search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீரமைக்கும்"

    • கலெக்டர் ஆய்வு
    • சுற்றுச்சுவர் சுமார் 40 மீட்டர் நீளத்திற்கு சேதமடைந்துள்ளது.

    கன்னியாகுமரி:

    கொட்டில்பாடு கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்தினால் கடலரிப்பு ஏற்பட்ட பகுதிகளை கலெக்டர் ஸ்ரீதர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர்அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டம் கொட்டில்பாடு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள பழைய தேவாலயத்தின் தெற்கு பகுதியில் கடல் சீற்றத்தினால் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு சுற்றுச்சுவர் சுமார் 40 மீட்டர் நீளத்திற்கு சேதமடைந்துள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் கடல்நீர் புகும் சூழல் ஏற்பட்டதாக பங்குத்தந்தை, மீனவபிரதிநிதிகள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அதன் அடிப்படையில் கொட்டில் பாடு கடலோர பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடல் நீரானது வீடுகளில் புகாமல் தவிர்க்கும் வகையில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு அவசர கால நிதியின் கீழ் ரூ.20 லட்சத்தில் கடலரிப்பு தடுப்பு பணிகள் உடனடியாக மேற் கொள்ள ஆணை பெறப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது மீன்பிடித் துறைமுக கோட்ட செயற்பொறியாளர் சிதம்பர மார்த்தாண்டன், உதவி பொறியாளர் அரவிந்த்குமார், கொடில்பாடு பங்குத்தந்தை/ அருட்பணி ராஜ் உள்பட பலர் உடனினிருந்தனர்.

    • குமரி மாவட்டத்தில் இந்த தடைக் காலம் 2 பருவ காலமாக உள்ளது.
    • மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப் படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது.

    கன்னியாகுமரி:

    மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப் படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த தடைக்காலம் 2 பருவ காலமாக உள்ளது.

    குமரி கிழக்கு கடற்கரை பகுதியாகிய கன்னியாகுமரி சின்ன முட்டம் பகுதியில் ஆண்டு தோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காய் பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமத்தில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு விசைப் படகு ஆழ்கடல் பகுதி வரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன்பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் உயர் ரக மீன்களாகிய கணவாய், இறால், புல்லன், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் ஐஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களை விசைப்படகில் எடுத்து செல்வர்.

    இந்த வருடம் குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் கடந்த மே மாதம் 31-ந்தேதி நள்ளிரவு முதல் தடைக்காலம் தொடங்கியது. இதையொட்டி குளச்சல் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பி மீன் பிடித்துறைமுகத்தில் நங்கூ ரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன.

    இந்த மீன்பிடி தடைக்கா லத்தில் விசைப்படகினர் தங்கள் படகுகளை பழுது பார்த்து வருகின்றனர். மீனவர்கள் வலைகளை பின்னும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மீன்பிடி உபகரணங்களையும் பராமரிப்பு செய்து வருகின்றனர்.

    குமரி மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகு களுக்கு மீன்பிடி தடைக் காலம் நீங்க இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் விசைப்படகினர் தங்கள் விசைப்படகுகளை தீவிர மாக பழுது பார்த்து வருகின்றனர்.

    • ஈரோடு மாநகரில் காளைமாடு சிலை அருகில் உள்ள ரெயில்வே நுழைவு பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் மாற்று பாதை வழியாக செல்ல கட்டாயம் அனுமதி இல்லை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    ஈரோடு மாநகரில் காளைமாடு சிலை அருகில் உள்ள ரெயில்வே நுழைவு பாலம் மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் நாளை (19-ந் தேதி) முதல் ரெயில்வே நுழைவு பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதில் கரூர், மூலனூர், வெள்ளகோவில், தாராபுரம் மற்றும் காங்கேயத்திலிருந்து ஈரோடு வரும் அனைத்து பஸ்கள் மட்டும் அண்ணமார் பெட்ரோல் பங்க் வந்தடைந்து நாடார் மேட்டிலிருந்து இடது புறமாக திரும்பி ரீட்டா பள்ளி, சாஸ்திரி நகர் மற்றும் ரெயில்வே மேம்பாலம் வழியாக வந்து சென்னிமலை ரோடு வழியாக மாநகர் பகுதியை அடையலாம்.

    இதேபோல் ஈரோட்டில் இருந்து கரூர், மூலனூர், வெள்ளகோவில், தாராபுரம் மற்றும் காங்கேயத்திற்கு செல்லும் அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் காளைமாடு சிலை, லோட்டஸ் ரவுண்டானா வழியாக செல்லலாம்.

    அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் லாரிகளும் ரிங்ரோடு வழியாக முத்துகவுண்டன் பாளையம், ஆணைக்கல்பாளையம், ரங்கம்பாளையம் ஆர்ட்ஸ் காலேஜ் வழியாக திண்டல் வந்தடைந்து மாநகருக்குள் செல்லலாம்.

    இதேபோல் அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் மாற்று பாதையான அண்ணமார் பெட்ரோல் பங்க், நாடார் மேடு, சாஸ்திரி நகர் வழியாக செல்ல கட்டாயம் அனுமதி இல்லை.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×