search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் தொடர்"

    • டெல்லி அணிக்கு ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்படுவார்.
    • ஐ.பி.எல். போட்டிக்கு ரிஷப் பண்ட் உடல் தகுதியுடன் இருப்பார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார்.

    இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் காயத்தில் இருந்து குணமடைந்தார். அதன்பின் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். தற்போது முழுமையாக குணம் அடைந்துள்ள ரிஷப் பண்ட் கிரிக்கெட் களத்துக்கு திரும்ப தயாராக உள்ளார்.

    அடுத்த மாதம் தொடங்க உள்ள ஐ.பி.எல். போட்டியில் அவர் விளையாட உள்ளார். டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரரான ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யமாட்டார் என்று டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக டெல்லி அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால் கூறியதாவது:-

    2024-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்கு ரிஷப்பண்ட் கேப்டனாக செயல்படுவார். ஆனால் முதல் 7 ஆட்டங்களில் விக்கெட் கீப்பிங் பணியை செய்யமாட்டார். அவர் தனது விக்கெட் கீப்பிங் பயிற்சிகளை தொடங்கியுள்ளார்.

    பேட்டிங் மற்றும் ஓட்ட பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஐ.பி.எல். போட்டிக்கு ரிஷப் பண்ட் உடல் தகுதியுடன் இருப்பார். முதல் போட்டியில் இருந்தே அவர் தலைமை தாங்குவார். ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே அவரது உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பொறுத்து மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவது பற்றி முடிவு செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
    • ஐபிஎல் தொடர் நடைபெறும் தேதி இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளது.

    இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்ததாக ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசனானது மார்ச் மாதம் இறுதியில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.

    இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி ஐபிஎல் 2024 தொடரில் இருந்து விலகி உள்ளார். இடது கணுக்கால் காயம் குணமடையாத காரணத்தால் அவர் விளையாட மாட்டார் என தெரிய வந்துள்ளது.

     

    இவர் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ளது.
    • ஐ.பி.எல். தொடரை கொண்டாடும் விதமாக இத்தனை ஆண்டுகளாக விளையாடிய வீரர்களை கொண்ட கனவு அணி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ளது.

    ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற ஐ.பி.எல். தொடரை கொண்டாடும் விதமாக இத்தனை ஆண்டுகளாக விளையாடிய வீரர்களை கொண்ட கனவு அணி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த அணியை தேர்ந்தெடுக்கும் குழுவில் முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரம், மேத்யூ ஹைடன், டாம் மூடி, டேல் ஸ்டெய்ன் ஆகியோர் இடம் பெற்றனர். அவர்களை தவிர்த்து கிட்டத்தட்ட 70 பத்திரிகையாளர்களும் இந்த அணியை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அனைத்து ஐ.பி.எல். போட்டிகளையும் அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்பட்ட இந்த அணிக்கு டோனி கேப்டனாக தேர்வாகி இருக்கிறார்.

    அனைத்து ஐ.பி.எல். போட்டியையும் சேர்த்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த 15 பேர் கொண்ட அணி வருமாறு:-

    டோனி (கேப்டன்), விராட் கோலி, கிறிஸ் கெய்ல், டேவிட் வார்னர், ரெய்னா, டிவில்லியர்ஸ், சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா,பொல்லார்டு, ரஷீத்கான், சுனில் நரைன், யசுவேந்திர சாஹல், மலிங்கா, பும்ரா.

    ×