன.

    ×