search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைலாசநாதர் கோவில்"

    • நாயக்கர் மன்னர்களின் காலத்தில் மந்திரியாக விளங்கியவர் அரியநாதர்.
    • மூன்று தலைமுறையாக இவரே தளபதி மற்றும் மந்திரியாகவும் இருந்தார்.

    நாயக்கர் மன்னர்களின் காலத்தில் மந்திரியாக விளங்கியவர் அரியநாதர்.

    அவர் அந்தணர்கள் தங்கி பூஜை செய்யும் ஒரு அற்புத கிராமத்தை தாமிரபரணி கரையில் உருவாக்கியுள்ளார்.

    அந்த ஊரின் பெயர் அரியநாயகிபுரம்.

    இந்த கிராமம் மற்றும் சிவன் கோவில் தோன்றிய வரலாற்றை பார்ப்போம்.

    பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தாமிரபரணி நதிக்கரையில் 15 சிறுவர்கள் மணல் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த அந்தணர் ஒரு பையனைப் பார்த்து, "தம்பி..தம்பி... தம்பி" என்று தனியாக கூப்பிட்டார்.

    "என்ன சாமி" என்று அந்த பையனும் வந்தான்.

    அவனிடம், "தம்பி நீ வருங்காலத்தில் பெரிய பொறுப்பு உள்ளவனாக வரப்போகிறாய்" என்றார்.

    அந்த பையன் சிரித்தபடியே, "அட போங்க சாமி... உங்களுக்கு வேறு வேலை கிடையாது" என்று கூறி விட்டு கிளம்பினான்.

    ஆனால் பிராமணர் விடவில்லை.

    "தம்பி... நாம இரண்டு பேரும் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம்.

    நீ பெரிய ஆளாய் இருக்கும்போது இந்த ஒப்பந்தத்தை யார் கொண்டு வருகிறார்களோ, அவர்கள் கேட்கும் உதவியை நீ செய்து கொடுக்க வேண்டும்" என்றார்.

    விளையாட்டு பையனாக இருந்த அந்த பையனும் பிராமணரிடம் ஓலைச்சுவடி ஒன்றில் ஒப்பந்தம் எழுதிக் கொடுத்தான்.

    அதில், "பல ஆண்டுகள் கழித்து சிறு பையனான நான் பெரிய மந்திரியானால் இவருடைய வாரிசு யார் வந்து

    எது கேட்டாலும் அப்படியே கொடுத்து விடுவேன்" என்று எழுதி அந்த ஓலைச் சுவடியை பிராமணர் வசம்

    சிறுவன் கொடுத்து அனுப்பினான்.

    காலங்கள் உருண்டோடின. இருபது ஆண்டுகள் கழிந்தது.

    அந்த பையன் பிற்காலத்தில் அரியநாத முதலியார் ஆனார்.

    அவரே விஸ்வநாத நாயக்கரின் அரசவையில் தளபதியாகவும் மந்திரியாகவும் செயல்பட்டார்.

    அவரிடம் மட்டுமல்லாமல் அவரது மகன் கிருஷ்ணப்ப நாயக்கர், பேரன் வீரப்ப நாயக்கர் காலத்திலும் மூன்று

    தலைமுறையாக இவரே தளபதி மற்றும் மந்திரியாகவும் இருந்தார்.

    ஆனால் அரியநாத முதலியார் சிறுவயதில் பிராமணரிடம் போட்ட ஒப்பந்தத்தை முழுவதுமே மறந்திருந்தார்.

    ஒருநாள் அழுக்கு வேஷ்டியுடன் ஒரு அந்தணர் அரண்மனை வாயிலில் மந்திரியை தேடி நின்றார்.

    வாயிற்காவலர்கள் ஓடிப் போய் மந்திரியிடம் கூறினர்.

    உடனே அந்த அந்தணரை அழைத்து வரச் சொன்னார் அரியநாயக முதலியார்.

    ஓலைச் சுவடியுடன் உள்ளே வந்த அந்த பிராமணரை முழுவதுமாகவே அரியநாதருக்கு தெரியவில்லை.

    பிராமணர் தான் கொண்டு வந்திருந்த ஓலைச்சுவடியை எடுத்துக் கொடுத்தார்.

    அதை எடுத்து பார்த்த அரியநாதருக்கு தனது 15வது வயதில் ஆற்றங்கரையில் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.

    உடனே வந்த பிராமணருக்கு தனி ஆசனம் கொடுத்து மரியாதை செய்தார். "என்ன வேண்டும் கேளுங்கள்" என்றார்.

    "மந்திரியே... தாமிபரணி நதிக்கரை யோரம் ஒரு சின்ன கிராமம் வேண்டும். அதில் நல்லதொரு சிவாலயம் வேண்டும்.

    அதில் பூஜை செய்ய வேதபோத அந்தணர்களை பணியமர்த்த வேண்டும்.

    அவர்கள் அந்த சிவாலயத்தில் நாடு சுவிட்சம் பெற பூஜை செய்ய வேண்டும்" என்றார்.

    "சரி, அப்படியே செய்கிறேன்" என்ற அரியநாதர் "கோவில் அமைய வேண்டிய இடத்தை காட்டுங்கள்" என்றார்.

    அந்தணரோ, தற்போது அரியநாயகிபுரம் உள்ள இடத்தை காட்டினார்.

    உடனே கோவில் கட்டும் பணி தொடங்கியது. அதன்பின் கிராமம் அமைக்கப்பட்டது.

    அதில் சிவபெருமானுக்கு கைலாசநாதர் என்று பெயரிடப்பட்டு, அன்னைக்கு அரியநாயகி என்று பெயரிட்டனர்.

    பெரும்பாலும் ஒரு கோவிலை கட்டுபவர் அவரது பெயரிலே சிவன் அழைக்கும்படி பெயரிடுவார்கள்.

    ஆனால் இவ்வூர் கோவிலில் தாயார் பெயர் அரியநாதர் பெயரில் அரியநாயகி என்று அழைக்கப்படுகிறார்.

    இவ்வூரில் 21 வீரபுத்திரர் கோவில் உள்ளது சிறப்பம்சமாகும்.

    நடை காலை 6 மணியில் இருந்து 10 மணி வரைக்கும் மாலை 4 மணியில் இருந்து இரவு 7 மணி வரைக்கும் திறந்து இருக்கும்.

    இக்கோவிலுக்கு செல்ல வேண்டுமென்றால் திருநெல்வேலி சந்திப்பில் இருந்து முக்கூடல் செல்லும் அனைத்து டவுண் பஸ்களிலும் செல்லலாம்.

    இல்லையென்றால் சேரன்மகாதேவியில் இருந்து வேன் வசதிகள் உள்ளது.

    • விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.
    • 29-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள கைலாசநாதர் -சவுந்தரவல்லி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள், பக்தி கோஷங்கள் எழுப்பி சுவாமியை வழிபட்டனர்.

    விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. மறுநாள் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

    • வேம்பத்தூர் கைலாசநாதர் கோவிலில் வருடாபிஷேக விழா நடந்தது.
    • இரவு பவுர்ணமி திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வேம்பத்தூரில் அமைந்துள்ள ஆவுடை நாயகி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவிலில் வருடாபிஷேக விழா நடந்தது.

    இந்த கோவிலில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்தாண்டு குடமுழுக்கு நடைபெற்றது.

    இந்த கோவிலில் மட்டும் நவகிரகங்களில்உள்ள புதன் பகவான் சிம்ம வாகனத்தில் காட்சிகொடுப்பதால் தென்மாவட்டங்களில் உள்ள புதன் தலமாக கருதப்படுகிறது. மாசி மகம் தினத்தில் வருடாபிஷேக விழா நடந்தது.

    கோவில் முன் மண்டபத்தில் புனித நீர்க் கலசங்கள் வைத்து யாக பூஜைகள் நடந்தன. பூர்ணாகுதி முடிந்து தீபாராதனை காட்டப்பட்டது. கைலாசநாதர் சுவாமிக்கும், ஆவுடை நாயகி அம்மனுக்கும் புனித நீரால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. அதன் பின்னர் கோவில் பரிவார தெய்வங்களுக்கும் பூஜை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    பின்னர் கோவிலில் நடந்த அன்னதானத்தில் பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு பவுர்ணமி திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது.

    • புதிதாக அமைக்கப்பட்ட கோவில் குளத்தின் கரையின் ஒரு பகுதி சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக சரிந்து விழுந்தது.
    • கட்டுமான பணி தரமாக நடைபெறவில்லை என்று பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள ஐயங்கார்குளம். இங்குள்ள கைலாசநாதர் கோவிலை ஒட்டி உள்ள குளம் சுமார் ரூ.32 லட்சம் மதிப்பில் புனரமைக்கும் பணி கடந்த மே மாதம் தொடங்கியது.

    இந்த நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட கோவில் குளத்தின் கரையின் ஒரு பகுதி சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக சரிந்து விழுந்தது. மேலும் குளத்தை சுற்றிலும் ஆங்காங்கே மண் சரிவும் ஏற்பட்டு உள்ளது.

    இதனால் கட்டுமான பணி தரமாக நடைபெறவில்லை என்று பக்தர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    • சிறப்பு அலங்காரத்தில் கைலாசநார் சுவாமி தேருக்கு எழுந்தருளினார்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் சந்திப்பு கைலாசபுரம் கைலாசநாதர் கோவிலும் ஒன்று.

    இந்த கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    10-நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    8-ம் திருவிழாவான நேற்று காலை சிவகாமி அம்பாள், சமேத ஆனந்த நடராஜருக்கு பச்சை சாத்தி செப்பு சப்பரத்தில் வீதி உலா நடந்தது.

    மாலை பரிவேட்டைக்கு குதிரை வாகனத்தில் சந்திரசேகரர் எழுந்தருளினார். தொடர்ந்து செப்பு சப்பரத்தில் சுவாமி கங்காளநாதர் வீதி உலா நடந்தது.

    இரவில் சுவாமி அம்பாள் பூஞ்சப்பரத்தில் வீதி உலா மற்றும் தேர் கடாட்சம் நடந்தது.

    சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்பு இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றது.

    தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கைலாசநார் சுவாமி தேருக்கு எழுந்தருளினார். பின்னர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு நான்குரதவீதிகளிலும் சென்றது.

    தொடர்ந்து காணிக்கையாக வழங்கப்பட்டு வந்த பழங்கள் சூரைவிடும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

    தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    10-ம் திருவிழாவான நாளை 8-ந் தேதி கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றில் சுவாமி அம்பாள் தீர்த்தவாரியும், அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.

    ×