search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சவுரப் சவுத்ரி"

    உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 17 வயதே ஆன சவுரப் சவுத்ரி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.
    உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டி ஜெர்மனியில் உள்ள முனிச்சில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவுக்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் 17 வயதே ஆன இளைஞர் சவுரப் சவுத்ரி கலந்து கொண்டார்.

    அவர் 246.3 புள்ளிகள் பெற்று சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதற்கு இவர் 245 புள்ளிகள் பெற்றதே உலக சாதனையைாக இருந்து. தற்போது அவரது சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

    சவுரப் சவுத்ரி கடந்த ஆண்டு ஆசிய போட்டி, யூத் ஒலிம்பிக் ஆகியவற்றில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்த வருடம் டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பையில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் மானுபாகெர்-சவுரப் சவுத்ரி ஜோடி உலக சாதனையுடன் தங்கம் வென்றது. #AsianAirgunChampionship #ManuBhaker #SaurabhChaudhary
    புதுடெல்லி:

    12-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் (ஏர்கன்) சாம்பியன்ஷிப் போட்டி சீன தைபேயில் நடந்து வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் மானுபாகெர்-சவுரப் சவுத்ரி ஜோடி 484.8 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.



    தென்கொரியாவின் ஹவாங் சியோன்குன்-கிம் மோஸ் ஜோடி 481.1 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், சீன தைபேயின் வு ஷியா யிங்-கு குயான் டிங் இணை 413.3 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் வென்றனர். மற்றொரு இந்திய ஜோடியான அனுராதா-அபிஷேக் வர்மா 372.1 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த போட்டியின் தகுதி சுற்றில் 17 வயதான மானு பாகெர், 16 வயதான சவுரப் சவுத்ரி ஜோடி 784 புள்ளிகள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது. இந்த வகையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு நடந்த ஐரோப்பிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ரஷியாவின் விடாலினா பாட்சாராஷ்கினா-அர்டெம் செர்னோசோவ் ஜோடி 782 புள்ளிகள் சேர்த்ததே உலக சாதனையாக இருந்தது. #AsianAirgunChampionship #ManuBhaker #-SaurabhChaudhary
    டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் கலப்பு பிரிவில் இந்திய வீரர்கள் மனு பாகர், சவுரப் சவுத்ரி ஜோடி தங்கம் வென்று அசத்தியுள்ளது. #ISSFWorldCup #ManuBhaker #SourabhChoudhary
    புதுடெல்லி:

    சர்வதேச துப்பாக்கி சுடுதல் பெடரேசன் சார்பில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடைபெற்று  வருகிறது.

    இதில், கலப்பு பிரிவுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி இன்று நடைபெற்றது. இதில், சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் மனு பாகர் மற்றும் சவுரப் சவுத்ரி ஜோடி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. #ISSFWorldCup #ManuBhaker #SourabhChoudhary
    டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்று அசத்தினார். #ISSFWorldCup #SourabhChoudhary
    புதுடெல்லி:

    சர்வதேச துப்பாக்கி சுடுதல் பெடரேசன் சார்பில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது.

    இதில், ஆடவர் பிரிவுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி இன்று நடைபெற்றது. இதில், சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 245 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.



    இதன்மூலம் 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்றில் அதிக புள்ளிகளைப் பெற்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். #ISSFWorldCup #SourabhChoudhary
    உலக துப்பாக்கி சுடுதல் ஜூனியர் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பந்தயத்தில் இந்திய இளம் வீரர் சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். #SaurabhChaudhary #ShooterWorldChampionship
    சாங்வான்:

    உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஜூனியர் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பந்தயத்தில் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 245.5 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் ஜூன் மாதம் நடந்த உலக கோப்பை ஜூனியர் போட்டியில் இதே பந்தயத்தில் தான் படைத்து இருந்த உலக சாதனையை (243.7 புள்ளிகள்) சவுரப் சவுத்ரி தகர்த்து நேற்று புதிய சாதனை படைத்தார்.



    உத்தரபிரதேசத்தை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவரான சவுரப் சவுத்ரி சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் தென்கொரியா வீரர் லிம் ஹோஜின் (243.1 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கமும், மற்றொரு இந்திய வீரர் அர்ஜூன் சிங் சீமா (218 புள்ளிகள்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர். இதன் அணிகள் பிரிவில் சவுரப் சவுத்ரி, அர்ஜூன் சிங் சீமா, அன்மோல் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1730 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை வென்றது. தென்கொரியா அணி (1,732 புள்ளிகள்) புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தது. ரஷிய அணி (1,711 புள்ளிகள்) வெண்கலப்பதக்கம் பெற்றது.

    ஜூனியர் ஆண்களுக்கான டிராப் அணிகள் போட்டியில் அமன் அலி எலாஹி, விவான் கபூர், மனவ்ஆதித்யா சிங் ரதோர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 348 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியது. ஆஸ்திரேலிய அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்தியா இதுவரை 4 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்கள் வென்று 3-வது இடத்தில் உள்ளது. #SaurabhChaudhary  #ShooterWorldChampionship 
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற சவுரப் சவுத்ரிக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். #AsianGames2018 #SaurabhChaudhary
    லக்னோ:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி (வயது 16) தங்கப் பதக்கம் வென்றார். இப்போட்டியில் சவுரப் 240.7 புள்ளிகள் எடுத்து புதிய சாதனையும் படைத்துள்ளார். மற்றொரு இந்திய வீரர் அபிஷேக் வெண்கலப் பதக்கம் வென்றார்.

    தங்கம் வென்ற சவுரப் சவுத்ரி உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர். எனவே, அவரது திறமையைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். #AsianGames2018  #SaurabhChaudhary
    ×