ரூ.70 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தையில் மாடு, ஆடு போன்ற கால்நடைகள் விற்பனையாவது வழக்கம்.இன்று கூடிய மாட்டுச்சந்தையில் ரூ.70 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
ரூ.70 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை
Published on

பு.புளியம்பட்டி:

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தையில் புதன் மற்றும் வியாழக்கிழமை மாடு, ஆடு போன்ற கால்நடைகள் விற்பனையாவது வழக்கம்.

இது தமிழ்நாட்டின் 2-வது பெரிய சந்தை ஆகும். இங்கு திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்வது வழக்கம்.

இந்நிலையில் இன்று கூடிய மாட்டுச்சந்தையில் மாடு, ஆடு, கன்று, கோழி போன்ற கால்நடைகள் ரூ.70 லட்சத்திற்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com