search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொம்பு வச்ச சிங்கம்டா"

    கொம்பு வச்ச சிங்கம்டா படத்தை இயக்கி வரும் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. #SRPrabhakaran
    ‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். சசிகுமார் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, இனிகோ பிரபாகரன், சௌந்தரராஜா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். லட்சுமி மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார். 2012ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. 

    இப்படத்தை தொடர்ந்து, இது கதிர்வேலன் காதல், சத்ரியன் ஆகிய படங்களை இயக்கி இருந்தார். தற்போது ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தை இயக்கி வருகிறார். சசிகுமார் - மடோனா செபஸ்டியன் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 



    இந்நிலையில், இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனுக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. 
    பிரேமம் படம் மூலம் மிகவும் பிரபலமான மடோனா செபஸ்டியன் அடுத்ததாக, கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் என்று கூறியிருக்கிறார். #MadonnaSebastian
    சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எஸ்.ஆர்.பிரபாகரன் தற்போது ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தை இயக்க இருக்கிறார். இவர் இதற்குமுன் ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’ ஆகிய படங்களை இயக்கி இருந்தார்.

    தற்போது மீண்டும் சசிகுமாரை கதாநாயகனாக கொண்டு ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்த நிலையில், தற்போது மடோனா செபஸ்டியன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 



    மடோனா பாவாடை தாவணி அணிந்து அசல் கிராமத்துப் பெண்ணாகவே இப்படத்தில் நடிக்க இருக்கிறார். தனுஷ் இயக்கத்தில் வெளியான ப.பாண்டி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஜுங்கா ஆகிய படங்களில் ஏற்கெனவே மடோனா கிராமத்து தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    சுந்தர பாண்டியன் படம் மூலம் எடிட்டராக அறிமுகமான டான் போஸ்கோ, தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். #DonBosco
    ‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் எடிட்டராக அறிமுகமானவர் டான் போஸ்கோ. எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிக்குமார்  நடிப்பில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக இப்படத்தின் எடிட்டிங், சினிமா துறையினரால் அதிகம் கவரப்பட்டது.

    இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘இது கதிர்வேலன் காதல்’, ‘தரணி’, ‘நையப்புடை’ உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக  பணியாற்றியுள்ளார். இன்னும் இவரது எடிட்டிங்கில் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘அழகுக்கு நீ அறிவுக்கு நான்’ என்ற திரைப்படம் தயாராக இருக்கும் நிலையில், ‘7 ஸ்டார் புன்னை நகர் அணி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. மேலும் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கவுள்ள ‘கொம்பு வஞ்ச சிங்கம்டா’ என்ற படத்திலும் எடிட்டராக பணியாற்ற இருக்கிறார்.

    இந்நிலையில் ‘உத்தரவு மகாராஜா’ என்ற படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். இந்த படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடைய தோற்றத்தை பார்க்கும் போது, கதாபாத்திரமும் வித்தியாசமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.



    உதயா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், பிரபு, நாசர், ஸ்ரீமன், மனோபாலா, கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், குட்டி பத்மினி, தனஞ்செயன், சோனியா போஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஆஸிப்குரைஷி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

    எடிட்டர் டான் போஸ்கோ, சமீபத்தில் ‘வா தமிழா’ என்ற ஆல்பத்தை இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமுதாய அக்கறையுடன் வெளியான வா தமிழா ஆல்பம் ரசிகர்களை கவர்ந்து வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. #DonBosco

    சுந்தரபாண்டியன் படத்தில் விஜய்சேதுபதியை வில்லனாக நடித்த வைத்த இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன், அவருடைய அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் என்று கூறியிருக்கிறார். #VijaySethupathi
    ‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். சசிகுமார் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, இனிகோ பிரபாகரன், சௌந்தரராஜா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். லட்சுமி மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

    2012ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. இதில் விஜய் சேதுபதி வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். இது அவருக்கு சிறந்த பெயரை பெற்றுத் தந்தது. தற்போது விஜய் சேதுபதி முன்னணி நடிகராக இருக்கிறார். விஜய் சேதுபதி குறித்து இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் மாலைமலருக்கு அளித்த பேட்டியில், ‘விஜய் சேதுபதி என்னுடைய நண்பர். அவரது ஆரம்ப காலத்தில் இருந்து அவருடன் பழகி வருகிறேன். அவருடைய வளர்ச்சியை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.

    திரையுலகில் எந்த பின்புலமும் இல்லாமல் முன்னேறி வருகிறார். அவருடைய வளர்ச்சி அவரையே சார்ந்தது. சினிமாவில் நிறைய அரசியல் இருக்கிறது. அதையெல்லாம் கடந்து ஹீரோவாக இருக்கிறார். நிறைய ரசிகர்கள் அவருக்கு இருக்கிறார்கள். திறமையானவர். ரசிகர்களை தக்கவைத்து வருகிறார். 

    விஜய் சேதுபதியும் நானும் இணைந்து படம் உருவாக்க திட்டமிட்டோம். வரிசையாக அவர் வேறு படங்களில் நடித்து வந்ததால் நான் தொந்தரவு செய்யவில்லை. நல்ல உயரத்திற்கு விஜய் சேதுபதி சென்று கொண்டிருக்கிறார். அவருடைய அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன்’ என்றார்.

    எஸ்.ஆர்.பிரபாகரன் தற்போது சசிகுமாரை வைத்து ‘கொம்பு வச்ச சிங்கடா’ என்ற படத்தை இயக்க இருக்கிறார். இதன் மோஷன் போஸ்டரை நடிகர் சூர்யா இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தின் மோஷன் போஸ்டரை சூர்யா வெளியிட்டுள்ளார். #KombuVatchaSingamda
    எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து ரிலீஸான படம் ‘சுந்தர பாண்டியன்’. 2012-ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும் ‘சத்ரியன்’ ஆகிய படங்களை இயக்கினார் எஸ்.ஆர்.பிரபாகரன். 

    தற்போது மீண்டும் சசிகுமாருடன் இணைந்திருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். இந்தப் படத்துக்கு ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

    இதன் மோஷன் போஸ்டரை தமிழ் சினிமாவில் சிங்கம் என்று அழைப்படும் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். தற்போது இதன் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.


    ×