என் மலர்
நீங்கள் தேடியது "Rs.75 lakhs"
- புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் புதன் மற்றும் வியாழன் கிழமை மாடு, ஆடு போன்ற கால்நடைகள் விற்பனையாவது வழக்கம்.
- கூடிய மாட்டுச்சந்தையில் கால்நடைகள் ரூ.75 லட்சத்திற்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் புதன் மற்றும் வியாழன் கிழமை மாடு, ஆடு போன்ற கால்நடைகள் விற்பனையாவது வழக்கம்.
இது தமிழ்நாட்டின் 2-வது பெரிய சந்தை ஆகும்.
இதில் திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று கூடிய மாட்டுச்சந்தையில் மாடு, ஆடு, கன்று போன்ற கால்நடைகள் ரூ.75 லட்சத்திற்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.






