search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் ரீசார்ஜ்"

    செல்போன் ரீசார்ச் செய்ய தாய் பணம் தராததால் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் தனுஷ் (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த தனுஷ் தனது தாயிடம் செல்போன் ரீசார்ச் செய்வதற்காக பணம் கேட்டார். ஆனால் அவரது தாய் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் தனுஷ் மிகுந்த மனவேதனை அடைந்தார்.

    தாய் பணம் தராததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் கிடைத்ததும் சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட தனுசின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×