search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கெட்டுப்போன"

    • கெட்டுப்போன 40 கிலோ இறைச்சி பறிமுதல்
    • 5 கடைகளுக்கு ரூ.13,000 அபராதம்

    நாகர்கோவில்:

    நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பலியானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் குமார பாண்டியன், சங்கர நாராயணன் ஆகியோர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். நாகர்கோவில் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதேபோல் மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 40 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.

    மேலும் காலாவதியான மீன் குழம்பு 1½ கிலோ, சூடு படுத்தி பயன்படுத்தி எண்ணெய் 2 லிட்டரும், மாட்டு இறைச்சி 3 கிலோ, கெட்டுப்போன பால் 11 லிட்டர், புரோட்டா 4 கிலோ, வேகவைத்த மீன் குழம்பு ½ கிலோ, வத்த குழம்பு 4 கிலோ, கெட்டுப்போன முந்திரி 2 கிலோ பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. முறையான பராமரிப்பின்றி உணவு தயார் செய்த 7 உணவுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5 கடைகளுக்கு ரூ.13,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். சவர்மா, மீன், கோழி, ஆடு, மாட்டு இறைச்சி தயாரித்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு தர சட்டத்தின் படி உணவு பாதுகாப்பு உரிமை அல்லது பதிவு சான்றிதழ் பெற்று பொது மக்களின் பார்வைக்கு தெரியும்படி தொங்கவிட வேண்டும். அசைவ உணவு பொருட்களை சமைத்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் தாங்கள் விற்பனை செய்யும் அசைவ உணவுகளை அன்றே தேவைக்கு வாங்கி விற்பனை செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் விற்பனை செய்தது போக மீதம் உள்ள உணவு மற்றும் இறைச்சி வகைகள் மீண்டும் குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது. சமைய லறை உணவு பொருட்கள் சேமித்து வைக்கும் இடம் சமைத்த உணவை பரா மரிக்கும் இடம் ஆகிவை சுத்தமாக சுகாதாரமாக இருக்க வேண்டும். உணவுகையாளுபவர்கள் கையுறை அணிந்திருக்க வேண்டும்.

    பாதுகாப்பான சுத்தமான கொதிக்க வைக்கப்பட்ட குடிநீரை வாடிக்கை யாளர்களுக்கு வழங்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் சூடுபடுத்தி உபயோகப்படுத்த கூடாது. சவர்மா தயாரிக்கும் இடம் மற்றும் புரோட்டா தயாரிக்க பயன்படுத்தும் மேஜை மற்றும் அடுப்பு ஆகியவை கடைக்கு வெளியே இருந்தால் தூசிகள் படாத வண்ணம் தடுப்புகள் அமைத்து சுத்தமாக பராமரிக்க வேண்டும். அல்லது கடைக்கு உட்புறம் வைக்க வேண்டும். பொது மக்கள் உணவு தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால் 94440 42322 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தெரிவித்துள்ளார்.

    • பவானிசாகர் பூங்கா பகுதிகளில் செயல்படும் மீன் கடைகள், தள்ளு வண்டி கடைகளில் சோதனை செய்தபோது கெட்டுப்போன மீன் பறிமுதல் செய்யப்பட்டன.
    • பின்னர் மீண்டும் இதே கடைகளில் நாங்கள் ஆய்வு செய்வோம். அப்போதும் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவது தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை பூங்கா சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இங்கு சாதாரண நாட்களை விட வார இறுதி நாட்களில் கூட்டம் அலைமோதும்.

    பவானிசாகர் அணை பூங்காவையொட்டி 20-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. இங்குள்ள பொறித்த மீன்களை சாப்பிடுவதற்கு என்றே தனி கூட்டம் உள்ளது.

    இந்நிலையில் பவானிசாகர் மீன் விற்பனை நிலையம் மற்றும் பூங்கா எதிரில் செயல்படும் மீன் ரோஸ்ட் கடைகள் மற்றும் உணவகங்களில் கெட்டுப்போன மீன் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

    சத்தியமங்கலம் வட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மணி தலைமையிலான அலுவலர்கள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனையில் 15 கிலோ கெட்டுப்போன மீன் இறைச்சி, செயற்கை நிறம் ஏற்றப்பட்டு பொரித்து வைக்கப்பட்ட 5 கிலோ மீன் ரோஸ்ட் வகை, செயற்கை நிறம் சேர்க்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்த 5 கிலோ மீன்கள் என மொத்தம் 25 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் அனைத்தையும் அழித்தனர்.

    பின்னர் செயற்கை நிறம் சேர்க்காமல் மீன் இருக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்தும் எண்ணையை மீண்டும் பயன்படுத்த கூடாது. மீன்கள் தரமானதாகவும் செயற்கை நிறம் சேர்க்கப்படாமல் மசாலா பொடிகள் மட்டுமே கலக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

    பவானிசாகர் பூங்கா பகுதிகளில் செயல்படும் மீன் கடைகள், தள்ளு வண்டி கடைகளில் சோதனை செய்தபோது கெட்டுப்போன மீன் பறிமுதல் செய்யப்பட்டன.

    செயற்கை நிறம் ஏற்றப்பட்டு பொறித்து வைக்கப்பட்ட மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன.இந்த கடைக்காரர்களுக்கு 14 நாட்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இதன் பின்னர் மீண்டும் இதே கடைகளில் நாங்கள் ஆய்வு செய்வோம். அப்போதும் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவது தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×