search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் கார்த்திகேயன்"

    • கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் தங்குவதற்கும், தனியார் வாகனங்களில் கோவிலுக்கு செல்வதற்கும் வனத்துறை கடுமையான நிபந்தனைகள் விதித்தது.
    • திருவிழா முடியும் வரை வனத்துறையினர் இதில் தலையிடகூடாது என்று வாய்மொழியாக அறிவுறுத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது. வற்றாத ஜீவநதி என்று அழைக்கப்படும் தாமிரபரணி நதி இந்த கோவிலை தழுவி செல்கிறது. இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும்.

    சிறப்பு அதிகாரி நியமனம்

    இந்த விழாவுக்காக நெல்லை, தென்காசி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கண க்கானோர் ஒரு வாரத்துக்கு முன்பே கோவிலுக்கு வந்து குடில் அமைத்து தங்குவார்கள். ஆடி அமாவாசை தினத்தன்று அவர்கள் பொங்கலிட்டு வழிபடுவார்கள்.

    கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் அங்கு வந்து தங்குவதற்கும், தனியார் வாகனங்களில் கோவிலுக்கு செல்வதற்கும் வனத்துறை கடுமையான நிபந்தனைகள் விதித்து வந்ததால் ஒவ்வொரு ஆண்டும் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும், வனத்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி விட்டது.

    இந்த ஆண்டு பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அதிரடி நடவடிக்கை எடுத்து சிறப்பு அதிகாரியாக நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தியை நியமித்தார். மேலும் கோவில் திருவிழா முடியும் வரை வனத்துறையினர் இதில் தலையிட கூடாது என்றும் வாய்மொழியாக அறிவுறுத்தப்பட்டது.

    திருவிழா கோலாகலம்

    இந்நிலையில் இன்று காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் அமாவாசை திருவிழா நடைபெற்றது. இதற்காக அம்பை அகஸ்தியர் பட்டி யில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்களில் ஏறி பக்தர்கள் கோவிலுக்கு சென்றனர்.

    இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. கோவிலுக்கு செல்பவர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், மதுபாட்டில்கள் உள்ளிட்டவை எடுத்துச்செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. கோவில் முன்பு உள்ள பகுதியில் மட்டுமே குளிப்பதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட்ட னர். ஆழமான பகுதிக்கு சென்றுவிடாமல் இருப்பதை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

    இதற்கிடையே நெல்லையில் இருந்து பேட்டை, கல்லூர், முக்கூடல் வழியாக பாபநாசம் செல்லும் பஸ்கள் இன்று இயக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் கூறினர். ஆடி அமாவாசை யான இன்று ஏராளமான பக்தர்கள் பாபநாசம் செல்வதற்காக பஸ் நிலையத்தில் காத்துக் கிடந்தனர்.

    இந்த வழித்தடத்தில் வழக்கமாக செல்லும் பேருந்துகளும் இயக்கப்படாததால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் ஆடி திருவிழா ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய இயக்குனர் மாரிமுத்து, சிறப்பு அதிகாரி சிவ கிருஷ்ணமூர்த்தி, அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் ஆகியோர் அகஸ்தியர்பட்டி தற்காலிக பஸ் நிலையம், பாபநாசம் சோதனை சாவடி, சொரிமுத்தையனார் கோவில் ஆகிய இடங்களில் கூட்டாக ஆய்வு செய்தனர்.

    • கலெக்டர் கார்த்திகேயன் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
    • விழாவில் மொத்தம் 60 பயனாளிகளுக்கு ரூ.27.28 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டா டப்பட்டது.

    நெல்லை

    நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி காலை 9.05 மணிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் வண்ண பலூன்களை பறக்கவிட்டார்.

    தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வை யிட்டார். அப்போது நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உடன் சென்றார். பின்னர் போலீசார், தீயணைப்பு படையினர், ஊர்க்காவல் படையினர் அணிவகுப்பு மரியாதை நடந்தது. அதன்பின்னர் என்.சி.சி. மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

    நலத்திட்ட உதவிகள்

    இதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார். மாற்றுத்தி றனாளிகள் துறை, வேளாண்துறை உள்ளிட்ட 9 துறைகள் சார்பில் பயனாளி களுக்கு நலத்திட்டங்களை அவர் வழங்கினார். இலவச தையல் எந்திரம், தேய்ப்புபெட்டிகள், மரம் ஏறும் கருவி, மின்கல தெளிப்பான், மாற்றுத்தி றனாளி களுக்கான ஸ்கூட்டர், உதவித்தொகை என நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    இவ்வாறாக மொத்தம் 60 பயனாளிகளுக்கு ரூ.27.28 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து அம்பேத்கர் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆகி யோரின் பிறந்தநாளை யொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகைகளை வழங்கினார். மேலும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி யவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 257 பேருக்கு நற்சான்றிதழ்களை அவர் வழங்கினார்.

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்திக்கும் சிறப்பாக பணியாற்றியமைக்காக கலெக்டர் கார்த்திகேயன் சான்றிதழ் வழங்கினார். பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதனை பொதுமக்கள் கேலரியில் அமர்ந்து கண்டுகளித்தனர். இதில் வடக்கு செழியநல்லூர், சந்திப்பு மீனாட்சிபுரம், கல்லணை அரசு பள்ளிகள் மற்றும் 2 தனியார் பள்ளிகளை சேர்ந்த 950 மாணவிகள் நடனம் ஆடினர். சுமார் 90 மாணவிகள் உட ற்பயிற்சியில் ஈடுபட்டனர்.

    3 அடுக்கு பாதுகாப்பு

    விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்கு மார், உதவி கலெக்டர்கள் முகமது சபீர் ஆலம் (சேரன்மாதேவி), மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர்(பொறுப்பு) பிரவேஷ்குமார், போலீஸ் துணை கமிஷனர்கள் அனிதா, சரவணக்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சிகளை தமிழ் ஆசிரியர் கணபதி சுப்பிரமணியன், பழைய பேட்டை ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஜெயமேரி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அருளானந்தம் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். சுதந்திர தின விழாவை யொட்டி பாளை யங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    சுதந்திர தின விழாவையொட்டி நெல்லை மாநகர பகுதியில் உள்ள காந்தி, காமராஜர், வீர பாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகுமுத்துக்கோன் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நெல்லை மாவட்ட செய்தி-மக்கள் தொடர்புத்துறை சார்பில் பாளை நீதிமன்றம் எதிரே உள்ள சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன் மணிமண்டபம், டவுன் பொருட்காட்சி திடலில் உள்ள வ.உ.சிதம்பரனார் மணிமண்டபம் உள்ளிட்டவை வண்ண விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்டு ஜொலித்தன.


     


    இந்திய வரைபட தோற்றத்தில் அணிவகுத்து நின்ற மாணவ-மாணவிகள்.

    இந்திய வரைபட தோற்றத்தில் அணிவகுத்து நின்ற மாணவ-மாணவிகள்.

    • மகளிர் உரிமை தொகை பெற தகுதியானவர்களுக்கு விண்ணப்பம் மற்றும் டோக்கன் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
    • பதிவை தவறவிட்டவர்கள் மீண்டும் பதிவு செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1000 தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.

    அதனை நிறைவேற்றும் விதமாக வருகிற செப்டம்பர் 15-ந்தேதி முதல் மகளிருக்கு உரிமை தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

    528 சிறப்பு முகாம்கள்

    இதனையொட்டி கடந்த 20-ந்தேதி முதல் மாவட்டம் தோறும் மகளிர் உரிமை தொகை பெற தகுதியானவர்களுக்கு விண்ணப்பம் மற்றும் டோக்கன் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு விண்ணப்ப ங்களை பதிவு செய்ய மாவட்டந்தோறும் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்ப ட்டுள்ளது.

    அந்த வகையில் நெல்லை மாவட்டத்திலும் அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளையும் சேர்த்து 528 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு இன்று முதல் செயல்பட்டு வருகிறது.

    கலெக்டர் ஆய்வு

    பாளை யூனியன் முன்னீர் பள்ளம் பஞ்சாயத்து பகுதியில் மகளிருக்கான உரிமைத் தொகைக்கான விண்ணப்பத்தை பதிவு செய்யும் முகாம் அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை தொடங்கி வைத்துள்ளார்.

    நெல்லை மாவட்டத்தில் உரிமைத் தொகை விண்ண ப்பங்கள் பதிவு செய்யும் முகாம் அனைத்து கிராம ஊராட்சிக்குட்பட்ட 528 இடங்களில் நடைபெற்று வருகிறது.

    20-ந்தேதி முதல் நேற்று வரை 4 நாட்களில் கிராம ஊராட்சிகளில் 2, 00,119 விண்ணப்பங்கள் வழங்கப்ப ட்டுள்ளது. முதற்கட்ட சிறப்பு முகாம் கிராமப் பகுதிகளில் இன்று முதல் வருகிற 4-ந் தேதி வரை நடைபெறவுள்ளது.

    இன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் ஏற்க னவே வழங்கப்பட்டுள்ள டோக்கள் வரிசைப்படி 2 முறைகளில் விண்ணப் பங்கள் பதிவு செய்யப்பட்டு பெறப்படுகிறது. இணைய வசதி நன்றாக செயல்படும் பகுதிகளில் விண்ணப்பம் வாங்கப்பட்டு உடனுக்குடன் இணைய பதிவு மேற்கொள்ளப்பட்டு, கைரேகை பெறப்பட்டு குறுந்தகவல் மூலம் ஒப்புகை வழங்கப்படும். இணைய வசதி முழுமை யாக செயல்படாத பகுதி களில், நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டு பொது மக்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். இந்த விண்ணப்பங்கள் பின்னர் தாசில்தார் அலுவல கங்களில் பதிவேற்றம் செய்யப்படும்.

    கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மட்டும் பொதுமக்கள் வருகை தந்து தங்களது விண்ணப் பங்களை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அந்தந்த நாளில் பதிவை தவறவிட்டவர்கள் மீண்டும் பதிவு செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

    இவர் அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது பாளை தாசில்தார் சரவணன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை அன்று பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர்வு முகாம் நடத்தப்படுகிறது.
    • முகாமில் குடும்ப அட்டை சம்பந்தமான அனைத்து குறைகள் குறித்து மனு அளிக்கலாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சேவைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை அன்று அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர்வு முகாம் நடத்தப்படுகிறது.

    அதன்படி இந்த மாதத்திற்கான முகாம் நாளை (10-ந் தேதி ) நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம் மற்றும் புதிய அட்டை விண்ணப்பிப்பது உள்ளிட்ட குடும்ப அட்டை சம்பந்தமான அனைத்து குறைகள் குறித்து மனு அளிக்கலாம்.

    மேலும் மனு அளிக்க வருபவர்கள் குடும்ப அட்டை, ஆதார், பிறப்பு, இறப்பு சான்று, குடியிருப்பு சான்றிதழ் உள்ளிட்ட தேவையான அனைத்து சான்றிதழ்களையும் வைத்திருக்க வேண்டும்.

    முகாம், பொது விநியோக திட்ட செயல்பாடுகள் குறித்த புகார்களை நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 93424 71314 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்டத்தில் மீனவர்கள், மீனவ அமைப்புகள் கலந்து கொண்டு மனுக்களை நேரில் வழங்கலாம்.
    • கோரிக்கைகளை தனித்தனி மனுக்களாக வழங்கிட வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    ராதாபுரம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 11-ந் தேதி காலை மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.

    இதில் மீன்வளத்துறை மற்றும் இதர அரசுத்துறை களால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள் மற்றும் தே வைகள் அடங்கிய மனுக்களை மீனவர்கள், மீனவ அமை ப்புகள் கலந்து கொண்டு நேரில் வழங்கலாம்.

    மேலும் அரசுத்துறைகள் சார்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறை வாரி யாக தனித்தனி மனுக்களாக வழங்கிட வேண்டும். பெறப்படும் மனுக்களை சம்பந்தப்பட்ட பிற அரசுத்துறை அலுவலர் களுக்கு அனுப்பி நட வடிக்கை எடுக்கப்பட்டு அதன் விவரம் அடுத்த மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரி விக்கப்படும்.

    எனவே கோரிக்கைகள் உள்ள மீனவர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் கூட்ட த்தில் கலந்து கொண்டு மனுக்கள் அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×