search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்நடைகள் விற்பனை"

    • பெருந்துறை அடுத்த சீனாபுரத்தில் கால்நடை சந்தை கூடியது.
    • மொத்தம் ரூ.1 கோடிக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த சீனாபுரத்தில் கால்நடை சந்தை கூடியது. இதற்கு சேலம் மாவட்டம் முத்தநாயக்கன் பட்டி, தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம், நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம் ஆகிய ஊர்களில் இருந்து விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 80, இதேயின கிடாரிக் கன்றுகள் 100,

    சிந்து மற்றும் ஜெர்சி இனக் கறவை மாடுகள் 100, இதேயின கிடாரிக்கன்றுகள் 120 வந்திருந்தன. கடந்த வாரத்தை விட இந்த வாரம் வாரத்து கணசமாக குறைந்து காணப்பட்டது.

    விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.35 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையிலும், இதேயின கிடாரிக்கன்று ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையிலும் விலை போனது.

    சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடு ஒன்று ரூ.28ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையிலும். இதேயின கிடாரி கன்று ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

    கடந்த வாரத்தை விட மாடுகள் மற்றும் கன்றுகளின் விலை ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை குறைந்து காணப்பட்டது. மொத்தம் ரூ.1 கோடிக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • சீனாபுரத்தில் வழக்கம்போல கால்நடைச்சந்தை கூடியது.
    • விற்பனை ரூ.1 கோடியே 20 லட்சம் வரை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த சீனாபுரத்தில் வழக்கம்போல கால்நடைச்சந்தை கூடியது.

    இதற்கு சேலம் மாவட்டம் முத்தநாயக்கன்பட்டி, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம் ஆகிய ஊர்களில் இருந்து விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 100-ம், இதே இன கிடாரி கன்றுகள் 125-ம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

    இதேபோல் சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடுகள் 110-ம், இதே இன கிடாரி கன்றுகள் 150-ம் வந்திருந்தன. கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் கால்நடைகள் வரத்து அதிகரித்து இருந்தது.

    விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 வரையிலும்,

    சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையிலும் விலை போனது.

    சீனாபுரம் கால்நடை சந்தையில் கறவை மாடுகள் மற்றும் கிடாரி கன்றுகளின் விற்பனை ரூ.1 கோடியே 20 லட்சம் வரை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • சீனாபுரத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கால்டைகள் சந்தை கூடுகிறது.
    • மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள சீனாபுரத்தில் வாரந்தோறும் வெள்ளிக் கிழமை கால்டைகள் சந்தை கூடுகிறது. இதுபோல் நேற்று நடந்த சந்தைக்கு கடந்த வாரத்தை காட்டிலும் கால்நடைகளின் வரத்து அதிகமாக இருந்தது.

    குறிப்பாக சிந்து கறவை மாடுகளின் வரத்து அதிகமாக காணப்பட்டது. அதன் விலையும் சற்று உயர்ந்து விற்பனையானது.

    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், சேலம் மாவட்டம் முத்து நாயக்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம் மோர்பாளைம் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100 விர்ஜின் கலப்பின கறவை மாடுகளும், 120 கிடாரி கன்றுக்குட்டிகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன.

    இதோபோல் சிந்து மற்றும் ஜெர்சி இனத்தை சேர்ந்த 110 கறவை மாடுகளும், 150 கிடாரி கன்றுக்குட்டிகளும் விற்பனைக்கு வந்திருந்தன.

    இதில் விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.40 ஆயிரம் முதல், ரூ.50 ஆயிரம் வரையிலும் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும் விற்னையானது.

    முதல் தர சிந்து கறவை மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனை ஆனது. அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விலை போனது.

    சீனாபுரம் கால்நடை சந்தையில் கறவை மாடுகள் மற்றும் கிடாரி கன்றுக் குட்டிகள் என மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு விற்பனை யானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும் மாடுகளை வாங்கி சென்றனர்.

    • புஞ்சை புளியம்பட்டியில் வாரச்சந்தை புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் கூடுகிறது.
    • ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானதாக என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் வாரச்சந்தை புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் கூடுகிறது. இது தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாகும்.

    இந்த சந்தையில் கர்நாடகா மற்றும் கேரளா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி மாவட்டங்களான திருப்பூர், நாமக்கல், கரூர், தாராபுரம் மற்றும் புளியம்பட்டி சுற்று பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை விற்பதும் வாங்கி செல்வதும் வழக்கம்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களில் கூடிய மாட்டு சந்தையில் ஜெர்சி மாடுகள் ரூ.52 ஆயிரத்துக்கும், சிந்து இன மாடுகள் ரூ.42 ஆயிரத்துக்கும், எருமைகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்றது.

    இதில் நாட்டு மாடுகள் ரூ.57 ஆயிரத்துக்கும் மற்றும் வளர்ப்பு கன்றுகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது.

    அதேபோல் வெள்ளாடுகள் ரூ.15 ஆயிரம் முதல் மற்றும் செம்மறியாடுகள் ரூ.12ஆயிரம் வரையும் விற்றது.

    இதில் மொத்தம் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானதாக என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பொய்கையில் செவ்வாய்க்கிழமைதோறும் மாட்டுச்சந்தை நடைபெறும்
    • மாடுகள் அதிக அளவில் கொண்டுவரப்பட்டன

    வேலூர்:

    வேலூர் அடுத்த பொய்கை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் மாட்டுச்சந்தை நடைபெறும்.

    இந்த சந்தைக்கு உள்ளூர் மட் டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற் றும் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலம் வி.கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூர் என பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

    இதனால் சீசன் நேரங்களில் இந்த சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் வெளியூர்களில் இருந்து மாடுகள் வாங்கி செல்லவும், கொண்டு வரவும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த வாரத்தை விட இன்று ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாடுகள், இதர கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

    குறிப்பாக கறவை மாடுகள், ஜெர்சி கலப் பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் விற்பனைக்கு வந்தது. இதனால் கடந்த வாரம் ரூ.60 லட்சத்துக்கு குறைவாக வர்த்தகம் இருந்தது.

    இன்று ரூ.1 கோடிக்கு வியாபாரம் போனதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

    • புளுதியூரில் புதன்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது.
    • சந்தையில் மொத்தம் ரூ.42 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் புதன்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது.

    இந்த சந்தைக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் ஆடு, மாடு, கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    இதனிடையே நேற்று கூடிய சந்தைக்கு வெளிமாநில மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேந்த வியாபாரிகள் கால்நடைகள் வாங்க வந்தனர். அவர்கள் கால்நடைகளை போட்டி போட்டு வாங்கினர். சந்தையில் மொத்தம் ரூ.42 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி பகுதியில் வாரச்ச ந்தை புதன் மற்றும் வியாழ க்கிழமைகளில் கூடுகிறது.
    • மொத்தம் ரூ.70 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை யானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி பகுதியில் வாரச்ச ந்தை புதன் மற்றும் வியாழ க்கிழமைகளில் கூடுகிறது. இந்த சந்தை தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தை யாக திகழ்ந்து வருகிறது.

    இந்த சந்தைக்கு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களான திருப்பூர், நாமக்கல், கரூர், மற்றும் தாராபுரம், மேட்டுப்பா ளையம் மற்றும் புளியம்பட்டி சுற்றுப் பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராம ங்களில் இருந்தும் விவசாயி கள் கால்நடை களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.

    மேலும் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய வெளிமாநி லங்களில் இருந்தும் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியா பாரிகள் வந்து கால்நடை களை வாங்கி செல்கிறார்கள்.

    இந்நிலையில் இந்த வாரம் கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய 2 நாட்களில் கூடிய மாட்டு சந்தையில் ஜெர்சி இன மாடுகள் ரூ.45 ஆயிரம் வரையும், சிந்து இன மாடுகள் ரூ.48 ஆயிரம் வரையும் எருமை மாடுகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும் விற்பனையானது.

    இதில் நாட்டுமாடுகள் ரூ.65 ஆயிரம் வரையும் மற்றும் வளர்ப்பு கன்றுகள் ரூ. 5 ஆயிரம் முதல்ரூ.12 ஆயிரம் வரையும் விற்பனை யானது. மேலும் எடை க்கேற்ப வெள்ளாடு ரூ.7 ஆயிரம் வரையும், செம்மறி ஆடுகள் ரூ.6 ஆயிரம் வரையும் வியாபாரிகள் வாங்கி சென்றனர். இதில் மொத்தம் ரூ.70 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை யானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • நாட்டுமாடுகள் 45 ஆயிரம், வளர்ப்பு கன்றுகள் 5 ஆயிரம் வரை விற்பனையானது.
    • மொத்தம் கால்நடைகள் ரூ.1 கோடியே 10 லட்சத்திற்கு விற்பனை ஆனது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை புதன் மற்றும் வியாழன் அன்று கூடுவது வழக்கம். இது தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாகும்.

    இந்த சந்தையில் கர்நாடகா, கேரளா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களான திருப்பூர், நாமக்கல், கரூர், கோவை, நீலகிரி மற்றும் புளியம்பட்டி சுற்றுப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை விற்பதும், வாங்கி செல்வதும் வழக்கம்.

    இந்நிலையில் இந்த வாரம் கூடிய மாட்டுசந்தையில் ஜெர்சி 41 ஆயிரம், சிந்து 46 ஆயிரம், எருமை மாடுகள் 15 முதல் 33 ஆயிரம் வரை விற்றது.

    நாட்டுமாடுகள் 45 ஆயிரம், வளர்ப்பு கன்றுகள் 5 ஆயிரம் வரை விற்பனையானது. எடைக்கேற்ப வெள்ளாடு 7 ஆயிரம், செம்மறியாடு 6 ஆயிரம் வரை விற்றது.

    இதில் மொத்தம் கால்நடைகள் ரூ.1 கோடியே 10 லட்சத்திற்கு விற்பனை ஆனது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் 2 நாட்கள் கால்நடை சந்தை கூடியது.
    • சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் 2 நாட்கள் கால்நடை சந்தை கூடியது.

    அந்தியூர், அத்தாணி, வெள்ளித்திருப்பூர், பர்கூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து மாடுகளும், எருமை மாடுகளும் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.

    இதில் 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 41 ஆயிரம் ரூபாய் வரை மாடுகளும், 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 46 ஆயிரம் ரூபாய் வரை எருமை மாடுகளும் விற்பனை செய்யப்பட்டது.

    2 நாட்கள் கூடிய கால்நடை சந்தையில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டு வரப்பட்டு ரூ.1 கோடியே 40 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது என வியாபாரிகள் கூறினார்.

    • புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தைக்கு கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.
    • விற்பனை. ரூ.1 கோடியை எட்டியது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை புதன் மற்றும் வியாழக்கிழமை கூடுவது வழக்கம். இது தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாகும்.

    இந்த சந்தையில் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களான கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர் மற்றும் புளியம்பட்டி சுற்றுப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வந்து கால்நடைகளை விற்பதும், வாங்கி செல்வதும் வழக்கம்.

    இந்நிலையில் இந்த வாரம் கூடிய மாட்டுச்சந்தையில் ஜெர்சி மாடுகள், கலப்பின மாடுகள் மற்றும் ஆடு, கோழி, கன்றுகள் போன்ற கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.

    இதில் கால்நடைகளின் விற்பனை. ரூ.1 கோடியை எட்டியது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் கால்நடை சந்தை கூடியது.
    • ரூ.90 லட்சத்துக்கு வர்த்தகம் செய்யப்பட்டதாக கால்நடை வியாபாரிகள் கூறினர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் கால்நடை சந்தை கூடியது.

    ஈரோடு, அந்தியூர், பவானி, அம்மாபேட்டை, அத்தாணி, சென்னம்பட்டி, பர்கூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து மாடுகள், எருமை மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

    இதில் மாடுகள் 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 48 ஆயிரம் ரூபாய் வரையிலும், எருமை மாடுகள் 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 53 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

    சுமார் 2,500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டு வரப்பட்டு ரூ.90 லட்சத்துக்கு வர்த்தகம் செய்யப்பட்டதாக கால்நடை வியாபாரிகள் கூறினர்.

    • நேற்று நடந்த சந்தையில் சுமார் 650 மாடுகள், 750 ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.
    • ரூ.50 லட்சத்திற்கு ஆடுகளும், ரூ.30 லட்சத்திற்கு மாடுகளும் விற்பனையானது.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    நேற்று நடந்த சந்தையில் சுமார் 650 மாடுகள், 750 ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதில் ரூ.50 லட்சத்திற்கு ஆடுகளும், ரூ.30 லட்சத்திற்கு மாடுகளும் விற்பனையானது.

    ரூ.5 லட்சத்திற்கு நாட்டுக்கோழி விற்பனை நடந்தது. கடந்த வாரத்தை காட்டிலும் கால்நடை வரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையில் ரம்ஜான் பண்டிகை வருவதை முன்னி ட்டு ஆடுகள் விற்பனை அதிகரித்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×