search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடித்து தற்கொலை"

    • சம்பவத்தன்று வீட்டில் திடீரென பவித்ரா வாந்தி எடுத்துள்ளார்.
    • சிகிச்சை பலனின்றி பவித்ரா பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி. இவருக்கு ஒரு மகனும், பவித்ரா (26) என்ற மகளும் உள்ளனர்.

    பவித்ராவுக்கு வீட்டில் திருமணத்திற்காக வரம் பார்த்து வந்துள்ளனர். ஆனால் தற்போது தனக்கு திருமணம் வேண்டாம் என்று பவித்ரா கூறி வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் திடீரென பவித்ரா வாந்தி எடுத்துள்ளார். இது குறித்த அவர் பெற்றோர் கேட்கும் போது தான் பூச்சிகொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டதாக பவித்ரா கூறியுள்ளார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மகளை மீட்டு சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவில் உள்ள தனியார் மருத்துவ மனையில் பவித்ரா அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவரது நிலைமை மோசம் அடைந்ததால் கோவை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.

    எனினும் சிகிச்சை பலனின்றி பவித்ரா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குமாரசாமி கவுண்டர் பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டார்.
    • போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி தில்லை நகரை சேர்ந்தவர் குமார சாமி கவுண்டர் (வயது 66). இவர் விவசாய வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் கை, கால் மற்றும் வயிற்றில் அடிப்பட்டது. அதை தொட ர்ந்து மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றார்.

    இந்நிலையில் மீண்டும் கை, கால் மற்றும் வயிற்று வலி இருந்ததால் மன வேதனை அடைந்த குமாரசாமி கவுண்டர் தோட்ட த்திற்கு வைத்திருந்த பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டார்.

    பின்னர் உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக புளியம்பட்டி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு ெகாண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்து வர்கள் குமாரசாமி கவு ண்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இதுகுறித்து குமாரசாமி கவுண்டரின் மகன் சக்திவேல் முருகன் புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடு த்தார். புகாரின் பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தங்கவேல் விஷம் குடித்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கோவை மாவட்டம் புளியங்குளம் பகுதியை சேர்ந்தவர் வாட்ச் மேன் தங்கவேல் (வயது 70). இவருக்கு திருமணம் ஆகவில்லை. தங்கவேல் இவரது சகோதரி வனஜா என்பவரது வீட்டில் வசித்து வந்தார்.

    இதையடுத்து தங்கவேல் சேலத்திற்கு சென்று வேலை செய்வதாக கூறிவிட்டு சென்றார். இந்நிலையில் தங்கவேல் சித்தோடு லட்சமி நகர் பகுதியில் விஷம் குடித்து கிடப்பதாக வனஜாவிற்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தங்கவேலை ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதலுதவி பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த தங்கவேல் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து வனஜா சித்தோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கவுரிசங்கர் விஷத்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
    • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த துடுப்பதி, டி. பள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர் கவுரிசங்கர் (40). இவரது மனைவி பிரீத்தா.

    திருமணம் ஆகி 2 மாதத்தில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு கவுரி சங்கரை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.

    இதனையடுத்து கவுரிசங்கர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி குடித்து திரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கவுரிசங்கர் விஷத்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை ஐ.ஆர்.டி.டி. மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கவுரிசங்கர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • பிரேமா அடிக்கடி செத்துப் போய் விடுவதாக கூறிவந்துள்ளார்.

    கோபி, 

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த பொலவக்காளி பாளையம், பூசாரி வலசு பகுதியைச் சேர்ந்தவர் பிரேமா (60). கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பிரேமா வீட்டில் தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் இடது பக்க இருப்பில் பலத்த அடிபட்டு கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மாவு கட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    எனினும் வலி பொறுக்க முடியாமல் பிரேமா அடிக்கடி செத்துப் போய் விடுவதாக கூறிவந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வலி தாங்க முடியாமல் வீட்டிலிருந்த சாணிபவுடரை (விஷம்) குடித்து வாந்தி எடுத்தார். அக்கம் பக்கத்தி னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி பிரேமா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • செல்போன் பார்ப்பதை கண்டித்ததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    வாணாபுரம் அருகே வாழ வச்சனூர் பகுதியைச் சேர்ந்த வர் தணிகாசலம். இவரது மகள் வர்ஷா (வயது 14). இவர் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    வர்ஷா சம்பவத்தன்று வீட் டில் வேலை செய்யாமல் செல்போனில் படம் பார்த் துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவ ரது தாய் கண்டித்துள்ளார். தனால் மனவேதனை அடைந்த வர்ஷா வீட்டில் இருந்த விஷத்தை குடித்து விட்டு தாயிடம் கூறினார். இதனையடுத்து அவரை சிகிச் சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வர்ஷா

    பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×