search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூதாட்டத்தில் ஈடுபட்ட"

    • ணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டத்திற்காக பவானி போலீசார் கைது செய்தனர்.
    • ரொக்க பணம் 14,180 ரூபாய் பறிமுதல் செய்தனர்.

    பவானி:

    பவானி அருகில் உள்ள சின்னியம்பாளையம் கிராமத்தில் பணம் வைத்து சீட்டாட்டம் நடைபெறுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து பவானி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சின்னியம்பாளையம் டாக்டர் தோட்டம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் பவானி சின்னியம்பாளையம் பகுதியில் வசிக்கும் செல்வராஜ் மகன் மோகன் (40), ராமசாமி மகன் தர்மன் (40), சின்னுசாமி மகன் அய்யாசாமி (28), செல்வன் மகன் அய்யாதுரை மற்றும் சின்னுசாமி மகன் விஜயகுமார் (78) என்பது தெரியவந்தது.

    இவர்கள் 5 பேரும் 52 சீட்டுகள் கொண்ட சீட்டுக்கட்டு மூலம் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டத்திற்காக பவானி போலீசார் கைது செய்தனர்.

    மேலும் ரொக்க பணம் 14,180 ரூபாய் பறிமுதல் செய்தனர்.

    • சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.8 ஆயிரத்து 450 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி கேசரிமங்கலம் புது க்காடு ராஜன் கரும்புக்காடு என்ற பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீ சார் அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த பவானி கேசரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த கிரு ஷ்ணன் மகன் பூபதி என்ற சீரங்கன் (வயது 36),

    குப்பி ச்சிபாளையம் பெரிய வாய்க்கால் கரையைச் சேர்ந்த சுப்ரமணி மகன் ராமச்சந்திரன் (36), பூத ப்பாடி பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் மகன் பிரகதீ ஸ்வரன் (60),

    கேசரிமங்கலம் பிரிவு பகுதியை சேர்ந்த நாகராஜன் மகன் குமார் (69), பவானி பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் திருவிங்கி (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களிடம் இருந்த சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.8 ஆயிரத்து 450 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அயலூர் அருகே சூதாட்டம் நடைபெறுவதாக சிறுவலூர் போலீசாருக்கு தகவல் கிடை த்தது.
    • சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 2 சேவல்கள் மற்றும் ஆயிரத்து 200 ரூபாய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அயலூர் அருகே சூதாட்டம் நடைபெறுவதாக சிறுவலூர் போலீசாருக்கு தகவல் கிடை த்தது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீ சார் அங்கு சேவல்கள் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த லிங்கசாமி மகன் ஜெகதீசன் (வயது 31),

    மேட்டூர் பகுதியைச் சேர்ந்த முனுசாமி மகன் சசிகுமார் (28), கோபிசெட்டிபாளை யம் வெள்ளப்பாளையம் சண்முகம் மகன் அபிஷேக் (23),

    அந்தியூர் இளங்கோமணி மகன் கார்த்தி, அவிநாசி குமாரசாமி மகன் சேதுபதி (21), மொடச்சூர் வேதநாயகம் மகன் சிவக்குமார் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 2 சேவல்கள் மற்றும் ஆயிரத்து 200 ரூபாய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தவர்களை கைது செய்தனர்.
    • அவர்கள் வைத்திருந்த சீட்டு கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் ஆசாரி மேடு பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக கடத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி மற்றும் போலீசார் அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த கோபி பச்சைமலை ரோடு பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் கார்த்திகேயன் (வயது 29), காசிபாளையம் சந்தை கடை புதூரை சேர்ந்த வெங்கடசாமி மகன் செல்வன் (51), கோபி புதுப்பாளையம் லோகு நாதன் மகன் சபாபதி (57), சத்தியமங்கலம் ரெங்க சமுத்திரம் மணி மகன் குப்புசாமி (40), கோபியை சேர்ந்த ஆறுமுகம் மகன் தம்பி யாணன் (50), கதிர்வேல் மகன் கோபால் (47), கோபி வண்டிப்பேட்டை ராஜூ மகன் பிரகாஷ் (50), அதே பகுதியை சேர்ந்த பொன்னு ச்சாமி கவுண்டர் மகன் சக்தி என்ற சுரேஷ்குமார் (49), கோபி அங்குவிலாஸ் தெரு ராமசாமி மகன் குமார் (48), செல்லப்பா நகர் சுப்பிரமணி மகன் கணேஷ் குமார் (46), புது ஹாஸ்பிடல் ரோடு சையது முஸ்தபா மகன் ஜெபர் (59), பாரதி தெரு இப்ராஹிம் மகன் ஜெபர் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் வைத்திருந்த 5 சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.30 ஆயிரத்து 100 போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழ க்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சூதாட்டம் நடைபெறுவதாக அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட கோழியை மீட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோனர்பாளையம் பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு கோழிகளை சண்டையிட வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த ரெட்டிபாளையத்தை சேர்ந்த பெருமாள் மகன் மணி,

    வெள்ளிதிருப்பூரை சேர்ந்த செல்லீஸ்வரன் மகன் விக்னேஷ், நெருஞ்சிப்பேட்டை பகுதியை சேர்ந்த கோபால் மகன் கணபதி, மைக்கேல் பாளையம் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட கோழியை மீட்டனர். பின்னர் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவாக ஈரோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 3 சண்டைக்கோழிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சஞ்சய் நகர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவாக ஈரோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அப்பகு தியில் தீவிர ரோந்து பணி யில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு கோழிகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த புதூர் சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்த இளங்கோ என்ற மகேஷ் (வயது 47), மொட க்குறிச்சி ஜெயக்குமார் (25), கருங்கல்பாளையம் பிர னேஷ் (வயது 20), பஞ்சலி ங்கபுரம் விக்னேஷ் (24), கரூர் மாவட்டம் ரெட்டி பாளையத்தை சேர்ந்த கண்ணன் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களிடமிருந்து 3 சண்டைக்கோழிகள் மற்றும் 1500 பண த்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவ ர்கள் மீது போலீசார் வழ க்குபதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

    • சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒரு கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
    • 5 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    பவானி:

    பவானி அருகில் உள்ள ஜம்பை, கருக்கு பாளையம் பகுதியில் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது ஜம்பையில் இருந்து கருக்கு பாளையம் செல்லும் ரோட்டில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒரு கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    அதில் கோபி சிறுவலூர் பகுதியை சேர்ந்த ரகுபதி (வயது 38), கவுந்தப்பாடி பி.மேட்டுப்பாளையம் கோகுல்நாத் (32), பவானி தொட்டிபாளையம் செந்தில்குமார் (43), புன்னம் பிரகாஷ், மங்கலேஷ் என 5 பேர் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.500 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    ×