search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்பந்து வீராங்கனை"

    • வயலட்டா மிதுல் தமது தேசிய அணிக்காக 40 முறை களமிறங்கியுள்ளார்.
    • 26 வயதேயான வயலட்டா மிதுல் ஐரோப்பாவின் பல நாடுகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மால்டோவா மகளிர் கால்பந்து அணியின் முக்கிய வீரரான வயலட்டா மிதுல் விபத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் மொத்த கால்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    மால்டோவா மகளிர் கால்பந்து அணியின் நட்சத்திர வீராங்கனையான 26 வயது வயலட்டா மிதுல் தமது தேசிய அணிக்காக 40 முறை களமிறங்கியுள்ளார். இந்த நிலையில் செப்டம்பர் 4-ம் திகதி தமது சக கால்பந்து வீராங்கனை ஒருவருடன் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டவர் விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார்.

    அவரது மரணம் தொடர்பில் கால்பந்து அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் வீரர், சக வீரர் மற்றும் நண்பரின் திடீர் மரணத்தை எங்கள் இதயங்களில் ஆழ்ந்த சோகத்துடன் அறிவிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

    26 வயதேயான வயலட்டா மிதுல் ஐரோப்பாவின் பல நாடுகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முன்ஜாமின் மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.
    • வீராங்கனை பிரியா மரணம் விவகாரத்தில் மருத்துவர்களுக்கு முன்ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    கால் முட்டியில் ஏற்பட்ட ஜவ்வு கிழிவு காரணமாக சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியா, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது கால் அகற்றப்பட்டது.

    தீவிர சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தார்.

    பெரியார்நகர் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் கடந்த 15ம் தேதி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து, தவறான சிகிச்சை அளித்ததாக கூறி மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களான பால் ராம்சங்கர் மற்றும் சோமசுந்தர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்கக்கோரி இருவரும் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

    அதில், இதுபோன்று பல்வேறு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளோம். நாங்கள் அறுவை சிகிச்சை செய்த பலர் இன்று நல்ல நிலையில் உள்ளனர். ஆனால், மாணவி உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது.

    இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர்கள் குழு விசாரணைக்கு ஆஜராக வேண்டியுள்ளதால் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும். போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளோம்.

    சாட்சிகளை கலைக்க மாட்டோம். ஐகோர்ட்டு விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்கிறோம்" என்று கூறியுள்ளனர்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, வீராங்கனை பிரியா மரணம் விவகாரத்தில் மருத்துவர்களுக்கு முன்ஜாமின் வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும், முன்ஜாமின் மனு மீது 2 வாரங்களில் பதிலளிக்க காவல்துறைக்கு உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

    இதற்கிடையே, மருத்துவர்கள் தரப்பு வாதத்தின்போது, "பிரியாவின் அறுவை சிகிச்சைக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்த இருவரும் நன்றாக உள்ளனர். இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டுவிட்டது. எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். மருத்துவ குழுவினர் விசாரணைக்கு ஆஜராக வேண்டி உள்ளதால் முன்ஜாமின் வழங்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

    பின்னர், "மருத்துவர்கள் பணியில் கவனக்குறைவாக இருந்தார்களா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், மருத்துவர்களுக்கு முன்ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி "தற்போதுதான் சம்பவம் நடந்துள்ளதால் விசாரணை நடத்த அவகாசம் வேண்டும். உங்களுக்கான பாதுகாப்பை அரசு வழங்கும். ஆனால், எந்த நிவாரணமும் வழங்க முடியாது. வேண்டுமானால் சரண் அடையுங்கள்" என்று தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முன்ஜாமின் கோரி மருத்தவர்கள் இரண்டு பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
    • பல அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக 2 மருத்துவர்களும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர்களை பணி இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

    பின்னர், பிரியா உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குப்பிரிவில் மாற்றம் செய்யப்பட்ட. சந்தேக மரணம் என்ற பிரிவை மாற்றி கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என வழக்கு பதிந்துள்ளனர். சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று கைது நடவடிக்கை தொடங்கும் என பெரவள்ளூர் போலீசார் தகவல் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், இந்த விவகாரத்தில் முன்ஜாமின் கோரி மருத்தவர்கள் இரண்டு பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    மருத்துவர்களான பால்ராம் சங்கர், சோமசுந்தர் ஆகியோரின் மனுக்கள் மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்த மனுவை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விசாரிக்கிறார்.

    அந்த மனுவில், "பல அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக" 2 மருத்துவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரியா உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று கைது நடவடிக்கை தொடங்கும்.

    சென்னையில் தவறான சிகிச்சையால் மாணவி பிரியா உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்களை பணி இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

    பின்னர், பிரியா உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், இந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குப்பிரிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சந்தேக மரணம் என்ற பிரிவை மாற்றி கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என வழக்கு பதிந்துள்ளனர். சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று கைது நடவடிக்கை தொடங்கும் என பெரவள்ளூர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

    • விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சையால் காலை இழந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி இரு தினங்களுக்கு முன் இறந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது மருத்துவ குழுவினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் சிகிச்சையின் போது மருத்துவர்கள் அஜாக்கிரதையாக இருந்ததும், மாணவிக்கு தவறான சிகிச்சை அளித்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து, மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர்கள்மீது துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மாணவிக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை குறித்த விவரங்கள் காவல்துறைக்கு கிடைக்காததால் அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில், பிரியா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை மருத்துவ கல்வி இயக்குனரகம், காவல்துறையிடம் ஒப்படைத்தது. விசாரணை அறிக்கையைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கையை போலீசார் மேற்கொள்ளுவார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

    • பிரியாவின் சகோதரர்கள் தேர்வு செய்யும் 10 பெண்களின் பயிற்சிக்கான செலவை பாஜக ஏற்கும்.
    • நிர்வாக கோளாறு காரணமாக ஒரு உயிர் பறிபோயுள்ளது.

    சென்னையில் அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி பிரியாவின் வீட்டிற்கு நேரில் சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாணவியின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பிரியாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை கூறியதாவது:-

    இந்தியாவில் மருத்துவ கட்டமைப்பு மிக நன்றாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழகம். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு நவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாணவி பிரியாவின் பெயரில் சென்னை முழுவதும் கால்பந்தாட்ட போட்டியை பாஜக நடத்த உள்ளது.

    மேலும், பிரியாவின் சகோதரர்கள் தேர்வு செய்யும் 10 பெண்களின் பயிற்சிக்கான செலவை பாஜக ஏற்கும்.

    பிரியாவின் சிகிச்சை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் முரண்பட்ட தகவல்களை தெரிவிக்கிறார்.

    முதலமைச்சரின் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் இந்த தவறு நடந்துள்ளது. நிர்வாக கோளாறு காரணமாக ஒரு உயிர் பறிபோயுள்ளது.

    இந்த உயிரிழப்புக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். அரசு பொறுப்பேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரத்த ஓட்டம் தடைப்பட்டதால் அறுவை சிகிச்சை மூலம் காலை அகற்றிவிட்டனர்.
    • கவனக்குறைவான சிகிச்சை தொடர்பாக 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார்- உஷாராணி தம்பதியின் மகள் பிரியா (வயது17). கால்பந்து வீராங்கனையான இவர் மூட்டு வலி சிகிச்சைக்காக பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்து கொண்டார். அதன்பிறகும் கால் வலி அதிகரித்ததால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைப்பட்டதால் அறுவை சிகிச்சை மூலம் அவரது காலை அகற்றிவிட்டனர்.

    அதன்பிறகு அவரது உடல்நிலை படிப்படியாக மோசம் அடைந்து நேற்று பிரியா பரிதாபமாக இறந்து விட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. பிரியா மரணம் தொடர்பாக 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

    • கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • மருத்துவர் தலைமறைவாக இருந்தால் காவல்துறை நடவடிக்கை எடுப்பார்கள்.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டையில் நீர்நிலை ஓரங்களில் உள்ள குடும்பங்களுக்கு விலையில்லா கொசுவலையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீர்நிலைகள் ஓரம் வசிக்கும் பொதுமக்கள் கொசுக்கடி பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள 2 லட்சத்து 60 ஆயிரம் கொசு வலைகள் மாநகராட்சியிடம் கையிருப்பில் உள்ளன. சைதாப்பேட்டையில் 23 ஆயிரம் குடும்பங்களுக்கு கொசுவலை வழங்கப்படுகிறது.

    மழைக்கால நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க சிறப்பு முகாம்கள், காய்ச்சல் முகாம்கள் தமிழகம் முழுவதும் நடந்து வருகின்றன. 55 நாட்களில் 76 லட்சம் பேர் முகாம்கள் மூலம் பயன் அடைந்தனர். காய்ச்சல் முகாம் மூலம் ஒரு லட்சத்து 4 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதுவரையில் 48 ஆயிரம் முகாம்கள் நடந்துள்ளன.

    சென்னையை பொறுத்தவரை 3,362 முகாம்கள் நடத்தப்பட்டதில் 2.33 லட்சம் பேர் பரிசோதனை செய்துள்ளனர். டெங்கு, மலேரியா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

    டெங்கு காய்ச்சலால் ஜனவரி மாதம் முதல் இதுவரையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட குறைவாகும்.

    கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவர் தலைமறைவாக இருந்தால் காவல்துறை நடவடிக்கை எடுப்பார்கள்.

    மரண இறுதி அறிக்கை இன்னும் வரவில்லை. இந்த சம்பவம் கவனக்குறைவாக நடந்துள்ளது என்று நான் விளக்கமாக கூறி உள்ளேன்.

    ஆனால் சிலர் இதில் அரசியல் செய்கிறார்கள். குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து 150 பேர் உயிரிழந்தனர். அந்த பணியில் ஈடுபட்ட கட்டுமான நிறுவனம் கடவுள் விதி என்று கூறியுள்ளது. நாங்கள் அதுபோல கூறவில்லை. கவனக்குறைவாக நடந்ததாக ஒப்புக்கொண்டுள்ளோம்.

    தமிழகத்தில் 20 ஆயிரம் அரசு டாக்டர்கள் பணிபுரிகிறார்கள். அதில் ஒன்று இரண்டுபேரின் கவனக்குறைவு, அலட்சியத்தால் இதுபோன்ற சம்பவம் நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரியாவின் குடும்பத்தினர் தற்போது உறவினர் வீட்டில் வசித்து வரும் நிலையில், வீடு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • நிவாரணம் ரூ.10 லட்சம், மற்றும் ரூ.18 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலைக்கான ஆணை விரைந்து வழங்கப்படும்.

    சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார்- உஷாராணி தம்பதியின் மகள் பிரியா (வயது17). கால்பந்து வீராங்கனையான இவர் மூட்டு வலி சிகிச்சைக்காக பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்து கொண்டார்.

    அதன்பிறகும் கால் வலி அதிகரித்ததால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைப்பட்டதால் அறுவை சிகிச்சை மூலம் அவரது காலை அகற்றிவிட்டனர்.

    அதன்பிறகு அவரது உடல்நிலை படிப்படியாக மோசம் அடைந்து நேற்று பிரியா பரிதாபமாக இறந்து விட்டார்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாணவி பிரியாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும் அவரது சகோதரர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ள தாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி இருந்தார்.

    அதன்படி பிரியாவின் சகோதரர்கள் 3 பேரில் யாருக்கு அரசு வேலை தர வேண்டும் என்பதை அரவது குடும்பத்தார் முடிவு செய்து சொன்னால் அவருக்கு அரசு வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.

    பிரியாவின் சகோதரர்கள் 3 பேர் இருப்பதால் இதில் யாருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பதை பிரியாவின் பெற்றோர் இன்று முடிவு செய்து அரசுக்கு தகவல் தெரிவிக்க உள்ளனர்.

    அதன் அடிப்படையில் நிவாரணம் ரூ.10 லட்சம், மற்றும் ரூ.18 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலைக்கான ஆணை விரைந்து வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    இந்நிலையில், உயிரிழந்த மாணவி பிரியாவின் குடும்பத்திற்கு சொந்த வீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பிரியாவின் குடும்பத்தினர் தற்போது உறவினர் வீட்டில் வசித்து வரும் நிலையில், வீடு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரியாவின் தாய் அமைச்சர் சேகர் பாபுவிடம் வைத்த கோரிக்கையின் அடிப்பையில் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    மாணவி பிரியா குடும்பத்திற்கு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடு ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    இதையடுத்து, பிரியாவின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்குவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.
    • கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.10 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கொளத்தூர் அரசு மருத்துவமனையில் மூட்டு சவ்வு கிழிந்ததற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட கால்பந்து வீராங்கனையும், கல்லூரி மாணவியுமான பிரியா அடுத்தடுத்து ஏற்பட்ட உடல் நல பாதிப்பால் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது.

    பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்கப்பட வேண்டும். மருத்துவர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.10 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல. அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • டாக்டர்களின் கவனக்குறைவான சிகிச்சை ஒரு அப்பாவி மாணவியின் உயிரை பலி வாங்கி இருக்கிறது.
    • சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றிலும் தொற்று பரவியதால் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது.

    சென்னை:

    சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவிக்குமார்-உஷாராணி தம்பதி. இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் பிரியா (17) என்ற மகள் உள்ளனர். இவர்களில் பிரியா ராணிமேரி கல்லூரியில் விளையாட்டு துறையில் படித்து வந்தார். பிரியா மிகச்சிறந்த கால்பந்து வீராங்கனை. 6-ம் வகுப்பிலேயே பயிற்சி எடுத்து வந்த பிரியா மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் விளையாடி வந்தார்.

    கடந்த மாதம் 20-ந்தேதி பயிற்சியில் ஈடுபட்டிருந்த பிரியாவுக்கு வலது காலில் தசை பிடிப்பு போல் வலி ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்த பிரியாவை பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிறு அறுவை சிகிச்சை செய்துள்ளார்கள்.

    அறுவை சிகிச்சை முடிந்து காலில் கட்டு போட்டு இருக்கிறார்கள். அதன் பிறகும் வலி குறையாததால் 2 நாட்களுக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்கள்.

    அங்கு காலில் போடப்பட்டிருந்த கட்டுக்களை பிரித்து பார்த்த டாக்டர்கள் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டமும் தடைபட்டு தொற்றுக்கள் உருவாகி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து காலை துண்டிப்பதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டது. காலை துண்டித்தால் மட்டுமே தொற்றுக்கள் மேற்கொண்டு பரவாது என்று முடிவு செய்தனர். அதன்படி கால் மூட்டின் மேல் பகுதியில் இருந்து கால் துண்டித்து அகற்றப்பட்டது.

    அதை தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இருப்பினும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

    சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றிலும் தொற்று பரவியதால் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது.

    சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலையில் பிரியா பரிதாபமாக இறந்தார். அவர் இறந்ததை அறிந்ததும் பெற்றோர்களும், சகோதரர்களும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

    டாக்டர்களின் கவனக்குறைவான சிகிச்சை ஒரு அப்பாவி மாணவியின் உயிரை பலிவாங்கி இருக்கிறது.

    குறிப்பிட்ட ஆபரேசனை செய்ததும் கட்டு போட்டிருக்கக்கூடாது என்று கூறப்படுகிறது. ஆனால் மருத்துவர்கள் கவனக்குறைவால் மிகவும் இறுக்கமாக கட்டு போட்டுள்ளார்கள். இதனால் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் தடைபட்டுள்ளது.

    இதனால் கால் அழுகி தொற்று உருவாகி இருக்கிறது. இதுவே பிரியாவின் உயிரை பறித்து இருக்கிறது.

    மாணவி பிரியாவின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. தகவல் அறிந்ததும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்.

    அங்கு வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை பார்த்து கண்கலங்கினார். பின்னர் பெற்றோருக்கும் அவரது சகோதரர்களுக்கும் ஆறுதல் கூறினார்.

    ஏற்கனவே மாணவி பிரியாவை நேரில் பார்த்து தைரியம் சொல்லி பேட்டரியால் இயங்கும் செயற்கை காலுக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறி இருந்தார். இந்த நிலையில் பிரியாவின் இழப்பு மிகப்பெரிய துயரத்தை தருவதாக அவர் கூறினார்.

    • பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
    • திறனற்ற திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருப்பதாக அண்ணாமலை குற்றச்சாட்டு

    சென்னை:

    சென்னையில் தவறான சிகிச்சையால் காலை இழந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி பிரியா இன்று உயிரிழந்தார். கால்பந்து வீராங்கனையாகும் லட்சியத்துடன் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்த அவர் மரணம் அடைந்தது அவரது குடும்பத்தினரை கடும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

    மாணவி பிரியா மறைவு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன், பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பிரியாவின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    தவறான சிகிச்சை அளித்ததாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட மருத்துவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனர். தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    பிரியா மறைவு குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அறுவை சிகிச்சையின் போது அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை வழங்கியதால் கல்லூரி மாணவி, கால்பந்து வீராங்கனை சகோதரி பிரியா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த திறனற்ற திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் மருத்துவ துறையும் சேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது. தவறான சிகிச்சை வழங்கிய அரசு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

    திமுக அரசு, சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நஷ்ட ஈடாக இரண்டு கோடி ரூபாய் அவரது குடும்பத்தாருக்கு உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.

    ×