search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூடான் உள்நாட்டு போர்"

    • சூடானில் ராணுவத்தினருக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை ராணுவத்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கலவரம் வெடித்தது.
    • ஏராளமானோர் பாதுகாப்பு கருதி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இடம்பெயர்ந்தனர்.

    கார்டூம்:

    சூடானில் ராணுவத்தினருக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை ராணுவத்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கலவரம் வெடித்தது. இந்த உள்நாட்டு போரில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 6 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். ஏராளமானோர் பாதுகாப்பு கருதி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இடம்பெயர்ந்தனர்.

    அந்தவகையில் சூடான் உள்நாட்டு போரால் சுமார் 48 லட்சம் பேர் தங்களது சொந்த பகுதிகளை விட்டு இடம்பெயர்ந்ததாக ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    சூடானில் ராணுவத்தினருக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை ராணுவத்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கலவரம் வெடித்தது.

    ஏராளமானோர் பாதுகாப்பு கருதி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இடம்பெயர்ந்தனர்.

    • ராணுவத்தினருக்கும், ராணுவ விரைவுப் படைகளுக்கும் இடையில் சண்டை
    • அண்டை நாடான சாட்டில் தஞ்சைமடையும் சூடான் மக்கள்

    வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில், அந்நாட்டு ராணுவத்திற்கும் துணை ராணுவ அமைப்பான ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் (Rapid Support Forces) இடையில் சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையை நிறுத்துவதற்கான பல்வேறு ராஜதந்திர முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை. எனவே, சூடான் முழு அளவிலான உள்நாட்டுப் போரின் விளிம்பில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

    சூடான் ராணுவத்தின் மிக முக்கியமான நட்பு நாடாகக் கருதப்படும் எகிப்தும், ஆர்.எஸ்.எஃப் அமைப்புடன் நெருங்கிய உறவுகளை கொண்டிருக்கும் ஐக்கிய அரபு அமீரகமோ இதுவரை ஒரு முக்கிய முடிவோ, சண்டையை முடிவுக்கு கொண்டுவரும் எந்த முயற்சியோ இதுவரை எடுக்கவில்லை.

    ராணுவம் மற்றும் ஆர்.எஸ்.எஃப் உடன் அதிகாரத்தை பகிர்ந்து கொண்ட மக்கள் கட்சிகள் உட்பட சூடான் நாட்டு பிரதிநிதிகள் இன்று எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கார்டோம் பிராந்தியத்திற்கு தென்மேற்கில் உள்ள எல் ஓபீட் பகுதியிலும் மற்றும் தலைநகரின் தெற்கு பகுதியிலும் நேற்று ராணுவத்திற்கும், RSF-க்கும் இடையிலான மோதல்கள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் இந்த முயற்சிகள் நடப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    டார்ஃபர் நகரின் மேற்குப்பகுதி உட்பட சூடானின் பிற பகுதிகளிலும் வன்முறை வெடித்துள்ளது.

    சூடானின் தலைநகர் கார்டோமில், ஏப்ரல் 15 அன்று வெடித்த சண்டையின் விளைவாக சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

    சூடானின் அண்டை நாடான சாட்வில் ஏற்கனவே உள்ள 7 முகாம்களில் 36,423 அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர்

    நடைபெற்று கொண்டு வரும் வன்முறை காரணமாக இந்த ஆண்டு இறுதிக்குள் 2,45,000 அகதிகள் வருவதற்கு தயாராகி வருவதாக அகதிகளுக்கான ஐ.நா. ஆணையகம் (UN High Commissioner for Refugees) தெரிவித்துள்ளது.

    4 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர் பதவி கவிழ்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
    • சூடானில் இருந்து மீட்கப்பட்ட 246 இந்தியர்கள் பத்திரமாக இன்று தாயகம் திரும்பினர்.

    உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சூடானில் இருந்து மீட்கப்பட்ட 246 இந்தியர்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்துவரப்பட்டனர். ஜெட்டாவில் இருந்து 246 இந்தியர்களுடன் கிளம்பிய இந்திய வான்படை விமானம் இன்று மும்பையில் தரையிறங்கியது.

    இன்று காலை 11 மணிக்கு ஜெட்டாவில் இருந்து கிளம்பிய விமானம் 3.30 மணி அளவில் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதன்படி சூடானில் இருந்து மீட்கப்பட்ட 246 இந்தியர்கள் பத்திரமாக இன்று தாயகம் திரும்பியுள்ளனர்.

     

    ஆபரேஷன் காவேரி திட்டத்தின் கீழ், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. கடும் தாக்குதல் நடக்கும் பகுதிகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் பேருந்து மூலம் மீட்கப்பட்டு சூடான் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். பின் சூடான் துறைமுகத்தில் இருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு இந்தியர்கள் கப்பல் மூலம் அழைத்து செல்லப்படுகின்றனர்.

    சூடானில் தாக்குதல் நடைபெற்று வரும் கார்டோம் மற்றும் சூடான் துறைமுகம் இடையிலான தூரம் 850 கிலோமீட்டர்கள் ஆகும். தற்போதைய பதற்றமான சூழ்நிலையில், இந்த தூரத்தை பேருந்து மூலம் கடக்க 12 முதல் 18 மணி நேரங்கள் வரை ஆகிறது. உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சூடானில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    • சூடானில் தமிழ் மக்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கி தவிக்கின்றனர்.
    • உதவி தேவைப்படுபவர்கள் 011-2419 3100, 9289516711 என்ற டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி, செல்போன் எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சூடான் நாட்டில் நடைபெற்று வரும் ராணுவம் மற்றும் உள்நாட்டு படைப்பிரிவினர்களுக்கு இடையேயான மோதல்களினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கி தவிக்கின்றனர்.

    அவர்களை மீட்க கோரி அங்குள்ள தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினரிடம் இருந்து தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கைகள் தொடர்ந்து வருவதன் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி உடனடியாக அங்கு சிக்கியுள்ள தமிழர்களின் விவரங்களை பகிரக் கோரியும், அவர்களை பாதுகாப்பாக தமிழகம் மீட்க கோரியும் தமிழ்நாடு அரசின் சார்பாக கடிதம் மூலம் சூடான் மற்றும் ஜெத்தாவில் உள்ள இந்திய தூதரகத்திடம் கோரப்பட்டு உள்ளது.

    மேலும், சூடானில் உள்ள தமிழர்களுடன் 'வாட்ஸ் அப்' குழுக்கள் மூலமாக தொடர்புகள் உருவாக்கப்பட்டு அவர்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் சூடானில் உள்ள இந்திய தூதரகத்திற்கு உடனுக்குடன் தெரியப்படுத்தப்படுகிறது.

    தற்போது ஒன்றிய அரசின் 'ஆபரேசன் காவிரி' என்ற திட்டத்தின் மூலமாக சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு, சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவிற்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி மற்றும் மும்பைக்கு அழைத்து வரக்கூடிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ரஷியா-உக்ரைன் போரின்போது, விமானம் மூலம் டெல்லி மற்றும் மும்பைக்கு அழைத்து வரப்பட்ட தமிழர்களை, தமிழ்நாடு அரசின் செலவில் சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்லப்பட்டது போன்று இந்த விவகாரத்திலும் நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் டெல்லி தமிழ்நாடு இல்லத்திலும், சென்னையில் உள்ள அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகத்திலும் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    உதவி தேவைப்படுபவர்கள் 011-2419 3100, 9289516711 என்ற டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி மற்றும் செல்போன் எண்ணுக்கும், tnhouse@nic.in என்ற இணையதளம் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

    96000 23645, nrtchennai@gmail.com என்ற சென்னையில் உள்ள அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகத்தின் செல்போன் எண் மற்றும் இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சூடானில் கடற்படை கப்பல் உதவியுடன் இந்தியர்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.
    • வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

    புதுடெல்லி:

    உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள சூடானில் உள்ள வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகள் ஈடுபட்டுள்ளன. சூடானில் சிக்கி தவித்து வரும் இந்தியர்களை மீட்டு கொண்டு வருவதற்காக ஆபரேசன் காவேரி என்ற பெயரிலான திட்டத்தை இந்திய அரசு தொடங்கி உள்ளது.

    அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக கப்பல்களும், விமானங்களும் தயாராக உள்ளன. இதன்படி, சூடானின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த இந்தியர்கள் சுமார் 500 பேர் மீட்கப்பட்டு சூடான் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டனர். அதன்பின், இந்தியாவின் கடற்படை கப்பலான ஐ.என்.எஸ். சுமேதா உதவியுடன் அவர்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.

    பின்னர் ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து 360 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு இன்று மாலை புறப்பட்ட தனி விமானம் புதுடெல்லி வந்து சேர்ந்தது. இத்தகவலை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

    அதில், 'இந்தியா தனது சொந்தங்களை மீண்டும் வரவேற்கிறது. ஆபரேசன் காவேரி மூலம் 360 இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் முதல் விமானம் புதுடெல்லியை அடைந்தது' என தெரிவித்துள்ளார்.

    • சூடானில் இருந்து 500 இந்தியர்களுடன் கப்பல் புறப்பட்டு சவுதி அரேபியாவுக்கு இன்று வந்தது.
    • சூடானில் 300 தமிழர்கள் இருப்பதாக கடைசியாக வந்த தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    சூடான் நாட்டில் உள்நாட்டு போரால் 3 ஆயிரம் இந்தியர்கள் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். போரால் தவித்து வரும் இந்தியர்களை பத்திரமாக மீட்க இந்திய அரசு "ஆபரேஷன் காவேரி" என்ற பெயரில் மீட்பு நட வடிக்கை எடுத்து வருகிறது.

    போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல் மூலம் மீட்பு பணியை துரிதப்படுத்தி உள்ளது.

    சூடானில் தமிழ்நாட்டை சேர்ந்த 84 பேர் சிக்கி இருப்பதாக முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்தது. அவர்களை பத்திரமாக மீட்டு வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

    இதற்கிடையில் சூடானில் சிக்கியுள்ள தமிழர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. முதல் பட்டியலில் 84 தமிழர்கள் என்றும் 2-வது பட்டியலில் 136 பேர் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.

    300 தமிழர்கள் வரை அங்கு இருப்பதாக சூடான் நாட்டு இந்திய தூதரகம் மூலம் தெரிய வந்துள்ளது. 300 தமிழர்களையும் மீட்க மத்திய அரசுடன் தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான், வெளிநாடு வாழ் தமிழர்கள் துறை ஆணையர் ஜெசிந்தா ஆகியோர் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் பேசி வருகின்றனர்.

    சூடானில் இருந்து 500 இந்தியர்களுடன் கப்பல் புறப்பட்டு சவுதி அரேபியாவுக்கு இன்று வந்தது. அங்குள்ள ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானம் மூலம் அவர்கள் டெல்லி வருகின்றனர். அங்கிருந்து அவரவர் மாநிலங்களுக்கு அழைத்து செல்ல மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    முதல் பயணத்தில் வந்த இந்தியர்களில் மிக குறைந்த அளவில்தான் தமிழர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. 25 தமிழர்கள் முதல் விமானத்தில் வரலாம் எனவும் முழு விவரங்கள் தெரியவில்லை என்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெசிந்தா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    சூடானில் 300 தமிழர்கள் இருப்பதாக கடைசியாக வந்த தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து முதல் விமானம் மூலம் 300 இந்தியர்கள் இன்று டெல்லி வருகிறார்கள். அவர்களில் தமிழர்கள் சிலர் தான் உள்ளனர்.

    அவர்களை டெல்லியில் இருந்து இன்று சென்னைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. படிப்படியாக அங்குள்ள தமிழர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உள்நாட்டுப்போர் நடந்து வரும் சூடானில் இலங்கை மக்கள் 30 பேரும் தத்தளித்து வருகின்றனர்
    • இந்தியா ஆதரவுக்கரம் நீட்ட முன் வந்துள்ளது.

    கொழும்பு:

    உள்நாட்டுப்போர் நடந்து வரும் சூடானில் இலங்கை மக்கள் 30 பேரும் தத்தளித்து வருகின்றனர். அவர்களை அங்கிருந்து பத்திரமாக மீட்டுக்கொண்டு வருவதற்கு இந்தியா உதவிக்கரம் நீட்டுகிறது. இதற்காக இந்தியாவை இலங்கை மனதார பாராட்டி உள்ளது.

    இதையொட்டி இலங்கை வெளியுறவு மந்திரி அலி சப்ரி டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

    சூடானில் தவித்து வருகிற இலங்கை மக்களின் நிலை குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அவர்களைப் பத்திரமாக மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில் இந்தியா ஆதரவுக்கரம் நீட்ட முன் வந்துள்ளது. அதை நாங்கள் பாராட்டுகிறோம். அடுத்த சில நாட்களில் இது நடந்தேறும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சூடானில் மீட்கப்பட்ட 278 இந்தியர்கள் கொண்ட முதல் குழு ஜெட்டா வந்தடைந்தது.
    • தொடர்ந்து அங்கிருந்து இந்தியர்களை வெளியேற்றும் முயற்சிகளை இந்தியா முடுக்கிவிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள சூடானில் சிக்கித் தவிக்கும் சுமார் 3,000 இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக ஆபரேசன் காவேரி என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இந்தியர்களை வெளியேற்றுவதற்கு வசதியாக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, மோதலில் ஈடுபட்டுள்ள சூடான் ராணுவம் மற்றும் துணை ராணுவ படை இடையே தீவிர பேச்சுவார்த்தைக்கு பிறகு 72 மணி நேர போர்நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, சூடானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் முயற்சிகளை இந்தியா முடுக்கிவிட்டுள்ளது.

    அந்த வகையில் சூடானில் மீட்கப்பட்ட 278 இந்தியர்கள் கொண்ட முதல் குழு, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுமேதா கப்பல் புறப்பட்டது. இந்தக் குழுவானது சவுதி அரேபியாவின் ஜெட்டா துறைமுகத்திற்கு வந்தடைந்தது. சூடானில் உள்ள இந்தியர்களுக்கான அத்தியாவசிய நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், சூடானில் மீட்கப்பட்ட 121 இந்தியர்கள் கொண்ட இரண்டாவது குழு, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுமேதா கப்பல் மூலம் புறப்பட்டது.

    • சூடானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் முயற்சிகளை இந்தியா முடுக்கிவிட்டுள்ளது.
    • இந்தியர்களுக்கான அத்தியாவசிய நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள சூடானில் சிக்கித் தவிக்கும் சுமார் 3000 இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக ஆபரேசன் காவேரி என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இந்தியர்களை வெளியேற்றுவதற்கு வசதியாக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மோதலில் ஈடுபட்டுள்ள சூடான் ராணுவம் மற்றும் துணை ராணுவ படை இடையே தீவிர பேச்சுவார்த்தைக்கு பிறகு 72 மணி நேர போர்நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, சூடானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் முயற்சிகளை இந்தியா முடுக்கிவிட்டுள்ளது.

    அவ்வகையில் சூடானில் மீட்கப்பட்ட 278 இந்தியர்கள் கொண்ட முதல் குழு, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுமேதா கப்பல் புறப்பட்டது. இந்தக் குழுவானது சவுதி அரேபியாவின் ஜெட்டா துறைமுகத்திற்கு வருகிறது. மேலும், சூடானில் உள்ள இந்தியர்களுக்கான அத்தியாவசிய நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    மீட்பு பணிகளை கவனிப்பதற்காக வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் ஜெட்டா சென்றுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சூடானில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் தமிழர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.
    • தமிழர்கள் உள்பட இந்தியர்களை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது.

    ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டு போர் மூண்டுள்ளது.

    ராணுவ ஆட்சி நடந்து வரும் அந்நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கடும் சண்டை நடந்து வருகிறது.

    தலைநகர் கார்டூமில் உள்ள சர்வதேச விமான நிலையம் கடுமையாக சேதமடைந்துள்ளது. இதனால் விமான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. இதனால் சூடானில் இருந்து வெளிநாட்டினர் வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    இந்தியர்கள் சுமார் 4 ஆயிரம் பேர் சூடானில் சிக்கி தவிக்கிறார்கள். தெருக்களில் துப்பாக்கி சண்டை நடப்பதால் வீடு, பணியாற்றும் இடங்களில் முடங்கி கிடக்கிறார்கள். சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

    ஆபரேசன் காவேரி என்ற பெயரில் மீட்கும் பணி தொடங்கப்பட்டு சூடானுக்கு கப்பலையும், சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு இரண்டு விமானங்களையும் அனுப்பி உள்ளது. சூடானில் 72 மணி நேர சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சூடானில் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அங்குள்ள தமிழர்கள், வாட்ஸ் அப் குருப் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அதில் தங்களது விவரங்கள், எந்த பகுதியில் இருக்கிறோம் என்ற தகவல்களை பகிர்ந்துள்ளனர். இதுவரை 84 தமிழர்கள் வாட்ஸ் அப்பில் தகவல்களை அனுப்பி உள்ளனர்.

    மின்சாரம் மற்றும் இணைய தள வசதி முடங்கி உள்ளதால் தகவல்களை பரிமாற்றத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும் சூடானில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் தமிழர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    சாலை போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் முடங்கி போய் இருப்பதால் இந்திய மீட்பு கப்பல் நிறுத்தப்பட்டுள்ள போர்ட் சூடான் துறைமுகத்துக்கு இந்தியர்கள் செல்ல முடியாத நிலை இருக்கிறது. அவர்களை துறைமுகத்துக்கு கொண்டு வருவதற்கான வாகன வசதிகள் இல்லை.

    இதனால் தமிழர்கள் உள்பட இந்தியர்களை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது. கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து டைல்ஸ் நிறுவனத்துக்கு பணிக்கு சென்ற 28 பேர் தங்களை மீட்கும்படி வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதில் 17 பேர் தமிழர்கள் ஆவார்கள்.

    இதற்கிடையே போர்ட் சூடான் துறைமுகத்துக்கு 500 இந்தியர்கள் வந்துள்ளனர் என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

    ×