search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றவாளிகள் கைது"

    • கைது செய்யப்பட்ட 19 பேரில் 5 பேர் பழைய குற்றவாளிகள் ஆவார்கள்.
    • கைதானவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறை மற்றும் புழல் சிறையில் அடைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் பழைய குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தி கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் தாலுக்கா போலீஸ் நிலைய பகுதிகளில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த தினேஷ், வெங்கடேசன், சச்சின், செல்வம், நரேஷ், சபரி, சரவணன், கவுதம், அலெக்ஸ், பிரீத்தி குமார், வல்லரசு, சூர்யா, விக்னேஷ், தினேஷ் மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகாஞ்சி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் பகுதியைச் சேர்ந்த கமல்ராஜ், விஜயராகவன், தினேஷ் ஆகிய மூன்று பேரும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புட்டா முருகனும் கைது செய்யப்பட்டனர்.

    ஒரே நாளில் 19 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட 19 பேரில் 5 பேர் பழைய குற்றவாளிகள் ஆவார்கள். அவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறை மற்றும் புழல் சிறையில் அடைத்தனர்.

    • அரசு குற்றவியல் வழக்கறிஞர் பிடிவாரண்டுகளை உடனடியாக நிறைவேற்ற கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.
    • நிலுவையில் உள்ள அனைத்து கோர்ட்டு பிடிவாரண்டுகளையும் நிறைவேற்றுமாறு அனைத்து மாநகர போலீஸ் ஆணையர்களுக்கும் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தி இருந்தார்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் பிடிவாரண்டு குற்றவாளிகளை பிடிக்க அதிரடி வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் கோர்ட்டுகளால் பிறக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் உள்ள ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகள் குறித்து சென்னை ஐகோர்ட்டு போலீசாரிடம் அறிக்கை கோரி இருந்தது.

    இதுதொடர்பாக அரசு குற்றவியல் வழக்கறிஞர் பிடிவாரண்டுகளை உடனடியாக நிறைவேற்ற கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.

    தமிழகத்தில் உள்ள கோர்ட்டுகளால் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டுகளை நிறைவேற்றி சம்பந்தப்பட்டவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த கடந்த (பிப்ரவரி) 28-ந்தேதி முதல் வருகிற (மார்ச்) 9-ந்தேதி வரை 10நாட்கள் ஆபரேஷன் வாரண்ட் என்ற பெயரில் நடவடிக்கையை போலீஸ் துறை மேற்கொண்டுள்ளது.

    இந்த நடவடிக்கையின் போது நிலுவையில் உள்ள அனைத்து கோர்ட்டு பிடிவாரண்டுகளையும் நிறைவேற்றுமாறு அனைத்து மாநகர போலீஸ் ஆணையர்களுக்கும் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தி இருந்தார்.

    அதன்படி முதல் 48 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் 1,004 பிடிவாரண்டுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை முக்கிய குற்றவாளிகளில் சுமார் 90 பேரை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும் எவ்வித அசாம்பாவிதமுமின்றி பொங்கள் தினங்களை கொண்டாட வேண்டி நாளை (17-ந் தேதி வரை) திருவள்ளூர் மாவட்டம் காவல்துறையின் சார்பாக காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 8 - உதவி மற்றும் துணை காவல் கண்காணிப்பா ளர்களும், 10 - காவல் ஆய்வாளர்களும், 80 - உதவி ஆய்வாளர்களும், 400 காவல் ஆளினர்களும் மற்றும் 100 - ஊர் காவல் படையினர்களும் சேர்ந்து சுமார் 600 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    பொதுமக்கள் அதிகமாக கூடும் திருத்தலங்கள், பஜார் வீதிகள், சினிமா தியேட்டர்கள், சுற்றுலா தலங்களான பூண்டி நீர்தேக்கம் மற்றும் பழவேற்காடு போன்ற பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்கள், மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் வாகன சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அமைதியான முறையில் பொங்கல் தினங்களை கொண்டாட வேண்டி முக்கிய குற்றவாளிகளை கைது செய்யவும் அவர்களை கண்காணித்து வரவும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை முக்கிய குற்றவாளிகளில் சுமார் 90 பேரை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சென்னையில் செயின் பறிப்பு, வழிப்பறி, திருட்டு போன்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க போலீசார் அதிரடி வேட்டையை தொடங்கினார்.
    • சென்னையில் 4 மண்டலங்களிலும் 2500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவானதை தொடர்ந்து அதிரடி வேட்டையை போலீசார் நடத்தினார்கள்.

    சென்னை:

    சென்னையில் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதேபோல் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு எதிராகவும் போலீசார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் சென்னையில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் சென்னையில் செயின் பறிப்பு, வழிப்பறி, திருட்டு போன்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க போலீசார் அதிரடி வேட்டையை தொடங்கினார்.

    சென்னையில் நேற்று முன்தினம் குற்றவாளிகளை பிடிக்கும் சிறப்பு நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டனர். சென்னையில் 4 மண்டலங்களிலும் 2500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவானதை தொடர்ந்து இந்த அதிரடி வேட்டையை போலீசார் நடத்தினார்கள். அப்போது வீடு புகுந்து திருடுதல், செல்போன், செயின் பறிப்புகளில் ஈடுபட்ட 563 குற்றவாளிகளை போலீசார் அடையாளம் கண்டனர்.

    சென்னையில் கிழக்கு மண்டலத்தில் 167 குற்றவாளிகளும், வடக்கு மண்டலத்தில் 148 குற்றவாளிகளும், தெற்கு மண்டலத்தில் 141 குற்றவாளிகளும், மேற்கு மண்டலத்தில் 107 குற்றவாளிகளும் அடையாளம் காணப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் குற்றவாளிகளின் பட்டியலை சேகரித்தனர்.

    இதன் அடிப்படையில் போலீசார் 403 குற்றவாளிகளை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர். இவர்கள் வீடுகளில் பூட்டை உடைத்து திருடுதல் மற்றும் வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் ஆவர். இவர்களில் 10 பேர் போலீஸ் காவலில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாக இருந்தனர். அவர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் குற்றவாளிகள் 29 பேர் திருந்தி புதிய வாழ்க்கையை தொடங்கும் வகையில் அவர்களிடம் பாதுகாப்பு பத்திரம் பெற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 160 குற்றவாளிகளை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ×