search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்ப்பிணிப் பெண்"

    • கர்ப்பிணிப் பெண்களுக்கான சிகிச்சை அட்டையை கொண்டு வரவில்லை என்பதால் அப்பெண்ணுக்கு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
    • கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து, அலட்சியமாக செயல்பட்ட ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சாலையில் நடந்த பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளை பறிகொடுத்த பெண்ணுக்கு ₹4 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கர்ப்பிணிப் பெண்களுக்கான சிகிச்சை அட்டையை கொண்டு வரவில்லை என்பதால் அப்பெண்ணுக்கு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், வேறு வழியின்றி சாலையிலேயே இரட்டைக் குழந்தைகளை அவர் பிரசவிக்க, ஒரு குழந்தை அங்கேயே உயிரிழந்தது. மற்றொன்று மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தது.

    கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து, அலட்சியமாக செயல்பட்ட ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் குறைபாடுகளை களைய ஒரு உயர்மட்ட குழுவை நியமிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    • வடலூரில் கர்ப்பிணிப் பெண் திடீரென ஏற்பட்ட வயிற்றுவலியால் உயிர் இழந்தார்.
    • அவரது வயிற்றில் இருந்த சிசுவும் பரிதாபமாக இறந்ததாக டாக்டர்கள் கூறினர்.

    கடலூர்:

    வடலூர் அருகே அரங்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சனி (வயது 29) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜோதி என்பவருக்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தற்போது ரஞ்சனி 8 மாத கர்ப்பிணி ஆக இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரஞ்சனிக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. இந்த வயிற்று வலியால் அலறி துடித்தார். இதை வீட்டின் அருகில் உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு வடலூரில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ரஞ்சினியும் அவரது வயிற்றில் இருந்த சிசுவும் பரிதாபமாக இறந்ததாக டாக்டர்கள் கூறினர். இது குறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×