search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவள்ளூர் மாவட்டத்தில் 90 குற்றவாளிகள் கைது
    X

    திருவள்ளூர் மாவட்டத்தில் 90 குற்றவாளிகள் கைது

    • பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை முக்கிய குற்றவாளிகளில் சுமார் 90 பேரை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும் எவ்வித அசாம்பாவிதமுமின்றி பொங்கள் தினங்களை கொண்டாட வேண்டி நாளை (17-ந் தேதி வரை) திருவள்ளூர் மாவட்டம் காவல்துறையின் சார்பாக காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 8 - உதவி மற்றும் துணை காவல் கண்காணிப்பா ளர்களும், 10 - காவல் ஆய்வாளர்களும், 80 - உதவி ஆய்வாளர்களும், 400 காவல் ஆளினர்களும் மற்றும் 100 - ஊர் காவல் படையினர்களும் சேர்ந்து சுமார் 600 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    பொதுமக்கள் அதிகமாக கூடும் திருத்தலங்கள், பஜார் வீதிகள், சினிமா தியேட்டர்கள், சுற்றுலா தலங்களான பூண்டி நீர்தேக்கம் மற்றும் பழவேற்காடு போன்ற பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்கள், மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் வாகன சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அமைதியான முறையில் பொங்கல் தினங்களை கொண்டாட வேண்டி முக்கிய குற்றவாளிகளை கைது செய்யவும் அவர்களை கண்காணித்து வரவும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை முக்கிய குற்றவாளிகளில் சுமார் 90 பேரை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×