என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 people involved in"

    • பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவாக ஈரோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 3 சண்டைக்கோழிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சஞ்சய் நகர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவாக ஈரோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அப்பகு தியில் தீவிர ரோந்து பணி யில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு கோழிகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த புதூர் சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்த இளங்கோ என்ற மகேஷ் (வயது 47), மொட க்குறிச்சி ஜெயக்குமார் (25), கருங்கல்பாளையம் பிர னேஷ் (வயது 20), பஞ்சலி ங்கபுரம் விக்னேஷ் (24), கரூர் மாவட்டம் ரெட்டி பாளையத்தை சேர்ந்த கண்ணன் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களிடமிருந்து 3 சண்டைக்கோழிகள் மற்றும் 1500 பண த்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவ ர்கள் மீது போலீசார் வழ க்குபதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

    • சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.8 ஆயிரத்து 450 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி கேசரிமங்கலம் புது க்காடு ராஜன் கரும்புக்காடு என்ற பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீ சார் அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த பவானி கேசரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த கிரு ஷ்ணன் மகன் பூபதி என்ற சீரங்கன் (வயது 36),

    குப்பி ச்சிபாளையம் பெரிய வாய்க்கால் கரையைச் சேர்ந்த சுப்ரமணி மகன் ராமச்சந்திரன் (36), பூத ப்பாடி பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் மகன் பிரகதீ ஸ்வரன் (60),

    கேசரிமங்கலம் பிரிவு பகுதியை சேர்ந்த நாகராஜன் மகன் குமார் (69), பவானி பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் திருவிங்கி (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களிடம் இருந்த சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.8 ஆயிரத்து 450 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×