என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரூர் புளுதியூரில் விற்பனைக்கு வந்துள்ள மாடுகளை படத்தில் காணலாம்.
புளுதியூர் வாரச்சந்தையில் ரூ.39 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை
- வெளிமாநில மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேந்த வியாபாரிகள், கால்டைகனை வாங்க வருகின்றனர்.
- ரூ.39 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் வாரந்தோறும் புதன்கிழமை கால்நடைகள் சந்தை நடைபெற்று வருகிறது.
தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள், எருமை மாடு, இறைச்சிக்கு மாடு நாட்டுக்கோழி மற்றும் சேவல் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
வெளிமாநில மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேந்த வியாபாரிகள், கால்டைகனை வாங்க வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் ஒரு மாடுகள் ரூ. 8,900 முதல் ரூ. 45,000 வரையும், ஆடுகள் விலை ரூ. 6,500 முதல் ரூ.13,800 வரையும், நேற்றைய சந்தயில் ரூ.39 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.






