search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஐடி மாணவர்கள்"

    • சைவம் சாப்பிடும் மாணவர்களுக்கு என தனியாக 6 மேஜைகள் ஒதுக்கப்பட்டது.
    • ஐ.ஐ.டி. நிர்வாகம் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

    மும்பை:

    மும்பையில் உள்ள பவாய் ஐ.ஐ.டி. விடுதியில் சமீபத்தில் சைவ மாணவர்கள் மட்டும் உட்கார வேண்டும் என ஒட்டப்பட்ட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியது. சர்ச்சையை அடுத்து அந்த போஸ்டர் கிழிக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த வாரம் ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள 3 விடுதிகளில் சைவம் சாப்பிடும் மாணவர்களுக்கு என தனியாக 6 மேஜைகள் ஒதுக்கப்பட்டது.

    இதை கண்டித்து மாணவர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஐ.ஐ.டி. நிர்வாகம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உள்ளது. இதுகுறித்து அம்பேத்கர் பெரியார் புலே வாசகர் வட்டம் எக்சில் வெளியிட்ட தகவலில்:- ஐ.ஐ.டி. பாம்பே அதன் உணவு பிரித்தாளும் கொள்கைக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உள்ளது என கூறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஐ.ஐ.டி. நிர்வாகம் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

    • ராக்கெட் ஏவப்படும் போது திட்டமிடப்பட்டவாறு செங்குத்தாக மேலே ஏறி அதன் சுற்றுவட்ட பாதையில் பயணிக்கும்.
    • பணிகளை இன்னும் சில நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    ஸ்ரீஹரிகோட்டா:

    சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களின் அக்னிகுல் ஸ்டார்ட் அப் நிறுவனம் 3டி பிரிண்டிங் முறையிலான 'அக்னிபான்' என்ற ராக்கெட்டை உருவாக்கியுள்ளது.

    இஸ்ரோ மூலம் பெரிய அளவிலான செயற்கை கோள்கள் அனுப்பி வரும் நிலையில் அக்னிபான் ராக்கெட் மூலம் 30 கிலோ முதல் 300 கிலோ வரையிலான சிறிய அளவிலான செயற்கைகோள்களையும் விண்ணில் ஏவ முடியும்.

    விண்ணில் 500 முதல் 700 கிலோ மீட்டர் தொலைவில் பூமியின் கீழ் புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தவும் முடியும். இதனால் குறைந்த செலவில் செயற்கைக்கோள்களை ஏவலாம். இதற்கான ராக்கெட் ஏவுதளம் (அக்னிகுல்) இஸ்ரோவில் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    இந்த ராக்கெட்டின் 2 பாகங்கள் தயார் செய்யப்பட்டு பரிசோதனைகள் முடிக்கப்பட்டது. இந்நிலையில் முதல் பாகம் 3டி பிரிண்டிங் முறையில் தயார் செய்யப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சென்னையை தளமாக கொண்ட ராக்கெட் ஸ்டார்ட் அப் அக்னி குல் காஸ்மோஸ் நிறுவனம், ஆந்திராவின் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள தனது ஏவு தளத்தில் அதன் தொழில்நுட்ப சோதனையின் ஒரு பகுதியாக ராக்கெட்டை ஒருங்கிணைக்கும் செயல் முறையை தொடங்கி உள்ளது.

    இது அக்னிலெட் எந்திரத்தால் இயக்கப்படும் சிங்கிள் ஸ்டேஜ் லான்ஜ் வாகனம் மற்றும் முற்றிலும் 3டி அச்சிடப்பட்ட, சிங்கிள் பீஸ், 6 கே.என். அறை- கிரையோ ஜெனிக் எந்திரம் ஆகும். இந்த ராக்கெட் ஏவப்படும் போது திட்டமிடப்பட்டவாறு செங்குத்தாக மேலே ஏறி அதன் சுற்றுவட்ட பாதையில் பயணிக்கும். இந்த பணிகளை இன்னும் சில நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் அக்னி பான் ராக்கெட் விரைவில் விண்ணில் ஏவப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    ×