search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்பந்து மைதானம்"

    • விடுதி, உணவகம், டிஜிட்டல் வகுப்பறை, உடற்பயிற்சி மையம், மருத்துவமனை என சகல வசதிகளும் உள்ளன.
    • இயற்கை, செயற்கை மற்றும் ஹைபிரிட் என மூன்று கால்பந்து மைதானங்கள் உள்ளன.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி பகுதியில், இந்தியா மற்றும் ஆசிய கால்பந்தாட்ட கூட்டமைப்புகளின் தரநிலை பரிந்துரையின் கீழ் 23 ஏக்கர் நிலப்பரப்பில், இரவிலும் விளையாடும் வகையில் சர்வதேச தர கால்பந்து அகாடமியை "எப்.சி மெட்ராஸ்" என்ற நிறுவனம் துவங்கி உள்ளது.

    இதில் 130 பேர் தங்கி பயிற்சி பெறும் வகையில் விடுதி, உணவகம், டிஜிட்டல் வகுப்பறை, கருத்தரங்க கூடம், உடற்பயிற்சி மையம், மருத்துவமனை, கால்பந்து மைதானங்கள் உள்ளிட்ட சகல வசதிகளும் உள்ளன. இயற்கை, செயற்கை மற்றும் ஹைபிரிட் என மூன்று கால்பந்து மைதானங்கள் உள்ளன. இயற்கையான புல்வெளி மைதானமானது, வரையறுக்கப்பட்ட அளவிலான மைதானத்தைவிட 1.5 மடங்கு அதிகம். இது பயிற்சிக்காக பயன்படுத்தப்படும்.

    இங்கு கால்பந்து விளையாட்டு திறனும், ஆர்வமும் உடைய இளம் வீரர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. கிழக்காசியாவின் முதல் ஹைபிரிட் மைதானம் இதுவே என அகாடமியின் நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதம், இயக்குனர் தனஞ்செய் ஆகியோர் தெரிவித்தனர்.

    • மைதானத்திற்குள் ரசிகர்களில் சிலர் பட்டாசுகளை கொளுத்தி தூக்கிப் போட்டனர்.
    • இதனால் அங்கு ரசிகர்களிடையே வன்முறை உருவானது.

    அங்காரா:

    துருக்கி நாட்டில் உள்ள பர்சா நகரில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் உள்ளூர் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் குர்து இன மக்கள் அதிகம் வாழும் பகுதியைச் சேர்ந்த அணி பங்கேற்று விளையாடியது. அந்த அணிக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்த்தரப்பினர் கோஷங்களை எழுப்பினர்.

    தொடர்ந்து ரசிகர்களிடையே மோதல் வெடித்த நிலையில், மைதானத்திற்குள் சிலர் பட்டாசுகளைக் கொளுத்தி தூக்கிப் போட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களையும் மைதானத்திற்குள் வீசி எறிந்தனர். இதனால் அங்கு ரசிகர்களிடையே வன்முறை உருவானது.

    இதையடுத்து போலீசார் விரைந்து வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

    ×